Thursday, January 31, 2019

இன்றைய நிகழ்வுகள் ஒரு பார்வை

5
         பார்வையாளர்களுக்கு white rose Emperror முதல் வணக்கம்.
           இன்று இந்திய நிகழ்வுகளை ஒரு கண்ணோட்டமாக பார்ப்போம்..
.
         நாளை முதல் பிளஸ்
+2 மாணவர்களுக்கு பிராக்டிகல் எக்ஸாம் ஆரம்பமாகிறது.

         அவர்கள் பிராக்டிகல் எக்ஸாமில் கலந்து கொண்டு நல்ல மதிப்பெண் பெற எங்களின் வாழ்த்துக்கள்.
         இன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அவர்கள் குதிரைப்படை வீரர்கள் புடைசூழ பாராளுமன்றத்தில் உரையாற்றினார்.

           எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டாய பாஸ் குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம் என மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டுள்ளது.
         ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு இறுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் arrears வைத்து இரண்டு மாதம் கழித்து மீண்டும் எழுதி தேர்ச்சி பெறலாம். அப்பொழுதும் தேர்ச்சி பெறுவார்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் அதே வகுப்பில் பயில சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டது. கட்டாய பெயில் செய்வதா வேண்டாமா என்பதை மாநில அரசு முடிவு செய்யலாம் என திருத்தம் செய்யப்பட்டது.
        இது ஏழை மாணவர்களின் வயிற்றில் பால் வார்க்கப்பட்டுள்ளது. (ஏனென்றால் ஏழை கிராமத்து மாணவனுக்கு ஐந்தாம் வகுப்பு மாணவனுக்கு தேர்வை பற்றிய knowledge இன்னும் எட்டியிருக்காத வயதில் அவனைப் போய் fail செய்தால் அவருடைய படிப்பு அப்போதே முடிந்துவிடும்...... இது நடக்கக் கூடாது).
            தமிழகம் முழுவதும் 3 ,4 தேதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
          தமிழக அரசு ஊழியர்களுக்கு 'no work no pay'விதியின் படி இன்று 31ஆம் தேதி சம்பளம் வழங்கப்படவில்லை.
         தமிழிலும் எழுதும் தேர்வில் வட மாநிலத்தவர்கள் எப்படி தேர்ச்சி பெறுகிறார்கள்? என நீதிபதி கேள்வி. இதே போல வடமாநிலங்களில் அவர்களின் மொழித் தேர்வில் தமிழ் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்தால் இது தேசிய பிரச்சினையாக இருக்கும் என நீதிபதி வேதனை.....
        இது ஒட்டுமொத்த தமிழின் குரலாக  ஒலிக்கிறது....
         உடல் உறுப்புகள் தானம் செய்தவர்களின் உறவினர்களை தமிழக அரசு கௌரவித்தது.
         இவர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நலத்திட்டங்களில் முன்னுரிமை வழங்க அரசின் பரிசீலனையில் உள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் ..
தெரிவித்தார்.
         இந்த நிகழ்வு மிகவும் பாராட்டப்பட வேண்டியது.....

          மறுசுழற்சி குப்பைத்தொட்டி இயந்திரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்த மெஷினில் உள்ளே பிளாஸ்டிக் பாட்டிலை நாம் போட்டவுடன் ஒரு பரிசு கூப்பன் அது வழங்கும்.
          கடலூர் மாவட்டம் வடலூரில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் திரு. அம்பேத்கார் அவர்கள் நரிக்குறவர் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தார் இவரது செயல் மிகவும் பாராட்டை. பெற்றது.
            உரிமம் பெறாத பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மார்ச் 1 முதல் இயங்க தடை விதிக்கப்பட்டது.
           கர்நாடக மாநிலத்தில் கூட்டணி தர்மத்தை மீறி செயல்படுவது காங்கிரஸ் மீது தேவகவுடா குற்றச்சாட்டு.
          சேலத்தில் 30க்கும் மேற்பட்ட ரவுடிகள் வேட்டை என செய்திகள் கூறுகின்றன.
            இளையராஜா 75 இசை நிகழ்ச்சிக்கு தடை கோரிய மனு தள்ளுபடி.


             கப்பற்படைக்கு நமது இந்தியா
40 000கோடி செலவில் ஆறு நீர்மூழ்கி கப்பல்கள் கட்ட பாதுகாப்பு துறை அறிவிப்பு.
               ஜிஎஸ்டி வசூல் ஒரு மாதத்தில் ஒரு லட்சம் கோடி வசூல் செய்வது இது மூன்றாவது முறை என செய்தி.
               நம்ம டாஸ்மாக் எல்லா இதன் முன் நிற்க முடியாது போலிருக்கு.....

