பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor வணக்கம்.
இன்று சமையல் குறிப்பு பார்ப்போம்.....
இன்றைய சமையல் பாகற்காய் வருவல் சமைப்பது பற்றியது....
இதற்கு தேவையான பொருட்கள் ingredients:
சரியான அளவில் பாகற்காய் நான்கு
மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன், வர மிளகாய் தூள் 1 1/2 ஸ்பூன் , உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொரிப்பதற்கு சன் பிளவர் ஆயில் 250 ml.
முதலில் பாகற்காயை ஒரு பாத்திரத்தில் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி போட்டு அதில் பாகற்காயை அலசி இரண்டு நிமிடம் வைக்க வேண்டும்.
பின்பு நல்ல தண்ணீரில் பாகற்காயை கழுவி அதை முன்பும் பின்பும் உள்ள முனையினை நீக்கிவிட்டு
பாகற்காயை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
பின்பு அதில் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் உப்பு ஆகியவை போட்டு நன்றாகப் பிசறி விட வேண்டும்.
பத்து நிமிடம் அப்படியே ஊறவிட வேண்டும்.
அடுத்து, அடுப்பில் அடி கனமான பாத்திரத்தை வைத்து எண்ணெய் 250ml ஊற்றி எண்ணை காய்ந்ததும் பாகற்காயை அந்த எண்ணெயில் கொஞ்சம் கொஞ்சமாக வறுத்து எடுக்க வேண்டும்.
வறுக்கும் பொழுது எண்ணை காய்ந்தவுடன் இளம் சூடாக தீயை சிம்மில் வைத்து பாகற்காயை பொன்னிறமாக வறுத்தெடுக்க வேண்டும்.
வறுக்கும்போது அதை தீயாமல் பொன்னிறமாகும் போதே வறுத்து எடுத்துவிட வேண்டும்.
இதனை ஒரு தட்டில் வைத்து உணவு பரிமாறும் போது சிறிது சூடாக இருக்கும்போதே குழந்தைகளுக்கு பரிமாறினால் பெரியவர்களும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.
கசப்பு என்பதே தெரியாது.
பாகற்காய் பயன்கள்:
பாகற்காய் சாப்பிடுவதால் வயிற்றில் புழுக்கள் உண்டாகாது.
மண்ணீரல் ஆரோக்கியமாக செயல்படும். இது சிவப்பணுக்கள் உற்பத்திக்கு பெரும் பங்காற்றும்.
யூரிக் ஆசிட்டினை சமநிலையில் வைக்கும். இதனால் சிறுநீரக கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும்.
No comments:
Post a Comment