Tuesday, January 29, 2019

வங்கி லாக்கர் நமது செல்வத்தை பாதுகாக்குமா?

         
!       பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor முதல் வணக்கம்.
        நாடு முழுவதும் குறிப்பாக நமது தமிழகத்தில் ஏடிஎம் சென்டர்களை குறிவைத்தும், வங்கிகளை குறி வைக்கும் திருட்டு நடைபெற்று வருகிறது.
          அந்தத் திருட்டுக்கு கேஸ் வெல்டர் பயன்படுத்தி ஏடிஎம் மையங்கள், வங்கியின் உள்ளே லாக்கரை உடைத்து சர்வ சாதாரணமாக திருடுகின்றனர்.
      நேற்று திருச்சி சமயபுரம் சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஒரு ஷெட்யூல்ட் அரசு வங்கியில் பக்கவாட்டில் சுவரினை கடப்பாரை கொண்டு துளையிட்டு வங்கி உள்ளே நுழைந்து கேஸ் வெல்டர் கொண்டு லாக்கரை துளையிட்டு பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.
        இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
        இது வங்கிகளின் இரவுக்காவல் குறைபாடுடன் உள்ளதை காட்டுகிறது.
         ஏன் இந்த குறைபாடு?

          வங்கிப் பணியாளர்கள் குறைவு ஏற்படாமல் நியமித்து பணி நேரத்தில் பணி தொய்வு ஏற்படாமல் வங்கி நிர்வாகம் பார்த்துக் கொள்கிறது.
           ஆனால் வங்கி பூட்டப்பட்ட பின்பு இரவு பாதுகாப்பு காவலர் நியமிக்கப்படாமல் உள்ளது. இது வீட்டைக் கட்டி பூட்டு போடாமல் விட்டதற்கு சமமாகும்.
          வீட்டில் நகையை வைத்து சென்றால் திருடர்கள் பகலிலும் இரவிலும் சரி வீட்டு கதவை உடைத்து எடுத்து சென்று விடுகின்றனர்... இதனால் வங்கி லாக்கரில் வைத்தால் திருட்டுப் போகாது என்று வங்கி லாக்கரை கேட்டு வாங்கி தனது நகை பணம் தாஜ்வேஷ்களை பாதுகாப்பாக வைக்கின்றனர்.
        அதற்கும் இப்பொழுது உத்தரவாதம் இல்லை....
         அப்போ இதை எங்கே பாதுகாப்பாக வைப்பது?
         வங்கி தான் இதற்கு ஒரு பாதுகாப்புக்கு வழிகாண வேண்டும்....
         இதோ இந்த யோசனைகளை பரிசீலிக்கலாம்....

         வங்கிகள் தொடர்ந்து விடுமுறை விடும் நாட்களின்போது சிறிது தீவிர கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும்.
         பெரும்பாலான வங்கிகள் வங்கி காவலாளி முகப்பு பகுதியில் இரவில் காவல் காப்பார். 
          வங்கி செயல்படும்போது வங்கி வாடிக்கையாளர் நடமாட்டத்தை வங்கி மேலாளர் தனது அறையின் உள்ளே கம்ப்யூட்டர் மானிட்டரில் கண்காணிப்பார்.
          இரவு வங்கி பூட்டப்பட்ட பின் வங்கி உள்ளே பாதுகாப்பு பற்றி கவனிக்க முடியாது. எனவே வங்கி உள்ளே இரவில் கேமராவை ஆன் செய்து வங்கிச் பக்கவாட்டு சுவர்களிலும் கேமராவை ஆன் செய்து ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வங்கிக்கு வெளியே காவல் காக்கும் காவலர் பார்த்திட, ஒரு மானிட்டர் அவர் எதிரே நிறுவப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் பூட்டப்பட்ட வங்கியின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை இரவில் என்பதை அவர் அறிய முடியும்.