     Amazon purchase laptop low price below click here:
   
   
   
 

Wednesday, January 30, 2019

நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் விபத்தில் மரணம்

 

       அனைவருக்கும் வணக்கம்.
      மார்கழி மாதம் அமாவாசை தினத்தன்று அனுமன் அவதரித்த நாளினை அனுமன் ஜெயந்தியாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
        எனவே, உலகப் பிரசித்தி பெற்ற நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் ஆஞ்சநேயருக்கு கடந்த மார்கழி மாதம் அமாவாசை அன்று ஒரு லட்சத்து 8 வடைமாலை சாத்தப்பட்டது.
        இந்த ஆஞ்சநேயர் 18 அடி உயரம் கொண்டவர். இவருக்கு வடை மாலையை தொடர்ந்து, துளசி மாலை, வெண்ணெய் அபிஷேகம் பால் அபிஷேகம் செய்யப்பட்டு அன்று மாலை முத்தங்கி அலங்காரம் செய்யப்பட்டதை நாம் அறிவோம்.
          நாமக்கல் குடைவரை நரசிம்மர் கோவில் கடையெழு வள்ளல்கள் ஒருவரான அதியமான் நல்லி பரம்பரையில் வந்த குணசீலன் என்பவரால் கட்டப்பட்டது.
          இந்த ஆஞ்சநேயரும் அந்த சமகாலத்திலேயே சார்ந்தது எனக் கூறப்படுகிறது.
           இந்த ஆஞ்சநேயர் கோவிலில் தான் ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது.
             நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் அர்ச்சகர் வெங்கடேஷ் என்பவர் 8 அடி உயரத்தில் இருந்து ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் நடத்திக் கொண்டிருக்கும் போது தவறி வழுக்கி 8 அடி உயரத்தில் இருந்து தலைகீழாக விழுந்தார்.
            இவர் சம்பளப் பட்டியலில் இடம்பெறாத அர்ச்சகர் ஆவார்.
             இவர் தனது உறவினரான அர்ச்சகருக்கு உதவி அர்ச்சகராக விடுமுறை காலங்களில் கோவிலில் பணி புரிபவர்.
          இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளர் பணி புரிந்து கொண்டே விடுமுறை நாட்களில் ஆஞ்சநேயர் கோவிலில் பணி செய்ய உதவியாக வருபவர்.
          இவர்தான் நேற்று 18 அடி ஆஞ்சநேயருக்கு மலர்மாலை சாத்த 8 அடி உயர மேடையிலிருந்து பணிபுரிந்து கொண்டிருந்தார்.
!
         தொடந்து மாலைகள் சாதி கொண்டிருக்கும் போது ஏனோ பேலன்ஸ் செய்யும்போது மேடையில் இருந்த வெண்ணை போன்ற வழவழப்பான பொருள் வழுக்கி 8 அடி உயரத்திலிருந்து வழுக்கி தலைகீழாக விழுந்தார்.
!

          இதில் இவர் படுகாயமடைந்து விட்டதால் சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
        பின்னர் அவர் சிகிச்சை பலனளிக்காமல் மரணம் அடைந்தார்.
        இதனைத் தொடர்ந்து ஆஞ்சநேயர் கோவிலுக்கு பரிகார பூஜை செய்யப்பட்டது.
          ஆஞ்சநேயருக்காக பணிவிடை செய்த அர்ச்சகர் அந்த ஆஞ்சநேயர் காலடியிலேயே மரணத்தை தழுவியது பக்தர்களுக்கு மிக்க கவலையை ஏற்படுத்தி விட்டது.
       இந்தச் செய்தியை உங்களது நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
        எங்களது white rose trends Tamil channel யினை யூட்யூபில் தொடர்ந்து கண்டுகளியுங்கள்.
          அடுத்த தகவல்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor
முத்துகிருஷ்ணன்.


       Amazon children toys in very low cost
Click below
       குழந்தைகளின் பொம்மைகள் வாங்க Amazon கீழே click செய்யவும் 👇👍
           
         

Tuesday, January 29, 2019

வங்கி லாக்கர் நமது செல்வத்தை பாதுகாக்குமா?

         
!       பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor முதல் வணக்கம்.
        நாடு முழுவதும் குறிப்பாக நமது தமிழகத்தில் ஏடிஎம் சென்டர்களை குறிவைத்தும், வங்கிகளை குறி வைக்கும் திருட்டு நடைபெற்று வருகிறது.
          அந்தத் திருட்டுக்கு கேஸ் வெல்டர் பயன்படுத்தி ஏடிஎம் மையங்கள், வங்கியின் உள்ளே லாக்கரை உடைத்து சர்வ சாதாரணமாக திருடுகின்றனர்.
      நேற்று திருச்சி சமயபுரம் சாலையில் நம்பர் ஒன் டோல்கேட் அருகே ஒரு ஷெட்யூல்ட் அரசு வங்கியில் பக்கவாட்டில் சுவரினை கடப்பாரை கொண்டு துளையிட்டு வங்கி உள்ளே நுழைந்து கேஸ் வெல்டர் கொண்டு லாக்கரை துளையிட்டு பல கோடி ரூபாய் கொள்ளையடித்துள்ளனர்.
        இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
        இது வங்கிகளின் இரவுக்காவல் குறைபாடுடன் உள்ளதை காட்டுகிறது.
         ஏன் இந்த குறைபாடு?

          வங்கிப் பணியாளர்கள் குறைவு ஏற்படாமல் நியமித்து பணி நேரத்தில் பணி தொய்வு ஏற்படாமல் வங்கி நிர்வாகம் பார்த்துக் கொள்கிறது.
           ஆனால் வங்கி பூட்டப்பட்ட பின்பு இரவு பாதுகாப்பு காவலர் நியமிக்கப்படாமல் உள்ளது. இது வீட்டைக் கட்டி பூட்டு போடாமல் விட்டதற்கு சமமாகும்.
          வீட்டில் நகையை வைத்து சென்றால் திருடர்கள் பகலிலும் இரவிலும் சரி வீட்டு கதவை உடைத்து எடுத்து சென்று விடுகின்றனர்... இதனால் வங்கி லாக்கரில் வைத்தால் திருட்டுப் போகாது என்று வங்கி லாக்கரை கேட்டு வாங்கி தனது நகை பணம் தாஜ்வேஷ்களை பாதுகாப்பாக வைக்கின்றனர்.
        அதற்கும் இப்பொழுது உத்தரவாதம் இல்லை....
         அப்போ இதை எங்கே பாதுகாப்பாக வைப்பது?
         வங்கி தான் இதற்கு ஒரு பாதுகாப்புக்கு வழிகாண வேண்டும்....
         இதோ இந்த யோசனைகளை பரிசீலிக்கலாம்....

