இந்த நாட்டில் உடல் ஊனமுற்ற மாணவர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
அதுவும் கிராமத்தில் ஏழையாய் பிறந்த உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு ,அவனது பெற்றோரும் சமூகமும் அவனை ஒதுக்கி விடுகிறது.
அந்தச் சிறுவர் சிறுமிகளுக்கு தொடக்கக்கல்வி மட்டும் கிடைக்கிறது. அதற்குமேல் உயர்கல்வி பயில நகரத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால், கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் ஏழை விவசாயிகள் அவர்களைப் படிக்க வைக்க முடியாமல் அத்தோடு படிப்பை முடித்து விடுகின்றனர்.
இதனால் அவங்க பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துகிற வாழ்க்கை வாழ்வதை நாம் கிராமத்தில் ஏன் நகரத்தில் கூட காணலாம்.
அவர்களுக்குத்தான் எத்தனை தடைகள்...
மெயின் ரோட்டிலிருந்து விலகி பல நூறு மீட்டர் அவர்களுக்கு வீடு இருக்கும். அவர்கள் பள்ளி செல்ல, ரோட்டுக்கு வந்து பஸ் பிடித்து பள்ளிக்குச் சென்று பள்ளி கட்டிட வளாகத்தை நடக்க முடியாமல் நடந்து சென்று பல மாடிகளை கடந்து வகுப்பிற்கு சென்று கல்வி பயில வேண்டும்.
இதேபோன்றுதான் பள்ளி விட்டதும் வீடு திரும்ப மீண்டும் தடைகள். படிப்பு பருவம் முழுவதும் எவ்வளவு கஷ்டம்.
சரிங்க....
மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே baramati பகுதியைச் சேர்ந்த 16 வயது மயூரி. அவருக்கு ஒரு தம்பி இருக்கார். அவர் பெயர் நிகில்.
அவருக்கு 13 வயது ஆகிறது. அக்கா பத்தாம் வகுப்பு ம், தம்பி எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள்.
தம்பியும் நிகில் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் அடக்க முடியாது. அவரது தந்தை தான் டூவீலரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிடுவார்.
மாலையில் அவருடைய அப்பா திரும்பவந்து நிகிலை வீட்டுக்கு அழைத்துச் செல்வார். பலதடவை இது இயலாமல் போய்விடுகிறது.
இதனால் அவனால் பள்ளியில் இருந்து வீடு திரும்ப இயலவில்லை. பள்ளியிலேயே நீண்ட நேரமாகியும் இருக்கவேண்டிய நிலைமை.
இதனால் அவனது அக்காவுக்கு மிகுந்த கவலை. அவரும் தம்பியோடு பள்ளியிலேயே காத்திருக்க வேண்டி உள்ளது.
பலதடவை காலையிலேயே தந்தை வேலைக்கு சென்று விடுவதால் இவன் பள்ளி செல்ல இயலாமல் அன்று வீட்டிலேயே முடங்கி விடுகிறார்.
படிப்பில் இவன் மிக சுட்டியாக இருந்தும் தொடர்ந்து பள்ளி செல்ல இயலாததால் கல்வி பாதிக்கப்பட்டது.
இதனால் அவனுக்கு சகோதரி மயூரி, மிக்க மனக் கவலை கொண்டார். அவருக்கு ஒரு யோசனை!
இனி தானே தனது தம்பியை தான் பள்ளி செல்லும்போது தவறாமல் அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்தார்.
இதனால் தனது பள்ளி ஆசிரியைகளை கலந்து பேசி தனது சைக்கிளிலேயே அவனது வீல் சேரினை
இணைத்து தயார் செய்தார்.
இதில் தனது தம்பியை அமர வைத்து பள்ளிக்கு தினசரி அழைத்துச் சென்று வருகிறார்.
இந்த சகோதரின் செயலை பள்ளியும் அந்த ஊரும் பாராட்டுகிறது.
நாமும் இதுபோன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்வி தடையில்லாமல் கிடைக்க முழு முயற்சி செய்வோம்!
Please Amazon purchase below here click:
No comments:
Post a Comment