         மேலும், வங்கிக்கும் வங்கியை ஒட்டிய அடுத்த பில்டிங்கும் இடையில் உள்ள புழக்கத்தில் இல்லாத இடைச்சொல் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ குறைந்தபட்சம் 15 அடி உயரத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
         வங்கியின் முன் பகுதி தவிர பக்கவாட்டு சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதை தெரிந்து அதற்கு வெளிப்புறத்தில் ஒரு செங்கல் அளவிற்கு concrete கலவை குறைந்தபட்சம்  10 அடி உயரத்திற்கு போடப்பட வேண்டும். இதனால் சுவரில் துளையிடுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு விடும்.
         வங்கி கேமரா ஹார்ட்டிஸ்கினை திருடர்கள் திருடும் போது சேர்த்து அதையும் எடுத்து சென்று விடுகின்றனர்.

        எனவே அந்த ஹார்ட் டிஸ்க்கனை சுவற்றில் பதிக்கப்பட்ட குட்டி லாக்கர் உள்ளே வைத்து பூட்டப்பட வேண்டும். இதனால் திருடன் இதை உடைப்பதை கவனம் செலுத்தாமல் அவனுடைய கவனம் செலுத்துவான். இதனால் திருட்டை பற்றிய ஒரு தொகுப்பு பதிவானதை போலீஸ் காவலர்கள் கண்காணிக்க ஏதுவாகும்.
           பக்கவாட்டு சுவர்களில் கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
           சரி.... வங்கி மட்டும் நம்பிக் கொண்டிருக்கலாம். நாமும் ஒரு யோசனையை கடைபிடிக்கலாமே.....
           வாடிக்கையாளர்கள் தனது நகை பணம் ஆவணங்களை ஒரே வங்கி லாக்கரில் வைக்காமல்.... இரண்டு மூன்று வங்கிகளில் லாக்கரை வாங்கி பிரித்து வைக்கும் பொழுது பண இழப்பு முழுவதுமாக இருக்காது. இதனை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
          சரி அரசின் கவனமும் வேண்டுமல்லவா...
         இரண்டு சக்கர மற்றும் அனைத்து வாகனங்களுக்கும் இன்ஜின் சேஸிஸ் என் நிரந்தரமாக பதியப் பெற்றிருக்கும்.
        இதனால் திருட்டு மற்றும் சட்ட சிக்கலின்போது இதனை வைத்து கண்காணிக்க முடியும் .
        அதுபோல காஸ் கட்டிங் சிலிண்டர் விற்பனையும் போதும், காலி சிலிண்டரை fillup செய்யும் போது அதில் ஒரு நம்பரை பதிவு பதியப்பட்டிருந்தால் வாடிக்கையாளர் பெயரை குறித்து வைத்து குறித்துவைத்து விநியோகித்தால் இந்த மாதிரி நேரத்தில் அந்த சிலிண்டர் யாரிடமிருந்து உபயோகப்பட்டது என்ற விபரம் காவல்துறைக்கு மிக்க உதவியாக இருக்கும்.     
         அதேபோல மேன்சன் லாட்ஜ் தங்குபவர்களின் விபரத்தை அவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை காவல்துறை கண்காணிக்கிறது.
       அதுபோல வாடகைக்கு வீடு தங்குபவர்களின் விபரம் போட்டோ டிரைவிங் லைசன்ஸ் பெற்று வாடகைக்கு விட அறிவுறுத்தி அதனை காவல்துறை கண்காணிக்க வேண்டும்.
         இவைகள் திருட்டினை ஓரளவு மட்டுப்படுத்து உதவும்.
         இதற்கு முன்பு எங்கள் white rose trends Tamil channel சார்பாக வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க ஒரு யோசனையை தெரிவித்து youtube ல் வெளியிட்டிருந்தோம். அதனை பார்வையாளர்கள் சர்ச் செய்து பார்க்கவும்.
          இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். வங்கியில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
         மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.

       Amazon purchase below click here:
        Very low price
     
 
      

No comments:

Post a Comment