Friday, January 18, 2019

திருநெல்வேலி கலக வழக்கு! பாரதி மீதும் ராஜ துவேச வழக்கு?

Hi
 
   

 
பாரதிக்கு மிதவாதிகளின் போக்கினால் இந்த பாரதத்துக்கு விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை
சிறிதும் இல்லை!
         பாலகங்காதர திலகர், விபின் சந்திர பாலர் ஆகியோரது தீவிர தேசிய பக்தி பாரதியை ஈர்த்தது!
      பாரதி அவர்கள், விபின் சந்திரபாலர் சென்னை சுதேசி களிடையே பேசிட ,சென்னை மகாணத்தில் ஏற்பாடு செய்தார் . அவர் 1907 மே 1 ,2 ,3 ஆகிய தேதிகளில் பிபின் சந்திர பாலரை சொற்பொழிவு ஆற்ற வைத்தார்!
      விபின் சந்திரபாலர் சொற்பொழிவுகள் மெட்ராஸ் மெயில் சிறப்பு நிருபர் பெர்னாண்டோ மூலம் குறிப்பு எடுக்கப்பட்டுரகசிய போலீசார் மூலம் ஒப்படைக்கப்பட்டது!
      அதன்படி அவர் மீது இராஜ துவேசம் வழக்கு தொடரப்பட்டு கைது செய்யப்பட்டார்!
       இச்செயலை கண்டித்து பாரதி 1907 ஆம் ஆண்டு செப்டம்பர் பதினேழாம் நாள் சுதேசி பரிசாரிணி சபா சார்பாக ஊர்வலம் ஜார்ஜ் டவுனில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி மாபெரும் சுதேசி ஊர்வலம் நடத்தப்பட்டது.
       விபின் சந்திர பாலரை விடுவிக்கக் கோரியும் , பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக சுதேசி ஆதரித்து கோஷத்துடன் ஊர்வலம் நடந்தது!
       இதன்மூலம் பாரதியாரின் தீவிர போக்கினை பிரிட்டிஷ் அரசு உற்று நோக்கியும் , அதனை குறிப்பு எடுக்கவும் செய்தது.
        பாரதியின் தீவிர தேசிய சுதேசி பற்றினை கண்ட வங்காள சுதேசிகள், தங்கள் பிரதிநிதியாக "வங்காள ரகசிய சங்கம்" சந்திரகாந்த் சக்கரவர்த்தி என்பவரை சென்னைக்கு அனுப்பியது . அவர் , பாரதியை பாரதியார் வீட்டில் நான்கு நாட்கள் தங்கி பேசினார்!
        அவர் பல சுதேசி தலைவர்களையும் பாரதியுடன் சென்று சந்தித்து பேசினார் . அந்த பிரதிநிதி அவர்களிடம் பயங்கரவாத செயல் ஆதரவு கோரினார்.
        "பயங்கரவாதம் சென்னை சுதேசிகளுக்கு ஏற்றதல்ல! மற்றும் வெடிகுண்டு எறிதல் ,பிரிட்டிஷாரை கொல்லுதல் போன்ற கருத்துக்கள் பாரதிக்கு ஏற்புடையது அல்ல என்பதை சந்திரகாந்த் சக்கரவர்த்தியிடம் பாரதி தெரிவித்ததாக தீவிர தேச பற்றாளர் நீலகண்ட பிரம்மச்சாரி அவர்கள் வாக்குமூலம் மூலம் அறிய முடிகிறது.
        அந்த வங்க பிரதிநிதி,  வ உ சி அவர்களை தூத்துக்குடி சென்று சந்தித்தார்.
        வ உ சி யின் ஒட்டப்பிடாரத்தில் இருந்து , 20,000 மேற்பட்ட மக்களை திரட்டி , சென்னையில் போராட்டம் நடத்தி ரயில் தண்டவாளங்களை தகர்ப்பது , பிரிட்டிஷாரை கொல்வது , பிரிட்டிஷ் சென்னை மகாண அரசை விரட்டிட
வ உ சி ஏற்பாடு செய்ததாக நீலகண்ட பிரம்மச்சாரி வாக்குமூலம் மூலம் அறிய வருகிறது ! இது எந்த அளவுக்கு உண்மை என ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியாது!
       இந்த திட்டம்Mad Project என அழைக்கப்பட்டதாக தெரிகிறது!  இதற்கு பாரதி ஆதரவு கிட்டவில்லை என தெரிகிறது.
