Thursday, January 17, 2019

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு 2019

     
சென்ற வருடம் மெரினாவில் அலைகடலென திரண்டு போராடி பெற்ற தமிழரின் சுதந்திரம் ஜல்லிக்கட்டு ஆகும்!
      அது வெற்றிகரமாக இந்த வருடமும் தொடர்கிறது! இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது!
       வழக்கமான உற்சாகத்துடன் ஜல்லிக்கட்டு நடைபெற்றது .இதில் 729 காளைகள் , 714 இளம் காளை வீரர்கள் கலந்து கொண்டனர்.  இதில் அமைச்சர்களின்  மாடுகளும் , இலங்கை அமைச்சரின் மாடும் கலந்து கொண்டது.
       சில மாடுகள் பிடிபட்டன !சில   மாடுகள் னதப்பி ஓடின! இதில் 8 சுற்றுகள் நடைபெற்றன . இறுதியில் இறுதிச்சுற்று நடைபெற்றது!
      இதில் அதிக காளைகளை பிடித்தவருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிடிபடாத காளைகளின் உரிமையாளருக்கு ஒரு  காரும் பரிசு வழங்கப்பட்டது!
       காளைகள் குத்தி 40 பேர் காயமடைந்தனர்!
     
இறுதி சுற்றில் 15 காளைகளை அடக்கிய ரஞ்சித்குமார் என்பவருக்கு கார் பரிசு கிடைத்தது அதேபோல பாலமேட்டில் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெற்ற  கார்த்திக் மற்றும் அஜய் என்பவர்களும் அதே இடத்தை தக்கவைத்துக் கொண்டனர் !
      இன்று வர்ணனை செய்பவர்கள் வர்ணனை மனதைக் கவர்ந்தது . கீழே அவர்களின் வர்ணனையை அப்படியே இதனை வெளியிடுகிறேன்!
       புடிச்சு பாரு !தொட்டுப் பாரு!
       ஆஹா ! புதுக்கோட்டை விடாதீர்கள் பரிசினை புதுக்கோட்டைக்கே விடாதீங்க!
     
அமைச்சர் விஜயபாஸ்கர் மாடுப்பா!
        செவலக்கருப்பன் மாடுபிடிபடலே!
       நேருவின் காளைப்பா!
        இலங்கை அமைச்சர் செந்தில் தொண்டமான் மாடு! ஏசி கேரவன்னில் வந்து கலந்து கொண்டது. அந்த காளை வீரர் ஒருவரது ஆடையை கிழித்து தப்பி ஓடியது!
         டவுசரை கழட்டி போட்டுச்சடா!
         கிங்மேக்கர் academy வழங்கும் ஸ்டீல் கட்டில். 
          புதுக்கோட்டை திருக் கோட்டை சதாம் மாடு..... மாடுபிடிபடவில்லை!
          எஸ்கே மாடு....... மாடு பிடிபடவில்லை... மாட்டுக்காரு பரிசு வாங்கிட்டு போப்பா!
          திருச்சி கல்லுக்குழி ஆனந்தன் மாடு..... மாடு பிடிபடவில்லை!
          யாரும் தொடலப்பா! அதுபாட்டுக்கு போயிட்டு இருக்கு!
          தபால் தந்தி நகர் அசோக் மாடு தபால் தந்தி நகர் மாடு வர மாட்டேங்குது...... மாடு பிடிபடவில்லை!
          வெள்ளூர் மாடு செல்வம் மாடு..... மாடு பிடிபட்டது விடுங்கப்பா!
          சிவகங்கை மல்லகோட்டை மாடு.... தப்பிச்சி மாட்டுக்காரர் பரிசு வாங்கிட்டு போப்பா!
          சிவகங்கை தேனி முத்துமாரியம்மன் மாடு.... அருமையான மாடுப்பா!.... மாடு பிடிபடவில்லை!
         அய்யனார் சாமி மாடு .......மாடு பிடிபட்டது!
          ராஜ்ஹால் வழங்கும் பட்டுப்புடவை!
          எஸ் ஆலமரம் கார்த்திக் மாடு! மாடு பிடிபட்டது! அருமையான பிடிப்பா!
          பிடிச்சுக்க பித்தளை அண்டா!
          அமைச்சர் சார்பாக சைக்கிள் ஒன்று!
          தென்காசி ஏ சி டி எஸ் வழங்கும் பித்தளை பானை!
           குலமங்கலம் பாண்டி மாடு..... மாடுபிடி விடவில்லை!
           சத்திரப்பட்டி சதாசிவம் மாடு மாடுபிடிபடலே!
            ஆலங்குளம் குமார் பிரதர்ஸ் மாடு..... மாடுபிடி பிடிச்சு!
         
 மின்னல் ராபர்ட் மாடு...... மாடு பிடிபடவில்லை மாட்டுக்காரர் prize வாங்கிட்டு  போங்க!
              ஆறாவது தகுதிச்சுற்றில் 518,521,535,572,516,551,519,570,01,529,503,517,532,570,528,531 உள்பட 19 பேர் இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றனர்.
               மொத்தம் எட்டு சுற்று நடைபெற்றது!
               இறுதிச்சுற்றில் 15 மாடுகளை அடக்கிய ரஞ்சித்குமார் கார் பரிசு பெற்றார் இரண்டாவது இடம் கார்த்திக், மூன்றாவது இடம் அஜய் பெற்றனர்.
            இப்படி சந்தோஷமாக நம்ம தமிழகம் இருக்கணும்!
            தமிழ் கலாச்சாரம் வளரணும்!
            தமிழர் குணம் உலகம் முழுக்க பரவணும்.
            அடுத்த தகவலுடன் உங்களை சந்திக்கும் வரை உங்களுடன் விடை பெறுவது white rose emperor!

         
     

       
     
         

No comments:

Post a Comment