Thursday, January 24, 2019

ஜீவ சமாதி jivasamathi siddharkal


பார்வையாளர்கள் அனைவருக்கும்  white rose Emperor சார்பாக முதல் வணக்கம்.
       இன்றைக்கு ஜீவ சமாதி அடைந்த சித்தர்களை பற்றி காண்போம்....
        ஜீவசமாதி அடைபவர்கள் இல்லற வாழ்வை துறந்து கடவுள் மேல் பக்தி கொண்டு சித்தராக வாழ்ந்தவர்கள்!
        அவர்கள் , கடவுளுக்கும் பக்தர்களுக்கும் பலவகையில் சேவை செய்து கொண்டு வாழ்ந்தவர்கள்...
         இவர்கள் பக்தியோடு வைத்திய சேவை பொதுமக்களுக்கு செய்து வாழ்ந்துள்ளனர். அவ்வாறு பணி செய்தவர்கள் இனி பூவுலகில் பூதவுடலை தாங்கி இருப்பதை வெறுத்து கடவுளிடம் ஐக்கியமாகிவிட முடிவு செய்து விடுவார்கள்.
        இவர்கள் தானாகவோ தனது சிஷ்யர்கள் மூலமாகவோ உயிரோடு இருக்கும்போதே சமாதி நிலை தயார் செய்து விடுவர். ஒரு குறிப்பிட்ட நாளில் பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் அறிவித்துவிட்டு சமாதி உள்ளே உயிரோடு இறங்கி தியானத்தில் அமர்வது வழக்கம். அதன் பிறகு அந்த சமாதி சீடர்களால் உயிரோடு தியான நிலையில் இருக்கும்போதே மூடப்பட்டுவிடும் . அந்த முனிவர்கள் தியான நிலையிலேயே கடவுளோடு ஐக்கியமாகி விடுவர்.
            இவ்வாறு ஜீவசமாதி உள்ள இடத்தில் அனைத்து நல்ல சக்திகளும் சுழன்றுகொண்டே காலம் காலத்திற்கு இருக்கும். நாம் அந்த இடத்தை அடையும் போது நம் மனதில் இதனை உணரலாம்....
            பழங்காலத்தில் அரசர்கள் குறிப்பிட்ட அரசு ஆட்சிக்கு பிறகு தனது ஆட்சியை தனது மகன் அல்லது சரியான நபரிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறப்பதும் உண்டு. இதுவும் ஒரு ஜீவ சமாதி நிலையே.
            சரி ஜீவசமாதிகள் உள்ள இடங்கள் சிலவற்றை பார்ப்போம்....
       
  மதுரை மாவட்டம் அழகர்கோயில்  மலைமேல் மலைமீது ஏறிச் சென்றால் பகவான் இராமதேவர் சித்தர் ஜீவசமாதி உள்ளது. பழமுதிர்ச்சோலை அடுத்து ராக்காயி தீர்த்தத்திற்கு அடுத்து இரண்டு கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் சென்றால் இவருடைய ஜீவசமாதியை தரிசிக்கலாம்.
           அழகர்கோயில் செல்பவர்கள் முடிந்தால் தவறாமல் சென்று தரிசனம் செய்யுங்கள்....
           கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளின் ஜீவசமாதி உள்ளது. அவர் ஒரு அறையின் உள்ளே சென்று ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது....
          இவர் , வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வாசகம் காலத்தால் அழியாதது.
          பழனி முருகன் கோயில் உள்ளே போகரின் ஜீவசமாதி உள்ளது....
       
மகான் ஸ்ரீ உறி கட்டி சுவாமிகளின் ஜீவ சமாதி கும்பகோணம்to மயிலாடுதுறை சாலையில் குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம் எனுமிடத்தில் உள்ளது.
         

  திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டிய ஐந்து பேரில் மூன்று பேரின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவில் எதிரே உள்ளது. அந்த வமூர் ஆறுமுக சுவாமிகள், காசி சுவாமிகள் ,மௌன சுவாமிகள் இவர்களின் சமாதி உள்ளது. நான்காவது சித்தரின் ஜீவ சமாதி கோயிலில் தெற்கே உள்ளது. ஐந்தாவது சித்தர் தவத்திரு தேசிய மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி  திருச்செந்தூர் to திருநெல்வேலி சாலையில் ஆழ்வார்தோப்பு எனும் ஊரில் ஆற்றங்கரையில் உள்ளது.
     
   சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி திருச்சிto சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இவரின் ஜீவசமாதி உள்ளது. இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் தான் நமது தலையெழுத்தை மாற்றி எழுதும் கோயிலாகும்.
       
இதேபோல பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி ஒட்டிய சாலை வழியாக அரை கிலோ மீட்டர் தூரத்தில் பிளாட்டுகள் குடியிருப்புகள் அருகே ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இவர் வைத்தியம் செய்து சித்தராக வாழ்ந்தவர். அருகிலுள்ள பிரம்மரிஷி மலையில் சென்று தியானம் மேற்கொண்டு சித்தராக வாழ்ந்தவர். இவரின் ஜீவசமாதியை நடை பயணமாக சென்று தரிசிக்கலாம்.

         இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்... எங்களதுwhite Rose Trends  யூடியூப் சேனலில் முன்பு கூறிய கொள்ளு குழம்பு ரெசிபிupload செய்யப்பட்டுள்ளது. இதன்படி சமைத்து எங்களுக்கு கமெண்ட் செய்யுங்கள்...
     மீண்டும் உங்களை சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.


         
         
      


White Rose Trends
You tube channel
கொள்ளு குழம்பு செய்வது எப்படி?

No comments:

Post a Comment