Sunday, January 13, 2019

நாளை மாசு இல்லாத போகிப் பண்டிகை!

 அனைவருக்கும் white rose emperor சார்பாக முதல் வணக்கம்!
     நாளைக்கு போகிப் பண்டிகை கொண்டாடப் போகிறோம்! அனைவருக்கும் வாழ்த்துக்கள்!
    நாளை போகி பண்டிகையை மாசு இல்லாமல் கொண்டாட முழு முயற்சி செய்வோம்!
   காலங்காலமாக செய்யும் தவறுகள் படி பழையதை போட்டு எரிக்க வேண்டாம்! டயர் எரிப்பது போன்ற கெட்ட பழக்கம் வேண்டாம்!
       நமது போகிப் பண்டிகை தமிழர்களால் பல்லாயிரம் ஆண்டுகளாக கொண்டாடப்படுகிறது !அப்போது இந்த டயர் எங்கே வந்தது ?பிளாஸ்டிக் எங்கே வந்தது ?இடையில் வந்த கெட்ட பழக்கம் தான் , அது வேண்டாமே!
      பழைய காலத்தில் நமது விவசாயிகள் அறுவடைக்குப் பின் தழை,  செடிகளை நிலத்திற்கு உரமாக பயன்படும் என்று எரித்தார்கள்! அது நிலத்திற்கு உரமாக பயன்பட்டது!
      அதனால் அடுத்த நடவுக்கு விளைச்சல் அதிகமாயிடுச்சு!
     அப்போது இவ்வளவு ஜனங்கள் இல்லை! நாட்டில் காற்றில் மாசு இல்லை !அது சமநிலையாகபோச்சு ! இப்ப அப்படி இல்லை!
     எங்கு பார்த்தாலும் வாகன புகைகள்! தொழிற்சாலைகள் வெளியிடும் புகை ! இது நமக்கு காற்றில் கார்பன் டை ஆக்சைடு அளவு அதிகமாக உள்ளது!
      ஆக்சிஜன் அளவு குறைவாக உள்ளது! ஓசோன் படலம் ஓட்டை ஆகிவிட்டது!
       நாள் நமது தலைநகர் டெல்லியை பார்த்தீர்களா?
        காற்றில் மாசு அதிகமாகி மக்கள் நடமாடவே முடியல! முகத்தில் முகமூடி மாஸ்க் அணிந்து வெளியே மற்றும் அலுவலகம் பயணிக்கின்றனர்!
      அங்கு நிலைமை நமக்கு வேண்டாமே!
        நாளை போகிப் பண்டிகைக்கு பழையவற்றை எறியாமல் குப்பை தொட்டியில் தூக்கி போடலாமே!
        இதனால் வீடும் சுத்தமாகும்! காற்று மாசுபடாது!
         தமிழகத்திலும் டெல்லி நிலைமை என்றுமே வராது!
         படித்த இளைஞர்கள் படிக்காதவர்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்! கிராம இளைஞர்கள் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும்!
       நகரவாசிகள், நண்பர்களுக்கு எடுத்துச் சொல்லலாம் ! whatsapp ட்விட்டர் மூலமும் அனைவருக்கும் தகவலைப் பகிரலாம் !
        இந்த தகவல் அப்படியே அனைவருக்கும் பரவும்!
      போலீசாரும் நகராட்சி நிர்வாகமும் இதனை கவனமாக கண்காணிக்க வேண்டும்! நகராட்சி நிர்வாகம் , தனது வாகனங்கள் மூலம் பொது மக்களுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்கலாம்!
        நானும் இந்த தகவலை பிளாக்கர் டுவிட்டர் மூலம் எடுத்துச் சொல்லி விட்டேன்!
        நீங்களும் செய்வீர்கள்!
        ஏனென்றால் நமது தமிழர்கள் உலகத்துக்கு முற்பட்ட நாகரீக வாழ்க்கை வாழ்ந்தவர்கள் என்பதை நமது அகழாய்வுகள் நிரூபிக்கின்றன!
         அனைவ‌ருக்கும் வாழ்த்துக்கள்!
          அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது உங்கள்   white rose emperor. நன்றி!
       

No comments:

Post a Comment