         1908 மார்ச் 9ஆம் தேதி சென்னை ஜார்ஜ் டவுனில் இருந்து தெற்கு கடற்கரை நோக்கி சுதேசி ஊர்வலம் பாரதி முன்னின்று நடத்தினார்.  அதற்கு ஆரம்பத்தில் போலீஸ் அனுமதித்தாலும்.... பிறகு ஊர்வலம் போகப்போக அதனை தடை செய்யப் போவதாக போலீஸ் மிரட்டியது!
         எனவே, பாரதி வெகுண்டு போலீஸ் ஆணையரை கண்டித்தும் , இளைஞர்களே...... பாரத தாயின் விடுதலைக்கு இப்போது உழைத்திடுங்கள் என்றார்.
       1908 மார்ச் 13ம் தேதி வ உ சி மற்றும் சுப்பிரமணிய சிவா பத்மநாப ஐயங்கார் மீது வழக்கு தொடர்ந்து கைது நடவடிக்கை தொடர உள்ளதை கண்டித்து திருநெல்வேலியில் முழு அடைப்பு நடத்தப்பட்டது.  கூட்டத்தை நோக்கி மாவட்ட ஆட்சியர் வின்ஞ் என்பார், சுடும்படி ஆணையிட்டது 4 சுதேசிகள் கொல்லப்பட்டனர்.
        மார்ச் 17 ல் மூவர் மீதும்crpc பிரிவு 196 கீழ் இராஜ துவேச வழக்கு தொடரப்பட்டது. அதன்படி வ உ சி அவர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும் , சுப்பிரமணிய சிவா அவர்களுக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் வழங்கப்பட்டது.
         இது"திருநெல்வேலி கலக வழக்கு" என இந்திய அளவில் சிறப்பு பெற்றது.
         1908 ஆண்டு மே மாதம் பத்தாம் நாள் சென்னை ஜன சங்கம் சார்பில்        வ உ சி கூட்டத்தில் துப்பாக்கிச் சூட்டினை கண்டித்தும் அதில் பாரதியார் கோபக் கனல் கொண்டு உரையாற்றினார்!
         "நமது இன்றைய நோக்கம் பிரிட்டிஷாரை வெளியேற்றுவது !அதற்காக நமது நடவடிக்கைகள் பயங்கரவாத தன்மையுடன் இருக்கும் என்பது இல்லை...... ஒற்றுமையுடன் போராடுவோம் " என பேசினார்
        பாரதி மீது நடவடிக்கைக்காக காத்திருந்த பிரிட்டிஷ் போலீசார், இராஜ துவேச வழக்கு தொடர தயாரானது . அவர் மீது நடவடிக்கை எடுக்க தாமத பட்டதால் பாரதி கைது செய்யப்படுவது தவிர்க்கப்பட்டது.
         இல்லையென்றால் பாரதி மீதும்   இராஜ துவேச வழக்கு போடப்பட்டு,  மிகப் பெரிய தண்டனையை அனுபவிக்க வேண்டி வந்திருக்கும்!
         போகப்போக, பாரதி சென்னை வாசத்தை விட்டு , புதுச்சேரி சென்றுவிட்டதால் பிரிட்டிஷாரின் கைது நடவடிக்கையில் சிக்காமல் கடைசிவரை தேச விடுதலைக்காக போராடினார்!
        ஆனால் விதிதான் அவரை நீண்ட நாள் விட்டு வைக்கவில்லை! அவரை யானை மட்டும் தாக்கவில்லை! கூட அவரை வறுமையும் தாக்கியது!
         அவருடைய இறப்பின் போது,  10 பேர் அளவாக இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டதாக இந்த தமிழக வரலாறுகள் கூறுவது மனசுக்கு மிக்க அழுகையை வரவழைக்கிறது!
          வந்தே மாதரம்! பெற்ற சுதந்திரத்தை பேணிக்காப்போம்!
          இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் இதனை லைக் செய்து நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் எங்களதுWhite Rose Trends Tamil Channel  ம் யூட்டியூபில் பாருங்கள் நன்றியுடன்WhiteRose Emperor முத்துகிருஷ்ணன்.


     
   



To shop ebook Amazon click below :-
Kindle Devices & eBooks

No comments:

Post a Comment