         வங்கிகள் தொடர்ந்து விடுமுறை விடும் நாட்களின்போது சிறிது தீவிர கண்காணிப்பு ஏற்படுத்த வேண்டும்.
         பெரும்பாலான வங்கிகள் வங்கி காவலாளி முகப்பு பகுதியில் இரவில் காவல் காப்பார். 
          வங்கி செயல்படும்போது வங்கி வாடிக்கையாளர் நடமாட்டத்தை வங்கி மேலாளர் தனது அறையின் உள்ளே கம்ப்யூட்டர் மானிட்டரில் கண்காணிப்பார்.
          இரவு வங்கி பூட்டப்பட்ட பின் வங்கி உள்ளே பாதுகாப்பு பற்றி கவனிக்க முடியாது. எனவே வங்கி உள்ளே இரவில் கேமராவை ஆன் செய்து வங்கிச் பக்கவாட்டு சுவர்களிலும் கேமராவை ஆன் செய்து ஒரு கம்ப்யூட்டர் மானிட்டர் வங்கிக்கு வெளியே காவல் காக்கும் காவலர் பார்த்திட, ஒரு மானிட்டர் அவர் எதிரே நிறுவப்பட்டிருக்க வேண்டும். அப்பொழுதுதான் பூட்டப்பட்ட வங்கியின் உள்ளே என்ன நடக்கிறது என்பதை இரவில் என்பதை அவர் அறிய முடியும்.

         மேலும், வங்கிக்கும் வங்கியை ஒட்டிய அடுத்த பில்டிங்கும் இடையில் உள்ள புழக்கத்தில் இல்லாத இடைச்சொல் நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ குறைந்தபட்சம் 15 அடி உயரத்திற்கு தடுப்பு ஏற்படுத்த வேண்டும்.
         வங்கியின் முன் பகுதி தவிர பக்கவாட்டு சுவர்கள் செங்கற்களால் கட்டப்பட்டிருப்பதை தெரிந்து அதற்கு வெளிப்புறத்தில் ஒரு செங்கல் அளவிற்கு concrete கலவை குறைந்தபட்சம்  10 அடி உயரத்திற்கு போடப்பட வேண்டும். இதனால் சுவரில் துளையிடுவது பெரும்பாலும் தடுக்கப்பட்டு விடும்.
         வங்கி கேமரா ஹார்ட்டிஸ்கினை திருடர்கள் திருடும் போது சேர்த்து அதையும் எடுத்து சென்று விடுகின்றனர்.

        எனவே அந்த ஹார்ட் டிஸ்க்கனை சுவற்றில் பதிக்கப்பட்ட குட்டி லாக்கர் உள்ளே வைத்து பூட்டப்பட வேண்டும். இதனால் திருடன் இதை உடைப்பதை கவனம் செலுத்தாமல் அவனுடைய கவனம் செலுத்துவான். இதனால் திருட்டை பற்றிய ஒரு தொகுப்பு பதிவானதை போலீஸ் காவலர்கள் கண்காணிக்க ஏதுவாகும்.
           பக்கவாட்டு சுவர்களில் கேமரா பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
           சரி.... வங்கி மட்டும் நம்பிக் கொண்டிருக்கலாம். நாமும் ஒரு யோசனையை கடைபிடிக்கலாமே.....
           வாடிக்கையாளர்கள் தனது நகை பணம் ஆவணங்களை ஒரே வங்கி லாக்கரில் வைக்காமல்.... இரண்டு மூன்று வங்கிகளில் லாக்கரை வாங்கி பிரித்து வைக்கும் பொழுது பண இழப்பு முழுவதுமாக இருக்காது. இதனை வாடிக்கையாளர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
          சரி அரசின் கவனமும் வேண்டுமல்லவா...
         இரண்டு சக்கர மற்றும் அனைத்து வாகனங்களுக்கும் இன்ஜின் சேஸிஸ் என் நிரந்தரமாக பதியப் பெற்றிருக்கும்.
        இதனால் திருட்டு மற்றும் சட்ட சிக்கலின்போது இதனை வைத்து கண்காணிக்க முடியும் .
        அதுபோல காஸ் கட்டிங் சிலிண்டர் விற்பனையும் போதும், காலி சிலிண்டரை fillup செய்யும் போது அதில் ஒரு நம்பரை பதிவு பதியப்பட்டிருந்தால் வாடிக்கையாளர் பெயரை குறித்து வைத்து குறித்துவைத்து விநியோகித்தால் இந்த மாதிரி நேரத்தில் அந்த சிலிண்டர் யாரிடமிருந்து உபயோகப்பட்டது என்ற விபரம் காவல்துறைக்கு மிக்க உதவியாக இருக்கும்.     
         அதேபோல மேன்சன் லாட்ஜ் தங்குபவர்களின் விபரத்தை அவர்கள் பதிவு செய்ய வேண்டும் என்ற உத்தரவை காவல்துறை கண்காணிக்கிறது.
       அதுபோல வாடகைக்கு வீடு தங்குபவர்களின் விபரம் போட்டோ டிரைவிங் லைசன்ஸ் பெற்று வாடகைக்கு விட அறிவுறுத்தி அதனை காவல்துறை கண்காணிக்க வேண்டும்.
         இவைகள் திருட்டினை ஓரளவு மட்டுப்படுத்து உதவும்.
         இதற்கு முன்பு எங்கள் white rose trends Tamil channel சார்பாக வங்கி ஏடிஎம் கொள்ளையை தடுக்க ஒரு யோசனையை தெரிவித்து youtube ல் வெளியிட்டிருந்தோம். அதனை பார்வையாளர்கள் சர்ச் செய்து பார்க்கவும்.
          இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யவும். வங்கியில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்.
         மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.

