பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor முதல் வணக்கத்துடன் குடியரசு தின வாழ்த்துக்கள்.
நமது நாடு விடுதலை பெற்று தற்போது எழுபதாவது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
தேசத்தந்தை காந்தி தலைமையில் காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை கொண்டு வந்தது. இது ஜனவரி 26 முடிவு செய்யப்பட்டது. ஏனோ காந்தி இதில் முடிவாக இல்லாமல் இதனை வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த வாபஸ் நிகழ்வு தீவிர தேசிய தலைவர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை.
பின்னர் காந்தி காங்கிரஸ் மாநாட்டில் 1930 ஜனவரி 26 பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பூரண சுயராஜ்ய தினமாக முடிவுசெய்து கொண்டாடப்பட்டது.
பின்னர்1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பின் இந்தியாவுக்குத் தனி அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என முடிவு செய்து
டி டி கே கிருஷ்ணமாச்சாரி உள்பட தலைவர்களைக் கொண்டு BR அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு உருவாக்க நியமிக்கப்பட்டது.
ரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,தென் அமெரிக்கா, கனடா ,அயர்லாந்து உள்பட சட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு அதிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அவ்வாறு எழுதப்படும் போது அந்தக் குழு உறுப்பினர்களிடையே விவாதங்கள் ஏற்பட்டு சிலர் ராஜினாமா செய்தனர்.
இறுதியில் 2 ஆண்டு 11 மாத முடிவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.
இந்தச் சட்டம் நெகிழும் ,நெகிழா
தன்மையை கொண்டது.
இது மொத்தம் 22 பிரிவுகள் ,12 அட்டவணைகள், 101 திருத்தங்கள் , 470 உட்பிரிவுகளைக் கொண்டது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகையை வழங்குகிறது. இதன்படி,
ராணுவம் வெளியுறவு தகவல் தொடர்பு துறை தவிர பிற துறைகள் தொடர்பான மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் இம்மாநிலத்தில் செல்லுபடி ஆகாது.
ஜம்மு காஷ்மீரில் பிற மாநிலத்தவர் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது. ஆனால் அம்மாநில மக்கள், பிற மாநிலங்களில் அசையா சொத்துக்களை வாங்க முடியும்.
இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசையா சொத்து வாங்க முடியாது.
ஆனால், இம்மாநில ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் அந்த ஆண்கள் இந்த மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.(ஆணுக்கொரு நீதி...... பெண்ணுக்கு ஒரு நீதி.....)
அரசியல் சாசன 238 வது பிரிவு இம் மாநிலத்திற்கு பொருந்தாது.
இம்மாநில எல்லைகளை குறைக்கவவோ, கூட்டவோ முடியாது.
இதனைத் தொடர்ந்து தற்காலத்திலும் பிற மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து கேட்டும், அவைகளை சில அரசியல்வாதிகள் ஆதரித்தும் பேசுகின்றனர். இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.....
சரி விஷயத்துக்கு வருவோம்...
இன்று டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக தென்னாபிரிக்க அதிபர் சிறில் ராமபோஸா கலந்து கொண்டார். இவருக்கு ஜி-20 மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது இதனை ஏற்று கலந்து கொண்டார்.
ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் தேசிய கொடியேற்றினார். தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.
நமது தேசியக் கொடி பிங்கலி வெங்கய்யா என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது கொசுறு செய்தி.....
இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மீண்டும் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.
White Rose Trends
Tamil channel
No comments:
Post a Comment