Friday, January 11, 2019

தமிழகத்தில் 9 ஆண்டாக செயல்பட்ட போலி மருத்துவ பல்கலைக்கழகம் சீல் வைப்பு

 போலி என்பது இரண்டெழுத்து தாங்க!             அத வச்சி ஜனங்கள் பண்ற கூத்து கேட்கவும் பார்க்கவும் முடியவில்லை!
          எதில் எதில் தான் போலி என்பது விவஸ்தையே இல்லாம போச்சு!
          முதலில் வணிகரீதியில் மக்கள் பயன்படுத்தும் பேணா, பவுடர் ,அழகு சாதன பொருட்களுக்கு , அதேபோல் தயாரித்து டூப்ளிகேட் விட்டார்கள்.
           அப்புறம் டூப்ளிகேட் பல்புகளும் வந்துச்சு! அது சீக்கிரம் பீஸ் போச்சு! நம்ம பாக்கெட்டிலிருந்து fees போச்சு! அதாவது காசு வேஸ்டா போச்சு!
            போலி மருந்துகள் புழக்கத்தில் வந்ததுச்சு! சில வருஷம் முன்பு தமிழகத்தில் போலி மருந்து கம்பெனிகளை பிடிச்சாங்க!
            அப்புறம் போலி மருத்துவர்கள் வந்தாங்க! எட்டாவது பன்னிரண்டாவது படிச்சவங்க டாக்டரா வந்தாங்க! போலீசாரும் புடிச்சு ஜெயில்ல போட்டாங்க!
            அதுக்கு மேல நம்ம குடிமகன்களுக்கு போலி சரக்குகள் வந்துச்சு! அதையும் மக்கள் குடிச்சாங்க! போலீஸ் கண்டுபிடித்து பிடிச்சாங்க!
            சென்ற மாதம் பெரம்பலூரில் போலி மதுபான தொழிற்சாலை நடந்து வந்ததை கண்டு பிடித்து சீல் வைத்தார்கள்!
            இப்போ உச்சகட்டமாக போலி மருத்துவ பல்கலைக்கழகம் ஒன்று செயல்பட்டதை கண்டுபிடிச்சி சீல் வைத்திருக்காங்க!
            நாகை மாவட்டம் குத்தாலம் எடுத்த திருவேள்விக்குடி கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர், குத்தாலத்தில் அகில உலக திறந்தவெளி மாற்றுமுறை பல்கலைக்கழகத்தை 9 ஆண்டுகளாக நடத்தி வந்திருக்கிறார்.
            இதில்  படித்து முடித்தவர்களுக்கு ஆயுர்வேதா சித்தா படிப்பு சான்றிதழ் கொடுத்துள்ளார்.
             இதிலே படித்து ஆயிரக்கணக்கானோர் மாற்றுமுறை மருத்துவர்கள் ஆக மருத்துவமனை நடத்தி வருகிறார்கள்!
             இந்நிலையில் அந்த செல்வராஜ் என்பவர் நியூ அட்மிஷன் குறித்து விளம்பரம் கொடுத்திருந்தார்!
              அது சுகாதாரத்துறை காதுக்கு போயிடுச்சு!
               சென்னையிலிருந்து துணை போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் ஒரு டீம் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு வந்து ஆய்வு செய்ததில் அது போலி பல்கலைக்கழகம் என தெரிந்தது.

               அங்கு இருந்த போலி சான்றிதழ்களை பறிமுதல் செஞ்சிருக்காங்க! அதன்பின்னர் குத்தாலம் தாசில்தார் முன்னிலையில் போலி பல்கலைக்கழகத்தை சீல் வைத்து இருக்கிறார்கள்?
               அதன் பின்னர் போலி மருத்துவ பல்கலைக்கழகம் நடத்தி வந்த செல்வராஜை அழைத்து விசாரிக்க முற்பட்டபோது அவர் ஆஜராகவில்லை.
                நாம் டூவீலர் சாவி தொலைந்து போனால் நாம கேட்பது கடையில டூப்ளிகேட் சாவி மட்டும் தாங்க!
                 போலி மருத்துவ பல்கலைக்கழக மாதிரி டூப்ளிகேட் நமக்கு வேண்டாங்க!
           

No comments:

Post a Comment