       Amazon purchase below click here:
        Very low price
     
 
      

Monday, January 28, 2019

காதல் தேவதை பிரியா வாரியார்


        பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்.
        பிரியா வாரியார் என்கிற பெயரை தெரியாத இளைஞர்களே இருக்கமாட்டார்கள்... அந்தளவுக்கு அவங்க ஃபேமஸ் ஆனவங்க!
         அவங்க தாங்க oru adaar love மலையாள பட கதாநாயகி.

          அங்குஅவங்க கண்ணடித்து இரு விரலையே துப்பாக்கியாக காட்டி உலகம் முழுதும் பேமஸான கதாநாயகி.

        இவங்க,, ஓமர்லுலு இயக்கிய adaar love படத்துல ஃபேமஸ் ஆயிட்டாங்க. அது பள்ளிப்பருவ காதலைப் பற்றிய படம்.
        இந்த படத்துல வினித் ஸ்ரீனிவாசன் என்பவர் பாடிய மாணிக்க மலராய என்ற மெலோடி பாட்டு உலகம் முழுக்க ஃபேமஸ் ஆயிடுச்சு... அதுக்கு காரணம்  பிரியா வாரியரின் கண் அசைவும், அந்த சிரிப்பும் தாங்க!

       அந்த பிரியா வாரியார் இப்ப அடார் லவ்  தமிழ் பதிப்புல நடிக்க இருக்காங்க...
       அந்த படத்த கலைப்புலி எஸ் தாணு வி கிரியேஷன்ஸ் சார்பாக தயாரிக்கிறார்.


        அதனை விரைவாக எடுத்து பிப்ரவரி 14 வெளியிட உள்ளார். நம்ம பசங்களும் அந்த பிப்ரவரி 14 தான் காத்து இருப்பாங்க ஏன்னா அது காதலர் தினம்... ஞாபகம் இருக்குல்ல....
        அந்த விழா முடிஞ்சதும் பிரியா வாரியாரை ஒரு நிருபர் பேட்டி கண்டார்.
         கேரளாவில் திருச்சூர் எங்க ஊரு. எங்கப்பா கஸ்டம்ஸ் ஆபிசர்.. மம்மி ஹவுஸ் வைப்... என் தம்பி ஏழாவது படிக்கிறான்...
        நான் B.Com இரண்டாம் வருஷம் படிக்கும் போதே நடிக்க வந்துட்டேன்...
        என்னுடைய கண்ணடிக்கும் அந்தப் பாடல் இவ்வளவு பேமஸாக நினைக்கல.....

          அந்த மாதிரி லவ் ஸ்டோரிதான் நான் நடிக்க விரும்புகிறேன்... நான் தைரியமான பொண்ணு அப்படின்னு பேட்டி கொடுத்தார்.
        ஒரு நிருபர் ஒரு கேள்வியிலே மடக்கினார்.
        அவர் அந்த ஊரு ரங்கராஜ் பாண்டே போல இருக்கிறது. அவங்க அதுக்கு சலிக்காமல் பதில் சொன்னாங்க...
      நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு காதல் அனுபவம் இருக்கா?
        சட்டுனு அவங்க.... நான் ஒன்பதாவது படிக்கும்போதே காதலிச்சிருக்கேன் ஒரு பையன் என்னை ப்ரபோஸ் பண்ணினேன்.... நானும் ஏற்றுக் கொண்டேன்....
        பின்னர் இது ஒரு அட்டாச் இதுதான் நினைச்சிட்டு.... பிரிஞ்சி படிப்புல கவனம் செலுத்தினோம்...
          எனக்கு மலையாளத்துல மோகன்லாலையும் தமிழில் விஜய் சேதுபதியும் பிடிக்கும் என்றாங்க....
விஜய்சேதுபதிக்கு பாருங்க சூப்பர் அதிர்ஷ்டம்...
            நயன்தாராவின் இடத்தையும் பிடிக்கவேண்டும் என்று ஆசை... அவங்களோடு கம்பேர் பண்ற அளவுக்கு நான் இல்லை இருந்தாலும் அவங்கள முன்மாதிரியாக எடுத்துக் கொள்வேன் என்று சொன்னார்கள்....
         அவங்க முன்மாதிரி எடுக்கிறார்களோ இல்லையோ..... நம்ம பசங்க அந்த முத்தத்தை முன்மாதிரியாக எடுத்துக்கிட்டு தூங்காமல் கிடக்கிறார்கள்....
         இந்த விஷயத்தை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்....
         அடுத்த தகவல்களுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.



