பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்...
இன்று நாட்டில் பல சுவராசிய விஷயங்கள் அரங்கேறியுள்ளன.
அவற்றில் ஒன்று:
பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்படுகிறது.
இது அரசியல் சாசன 124வது திருத்த மசோதா நாடாளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
அதன்படி, எஸ் சி, எஸ் டி மற்றும் சமூக நீதியிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சலுகை பெறாதவர்கள், ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருக்கிறபோது பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகையை பெற கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்:
5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட சதுரஅடி கொண்ட வீடு, 300 சதுரடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட வீட்டுமனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடி அதற்கு மேலும் வீட்டுமனை உள்ளவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற இயலாது என தெரிவித்துள்ளது.
இரண்டாவது:
"டிக் டேக் ஆ ப்" வெச்சது இரண்டு பேருக்கு "ஆப்பு".
சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் சிவலிங்கம் அவர்கள் ஆவார். இவர் இந்த போலீஸ் நிலைய ஜீப்பினை பேட்டரிக்கு சார்ஜ் செய்ய ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஒர்க்க்ஷாப்பில் விட்டுள்ளார்.
இவர் ஜீப்பினை விட்டுவிட்டு அருகிலுள்ள டீக்கடைக்கு தேநீர் அருந்த சென்றுள்ளார்....
அந்த ஒர்க்க்ஷாப்பில் வேலை செய்து வரும் சபரி என்பவருக்கு வந்தது "ஹீரோ "என்ற நினைப்பு. இங்குதான் இவருக்கும் இவரது நண்பருக்கும் இவர்களே வச்சிக்கிறாங்க "ஆப்பு".
இந்த சபரி சாமி விக்ரம் ஸ்டைலில் ஜீப் மீது போஸ் கொடுக்க, அதனை அவரது நண்பர் சந்தோஷ் என்பவர் செல்போனில் பதிவிட்டு ஸ்டைலான வாசகத்துடன் அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோ பரவ ஆரம்பித்ததும் ஆத்தூர் போலீஸ் காதுக்கு சென்றது...
இப்போ நண்பர்கள் இரண்டு பேரும் பேட்டரிக்கு சார்ஜ் செய்யும் மறந்து போலீசின் சார்ஜ் ஷீட் பெற்று கைது செய்யப்பட்டுள்ளனர் . tic tac app இப்போ இவர்களுக்கு வச்சது பெரிய ஆப்பு!
மூன்றாவது:
இதுதாங்க இன்றைய ஹைலைட்டான விஷயம்!
மத்திய அரசின் ட்ராய் பிறப்பித்த உத்தரவின்படி 150 சேனல்களை பெறுவதற்கு ரூ 600 ரூ வசூலிக்கப்படுவதை எதிர்த்து தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர் பொது நலச்சங்கம் நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தியது.
இதனால் நமது இல்லத்தரசிகள் தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்க்கமுடியாமல் திணறி விட்டார்கள்.... சிலர் பக்கத்தில் உள்ளDTH இனிப்பு உள்ள டிவியில் பார்த்து சமாளித்து விட்டனர். பலர் தான் நேற்று டிவி தொடரை பார்க்கமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர் .
ஒரு நல்ல செய்தி:
காஷ்மீரை சேர்ந்த நமது ராணுவ வீரர் நசீர் அகமது அவர்கள் நவம்பர் 25இல் சோபியானில் ஆறு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையில் பங்குகொண்டு 2 பயங்கரவாதிகளை கொன்று விட்டு வீரமரணம் அடைந்தார்.... இவர் பயங்கரவாதியாக இருந்து மனம் மாறி நாட்டுக்கு சேவை செய்த ராணுவ வீரர்.
இவருக்கு தாங்க, நாளை(ஜனவரி26) அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது. இவருடைய வீரத்தை போற்றுவோம்...
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.....
எங்களது white rose trends தமிழ் சேனலினை யூட்யூபில் கண்டுகளியுங்கள்.
Breaking News:
தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், பங்காரு அடிகளார், சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், மருத்துவர் ஆர் வி ரமணி மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.... என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க... அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.
Click here to shop cosmetics low cost👍:-
Amazon
No comments:
Post a Comment