Amazon purchase click below:
     
     

Sunday, January 27, 2019

சகோதரன் பள்ளி செல்ல சகோதரி உருவாக்கிய சைக்கிள்

   

 இந்த நாட்டில் உடல் ஊனமுற்ற மாணவர்கள் படும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
        அதுவும் கிராமத்தில் ஏழையாய் பிறந்த உடல் ஊனமுற்ற சிறுவனுக்கு ,அவனது பெற்றோரும் சமூகமும் அவனை ஒதுக்கி விடுகிறது.
       அந்தச் சிறுவர் சிறுமிகளுக்கு தொடக்கக்கல்வி மட்டும் கிடைக்கிறது. அதற்குமேல் உயர்கல்வி பயில நகரத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால், கூலி வேலை செய்யும் பெற்றோர்கள் ஏழை விவசாயிகள் அவர்களைப் படிக்க வைக்க முடியாமல் அத்தோடு படிப்பை முடித்து விடுகின்றனர்.
         இதனால் அவங்க பெட்டிக்கடை வைத்து பிழைப்பு நடத்துகிற வாழ்க்கை வாழ்வதை நாம் கிராமத்தில் ஏன் நகரத்தில் கூட காணலாம்.
       அவர்களுக்குத்தான் எத்தனை தடைகள்...
        மெயின் ரோட்டிலிருந்து விலகி பல நூறு மீட்டர் அவர்களுக்கு வீடு இருக்கும். அவர்கள் பள்ளி செல்ல, ரோட்டுக்கு வந்து பஸ் பிடித்து பள்ளிக்குச் சென்று பள்ளி கட்டிட வளாகத்தை நடக்க முடியாமல் நடந்து சென்று பல மாடிகளை கடந்து வகுப்பிற்கு சென்று கல்வி பயில வேண்டும்.
       இதேபோன்றுதான் பள்ளி விட்டதும் வீடு திரும்ப மீண்டும் தடைகள். படிப்பு பருவம் முழுவதும் எவ்வளவு கஷ்டம்.
       சரிங்க....
       மகாராஷ்டிர மாநிலம் புனே அருகே baramati பகுதியைச் சேர்ந்த 16 வயது மயூரி. அவருக்கு ஒரு தம்பி இருக்கார். அவர் பெயர் நிகில்.
        அவருக்கு 13 வயது ஆகிறது. அக்கா பத்தாம் வகுப்பு ம், தம்பி எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள்.
        தம்பியும் நிகில் மாற்றுத்திறனாளி ஆவார். அவர் அடக்க முடியாது. அவரது தந்தை தான் டூவீலரில் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிடுவார்.
     மாலையில் அவருடைய அப்பா திரும்பவந்து நிகிலை வீட்டுக்கு அழைத்துச் செல்வார். பலதடவை இது இயலாமல் போய்விடுகிறது.
        இதனால் அவனால் பள்ளியில் இருந்து வீடு திரும்ப இயலவில்லை. பள்ளியிலேயே நீண்ட நேரமாகியும் இருக்கவேண்டிய நிலைமை.
         இதனால் அவனது அக்காவுக்கு மிகுந்த கவலை. அவரும் தம்பியோடு பள்ளியிலேயே காத்திருக்க வேண்டி உள்ளது.
          பலதடவை காலையிலேயே தந்தை வேலைக்கு சென்று விடுவதால் இவன் பள்ளி செல்ல இயலாமல் அன்று வீட்டிலேயே முடங்கி விடுகிறார்.
     படிப்பில் இவன் மிக சுட்டியாக இருந்தும் தொடர்ந்து பள்ளி செல்ல இயலாததால் கல்வி பாதிக்கப்பட்டது.
        இதனால் அவனுக்கு சகோதரி மயூரி, மிக்க  மனக் கவலை கொண்டார். அவருக்கு ஒரு யோசனை!
       இனி தானே தனது தம்பியை தான் பள்ளி செல்லும்போது தவறாமல் அழைத்துச் செல்ல வேண்டும் என முடிவு செய்தார்.
          இதனால் தனது பள்ளி ஆசிரியைகளை கலந்து பேசி தனது சைக்கிளிலேயே அவனது வீல் சேரினை
இணைத்து தயார் செய்தார்.
          இதில் தனது தம்பியை அமர வைத்து பள்ளிக்கு தினசரி அழைத்துச் சென்று வருகிறார்.
         இந்த சகோதரின் செயலை பள்ளியும் அந்த ஊரும் பாராட்டுகிறது.
        நாமும் இதுபோன்ற மாற்றுத்திறனாளி மாணவர்களை கல்வி தடையில்லாமல் கிடைக்க முழு முயற்சி செய்வோம்!

 
   Please Amazon purchase below here click:
    

Saturday, January 26, 2019

எழுபதாவது இந்திய குடியரசு தின விழா

       
     
       பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor முதல் வணக்கத்துடன் குடியரசு தின வாழ்த்துக்கள்.
         நமது நாடு விடுதலை பெற்று தற்போது எழுபதாவது குடியரசு தின விழா நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது.
          தேசத்தந்தை காந்தி தலைமையில் காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக வரிகொடா இயக்கத்தை கொண்டு வந்தது. இது ஜனவரி 26 முடிவு செய்யப்பட்டது. ஏனோ காந்தி இதில் முடிவாக இல்லாமல் இதனை வாபஸ் பெற்றுக்கொண்டார். இந்த வாபஸ் நிகழ்வு தீவிர தேசிய தலைவர்களுக்கு மகிழ்ச்சி தரவில்லை.
        பின்னர் காந்தி காங்கிரஸ் மாநாட்டில் 1930 ஜனவரி 26 பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக பூரண சுயராஜ்ய தினமாக முடிவுசெய்து கொண்டாடப்பட்டது.
         பின்னர்1947 ஆகஸ்ட் 15 இல் இந்தியா சுதந்திரம் பெற்றது. பின் இந்தியாவுக்குத் தனி அரசியலமைப்புச் சட்டம் வேண்டும் என முடிவு செய்து
டி டி கே கிருஷ்ணமாச்சாரி உள்பட தலைவர்களைக் கொண்டு BR அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியலமைப்பு உருவாக்க நியமிக்கப்பட்டது.

       ரஷ்யா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் ,தென் அமெரிக்கா, கனடா ,அயர்லாந்து உள்பட சட்டங்கள் பரிசீலிக்கப்பட்டு அதிலிருந்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளப்பட்டது.
         அவ்வாறு எழுதப்படும் போது அந்தக் குழு உறுப்பினர்களிடையே விவாதங்கள் ஏற்பட்டு சிலர் ராஜினாமா செய்தனர்.
         இறுதியில் 2 ஆண்டு 11 மாத முடிவில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது.

        இந்தச் சட்டம் நெகிழும் ,நெகிழா
தன்மையை கொண்டது.
         இது மொத்தம் 22 பிரிவுகள் ,12 அட்டவணைகள், 101 திருத்தங்கள் , 470 உட்பிரிவுகளைக் கொண்டது.
          இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 370 வது பிரிவு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்புச் சலுகையை வழங்குகிறது. இதன்படி,
     ராணுவம் வெளியுறவு தகவல் தொடர்பு துறை தவிர பிற துறைகள் தொடர்பான மத்திய அரசு கொண்டு வரும் சட்டங்கள் இம்மாநிலத்தில் செல்லுபடி ஆகாது.
       ஜம்மு காஷ்மீரில்  பிற மாநிலத்தவர் அசையாச் சொத்துக்களை வாங்க முடியாது. ஆனால் அம்மாநில மக்கள், பிற மாநிலங்களில் அசையா சொத்துக்களை வாங்க முடியும்.
        இம்மாநில பெண்கள் வெளிமாநில ஆண்களை திருமணம் செய்து கொண்டால், அப்பெண்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அசையா சொத்து வாங்க முடியாது.
       ஆனால், இம்மாநில ஆண்கள் வெளிமாநில பெண்களை திருமணம் செய்து கொண்டாலும் அந்த ஆண்கள் இந்த மாநிலத்தில் அசையாச் சொத்துக்களை வாங்கலாம்.(ஆணுக்கொரு நீதி...... பெண்ணுக்கு ஒரு நீதி.....)
        அரசியல் சாசன 238 வது பிரிவு இம் மாநிலத்திற்கு பொருந்தாது.
        இம்மாநில எல்லைகளை குறைக்கவவோ, கூட்டவோ முடியாது.

         இதனைத் தொடர்ந்து தற்காலத்திலும் பிற மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து கேட்டும், அவைகளை சில அரசியல்வாதிகள் ஆதரித்தும் பேசுகின்றனர். இது எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை.....
         சரி விஷயத்துக்கு வருவோம்...
         இன்று டெல்லியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. தேசியக்கொடியினை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார்.
          இதில் சிறப்பு விருந்தினராக தென்னாபிரிக்க அதிபர் சிறில் ராமபோஸா கலந்து கொண்டார். இவருக்கு ஜி-20 மாநாட்டில் அழைப்பு விடுக்கப்பட்டது இதனை ஏற்று கலந்து கொண்டார்.
           ஒவ்வொரு மாநிலத்திலும் கவர்னர் தேசிய கொடியேற்றினார். தமிழகத்தில் கவர்னர் பன்வாரிலால் புரோகித் அவர்கள் தேசியக்கொடியினை ஏற்றினார்.
         நமது தேசியக் கொடி பிங்கலி வெங்கய்யா என்பவரால் உருவாக்கப்பட்டது என்பது கொசுறு செய்தி.....
         இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள். மீண்டும் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.


Amazon purchase given below click:
   
   
       

White Rose Trends
Tamil channel

Friday, January 25, 2019

இன்றைய செய்தி சிதறல்கள், சுவராசியமான நிகழ்வுகள்

 
   
பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor சார்பாக முதல் வணக்கம்...
          இன்று நாட்டில் பல சுவராசிய விஷயங்கள் அரங்கேறியுள்ளன.
           அவற்றில் ஒன்று:
           பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுப்பிரிவினருக்கு மத்திய அரசு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமல் செய்யப்படுகிறது.
            இது அரசியல் சாசன 124வது திருத்த மசோதா நாடாளுமன்ற இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டு 2019 பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அமுலுக்கு வருகிறது.
              அதன்படி, எஸ் சி, எஸ் டி மற்றும் சமூக நீதியிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு சலுகை பெறாதவர்கள், ஆண்டு வருமானம் 8 லட்சத்திற்கு குறைவாக இருக்கிறபோது பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு சலுகையை பெற கீழ்க்கண்ட தகுதிகள் வேண்டும்:
               5 ஏக்கர் மற்றும் அதற்கு மேற்பட்ட விவசாய நிலம், நகராட்சி பகுதிகளில் ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட சதுரஅடி கொண்ட வீடு, 300 சதுரடி மற்றும் அதற்கு மேற்பட்ட பரப்பளவு கொண்ட வீட்டுமனை, நகராட்சி தவிர்த்து பிற பகுதிகளில் 600 சதுர அடி அதற்கு மேலும் வீட்டுமனை உள்ளவர்கள் இந்த இட ஒதுக்கீட்டை பெற இயலாது என தெரிவித்துள்ளது.
          இரண்டாவது:


           "டிக் டேக் ஆ ப்" வெச்சது இரண்டு பேருக்கு "ஆப்பு".
           சேலம் மாவட்டம் ஆத்தூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டரின் சிவலிங்கம் அவர்கள் ஆவார். இவர் இந்த போலீஸ் நிலைய ஜீப்பினை பேட்டரிக்கு சார்ஜ் செய்ய ஆத்தூர் விநாயகபுரத்தில் உள்ள ஒர்க்க்ஷாப்பில் விட்டுள்ளார்.
             இவர் ஜீப்பினை விட்டுவிட்டு அருகிலுள்ள டீக்கடைக்கு தேநீர் அருந்த சென்றுள்ளார்....
             அந்த ஒர்க்க்ஷாப்பில் வேலை செய்து வரும் சபரி என்பவருக்கு வந்தது "ஹீரோ "என்ற நினைப்பு. இங்குதான் இவருக்கும் இவரது நண்பருக்கும் இவர்களே வச்சிக்கிறாங்க "ஆப்பு".
              இந்த சபரி சாமி விக்ரம் ஸ்டைலில் ஜீப் மீது போஸ் கொடுக்க, அதனை அவரது நண்பர் சந்தோஷ் என்பவர் செல்போனில் பதிவிட்டு ஸ்டைலான வாசகத்துடன் அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.
          இந்த வீடியோ பரவ ஆரம்பித்ததும் ஆத்தூர் போலீஸ் காதுக்கு சென்றது...
           இப்போ நண்பர்கள் இரண்டு பேரும் பேட்டரிக்கு சார்ஜ் செய்யும் மறந்து போலீசின் சார்ஜ் ஷீட் பெற்று கைது செய்யப்பட்டுள்ளனர் . tic tac app இப்போ இவர்களுக்கு வச்சது பெரிய ஆப்பு!
        மூன்றாவது:
        இதுதாங்க இன்றைய ஹைலைட்டான விஷயம்!
         மத்திய அரசின் ட்ராய் பிறப்பித்த உத்தரவின்படி 150 சேனல்களை பெறுவதற்கு ரூ 600 ரூ வசூலிக்கப்படுவதை எதிர்த்து தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர் பொது நலச்சங்கம் நேற்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை கேபிள் டிவி ஒளிபரப்பு நிறுத்தியது.
          இதனால் நமது இல்லத்தரசிகள் தொலைக்காட்சி நாடகங்களை தொடர்ந்து பார்க்கமுடியாமல் திணறி விட்டார்கள்.... சிலர் பக்கத்தில் உள்ளDTH இனிப்பு உள்ள டிவியில் பார்த்து சமாளித்து விட்டனர். பலர் தான் நேற்று டிவி தொடரை பார்க்கமுடியாமல் சோகத்தில் ஆழ்ந்தனர் .
          ஒரு நல்ல செய்தி:
          காஷ்மீரை சேர்ந்த நமது ராணுவ வீரர் நசீர் அகமது அவர்கள் நவம்பர் 25இல் சோபியானில் ஆறு பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கையில் பங்குகொண்டு 2 பயங்கரவாதிகளை கொன்று விட்டு வீரமரணம் அடைந்தார்.... இவர் பயங்கரவாதியாக இருந்து மனம் மாறி நாட்டுக்கு சேவை செய்த ராணுவ வீரர்.
       இவருக்கு தாங்க, நாளை(ஜனவரி26) அசோக சக்ரா விருது வழங்கப்படுகிறது. இவருடைய வீரத்தை போற்றுவோம்...
அனைவருக்கும் குடியரசு தின வாழ்த்துக்கள்.....


எங்களது white rose trends தமிழ் சேனலினை யூட்யூபில் கண்டுகளியுங்கள்.
        Breaking News:
         தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் ஷரத் கமல், பங்காரு அடிகளார், சின்னப்பிள்ளை, நர்த்தகி நடராஜ், மருத்துவர் ஆர் வி ரமணி மற்றும் டிரம்ஸ் சிவமணி ஆகியோருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.... என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

         இதனை அனைவருக்கும் ஷேர் செய்யுங்க... அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.
   
     



       
Click here to shop cosmetics low cost👍:-
Amazon
         
      
Cosmetics

Thursday, January 24, 2019

ஜீவ சமாதி jivasamathi siddharkal


பார்வையாளர்கள் அனைவருக்கும்  white rose Emperor சார்பாக முதல் வணக்கம்.
       இன்றைக்கு ஜீவ சமாதி அடைந்த சித்தர்களை பற்றி காண்போம்....
        ஜீவசமாதி அடைபவர்கள் இல்லற வாழ்வை துறந்து கடவுள் மேல் பக்தி கொண்டு சித்தராக வாழ்ந்தவர்கள்!
        அவர்கள் , கடவுளுக்கும் பக்தர்களுக்கும் பலவகையில் சேவை செய்து கொண்டு வாழ்ந்தவர்கள்...
         இவர்கள் பக்தியோடு வைத்திய சேவை பொதுமக்களுக்கு செய்து வாழ்ந்துள்ளனர். அவ்வாறு பணி செய்தவர்கள் இனி பூவுலகில் பூதவுடலை தாங்கி இருப்பதை வெறுத்து கடவுளிடம் ஐக்கியமாகிவிட முடிவு செய்து விடுவார்கள்.
        இவர்கள் தானாகவோ தனது சிஷ்யர்கள் மூலமாகவோ உயிரோடு இருக்கும்போதே சமாதி நிலை தயார் செய்து விடுவர். ஒரு குறிப்பிட்ட நாளில் பக்தர்களுக்கும் சிஷ்யர்களுக்கும் அறிவித்துவிட்டு சமாதி உள்ளே உயிரோடு இறங்கி தியானத்தில் அமர்வது வழக்கம். அதன் பிறகு அந்த சமாதி சீடர்களால் உயிரோடு தியான நிலையில் இருக்கும்போதே மூடப்பட்டுவிடும் . அந்த முனிவர்கள் தியான நிலையிலேயே கடவுளோடு ஐக்கியமாகி விடுவர்.
            இவ்வாறு ஜீவசமாதி உள்ள இடத்தில் அனைத்து நல்ல சக்திகளும் சுழன்றுகொண்டே காலம் காலத்திற்கு இருக்கும். நாம் அந்த இடத்தை அடையும் போது நம் மனதில் இதனை உணரலாம்....
            பழங்காலத்தில் அரசர்கள் குறிப்பிட்ட அரசு ஆட்சிக்கு பிறகு தனது ஆட்சியை தனது மகன் அல்லது சரியான நபரிடம் ஒப்படைத்துவிட்டு வடக்கிருந்து உண்ணா நோன்பு மேற்கொண்டு உயிர் துறப்பதும் உண்டு. இதுவும் ஒரு ஜீவ சமாதி நிலையே.
            சரி ஜீவசமாதிகள் உள்ள இடங்கள் சிலவற்றை பார்ப்போம்....
       
  மதுரை மாவட்டம் அழகர்கோயில்  மலைமேல் மலைமீது ஏறிச் சென்றால் பகவான் இராமதேவர் சித்தர் ஜீவசமாதி உள்ளது. பழமுதிர்ச்சோலை அடுத்து ராக்காயி தீர்த்தத்திற்கு அடுத்து இரண்டு கிலோமீட்டர் வனப்பகுதிக்குள் சென்றால் இவருடைய ஜீவசமாதியை தரிசிக்கலாம்.
           அழகர்கோயில் செல்பவர்கள் முடிந்தால் தவறாமல் சென்று தரிசனம் செய்யுங்கள்....
           கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் ராமலிங்க அடிகளின் ஜீவசமாதி உள்ளது. அவர் ஒரு அறையின் உள்ளே சென்று ஜீவசமாதி அடைந்ததாக கூறப்படுகிறது....
          இவர் , வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன் என்ற வாசகம் காலத்தால் அழியாதது.
          பழனி முருகன் கோயில் உள்ளே போகரின் ஜீவசமாதி உள்ளது....
       
மகான் ஸ்ரீ உறி கட்டி சுவாமிகளின் ஜீவ சமாதி கும்பகோணம்to மயிலாடுதுறை சாலையில் குத்தாலம் அருகே சேத்திர பாலபுரம் எனுமிடத்தில் உள்ளது.
         

  திருச்செந்தூர் ராஜகோபுரம் கட்டிய ஐந்து பேரில் மூன்று பேரின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவில் எதிரே உள்ளது. அந்த வமூர் ஆறுமுக சுவாமிகள், காசி சுவாமிகள் ,மௌன சுவாமிகள் இவர்களின் சமாதி உள்ளது. நான்காவது சித்தரின் ஜீவ சமாதி கோயிலில் தெற்கே உள்ளது. ஐந்தாவது சித்தர் தவத்திரு தேசிய மூர்த்தி சுவாமிகள் ஜீவசமாதி  திருச்செந்தூர் to திருநெல்வேலி சாலையில் ஆழ்வார்தோப்பு எனும் ஊரில் ஆற்றங்கரையில் உள்ளது.
     
   சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ள பதஞ்சலி முனிவர் ஜீவசமாதி திருச்சிto சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறுகனூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில் உள்ளது. இவரின் ஜீவசமாதி உள்ளது. இந்த பிரம்மபுரீஸ்வரர் கோவில் தான் நமது தலையெழுத்தை மாற்றி எழுதும் கோயிலாகும்.
       
இதேபோல பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூர் நகரில் புதிய பஸ் நிலையம் அருகே நகராட்சி ஒட்டிய சாலை வழியாக அரை கிலோ மீட்டர் தூரத்தில் பிளாட்டுகள் குடியிருப்புகள் அருகே ஸ்ரீலஸ்ரீ தலையாட்டி சித்தர் ஜீவசமாதி உள்ளது. இவர் வைத்தியம் செய்து சித்தராக வாழ்ந்தவர். அருகிலுள்ள பிரம்மரிஷி மலையில் சென்று தியானம் மேற்கொண்டு சித்தராக வாழ்ந்தவர். இவரின் ஜீவசமாதியை நடை பயணமாக சென்று தரிசிக்கலாம்.

         இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்... எங்களதுwhite Rose Trends  யூடியூப் சேனலில் முன்பு கூறிய கொள்ளு குழம்பு ரெசிபிupload செய்யப்பட்டுள்ளது. இதன்படி சமைத்து எங்களுக்கு கமெண்ட் செய்யுங்கள்...
     மீண்டும் உங்களை சந்திக்கும் வரை விடைபெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.


         
         
      


White Rose Trends
You tube channel
கொள்ளு குழம்பு செய்வது எப்படி?