பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
இன்று நகர்ப்புற வீடுகள் மற்றும் கிராமப்புறங்களில் கூட வீட்டை உடைத்து திருடுபவர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.
முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்து வந்தன. தாத்தா பாட்டி என்று பாதுகாப்புடன் குடும்பங்கள் பேரன் பேத்திகள் என வசித்து வந்தனர்.
இதனால் கணவன் மனைவி குழந்தைகள் தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் கோயில்கள் சென்று வரவும் உடல்நிலை சரியில்லாதபோது வெளியூர் மருத்துவமனையில் தங்குதல் போன்று நிகழ்வின்போது பெரியவர்கள் வீட்டை பாதுகாத்துக் கொள்வார்கள். வீடு பூட்டப்பட்டு நிகழ்வே நடக்காது. இதனால் எப்பொழுதும் வீட்டில் யாராவது தங்கியிருப்பார்கள்.
வீட்டினை பூட்டினால் தானே திருடன் வீட்டின் உள்ளே நுழைவதற்கு?
ஆனால் இப்பொழுது அப்படி அல்லவே?
நாம் நமக்கு என்ற எண்ணம் போய் நாங்கள் என் மனைவி மக்கள் என எண்ணம் வந்து திருமணமான மூன்று மாதத்திலேயே தனிக் குடித்தனம் போய் விடுகின்றனர்.
அரசு வேலை காரணமாக மணமானவர்கள் தனது சொந்த ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி புதிய இடத்தில் தனிக்குடித்தனம் தங்குகின்றனர்.
இதனால் நாம் அலுவல் விஷயமாக கோயில் குளம் மருத்துவமனைக்காக சொந்த பந்தங்களை பார்க்கவும் இரவில் வீட்டை பூட்டி செல்வது கட்டாயமாகிறது.
பகலிலும் கணவன் மனைவி இருவரும் அலுவல் பார்ப்பவர்களாகவும் அவர்களது குழந்தைகளும் பள்ளி செல்வதால் பகலிலும் வீட்டை பூட்ட வேண்டிய சூழ்நிலை நேருகிறது.
பகலிலும் இரவிலும் நோட்டமிடும் திருடர்கள் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள முழு நகைகள் சொத்தையும் திருடிச் சென்று விடுகின்றனர்.
இதனால் நாம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த சொத்து ஒரே இரவில் திருடு போய்விடுகிறது.
சரி பாதுகாப்பாய் இருக்கட்டும் என்று வங்கி லாக்கரில் வைக்கலாம் என்றால் அதனுடைய நிலைமையும் தற்பொழுதும் கேள்விக்குறியாக உள்ளது.
சரி இதற்கு என்னதான் தீர்வு?
இரவு வீதி ரோந்து போலீஸ் என்று தனி ரோந்து போலீஸ் recruitment தேர்வு செய்யப்பட வேண்டும்.
காவல், தீயணைப்பு துறை என்பது போல இதுவும் தனி ரோந்து போலீஸ் நிலையம் வேண்டும்.
இவர்களை தற்போதைய காவல்துறையுடன் கலக்கக்கூடாது.
தற்போதைய காவல் நிலைய காவலர்களையே இரவு ரோந்துக்கு அனுப்புவது, அவர்களுடைய வேலைப்பளு மன அழுத்தம் தூக்கமின்மை காரணமாக அவர்களால் இரவு ரோந்து முழு திருப்தியாக ஈடுபடாமல் போய்விடுகிறது. அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை.
இரவு ரோந்து போலீஸ் recruitment மூலம் திடகாத்திரமான வாலிபர்களை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை தேர்வு செய்யலாம்.
இவர்களைக் கொண்டு அரசானது, டூவீலர் வாகனம் வழங்கி இரவு 11 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை நகர்ப்புற சிறு நகர்ப்புற சாலைகளிலிருந்து செல்லவும், நகர்புற சந்துகள், வீதிகளில் ரோந்து செல்ல வேண்டும். பூட்டிய வீடுகளில் இருந்தால் ஒரு நிமிஷம் இறங்கி பாதுகாப்பு இருக்கிறதா? என கள ஆய்வு செய்து புறப்பட வேண்டும்.
இரவில் நடு இரவில் நடமாடும் மற்றும் வாகனங்களில் சந்தேகப்படும் படி சுற்றுகிறர்களை அவர்களின் டூவீலர் பெட்டிகள் சீட்டுக்கடியில் ஏதாவது உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
திருடுகிற நோக்கில் ஏதாவது ராடுகள் கத்திகள் வைத்திருக்கிறார்களா? என ஆய்வு செய்ய வேண்டும்.
இரவில் சிக்குகிறது திருடர்கள் சந்தேக திருடர்களை ரோந்து போலீசார், ரோந்து போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உடனடியாக காவல் வாகனம் உடனடியாக வந்து கைது செய்து வந்து காவல் நிலையத்தில் சிறை வைக்கவேண்டும்.
பொதுமக்கள் திருட்டு நடந்தால் அல்லது திருட்டு நடக்கும் சமயத்தில் உடனடியாக உதவி எண்100, 108 போல இத்துறைக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய பெண்கள் இரவில் பஸ்நிலையத்தில் எங்கு செல்வது என தெரியாமல் தவிப்பர்.
இவர்களை இனம் கண்டு ரோந்து காவல் பிரிவினர் தலைமை நிலைய
பெண் காவலரை அழைத்து தவிக்கும் அபலைப் பெண்களை இரவில் பெண்கள் காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிறகு சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தால் அந்தப் பெண்களுக்கு அவர்கள் அரசு உதவிகளை வழங்குவார்கள்.
இதனால் அந்த பெண்கள் சமூக விரோதிகளின் பார்வையிலிருந்து தப்பிப்பர். அந்த அபலைப் பெண்கள் இரவில் எங்கே செல்வது என தெரியாமல் தற்கொலை செய்யாமல் தடுக்க பேருதவியாக இருக்கும்.
ரோந்தின்போது பெண் திருடிகள் அகப்பட்டால் அந்த காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களை வரவழைத்து பெண்களை கைது செய்து காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கலாம் அல்லது அரசு காப்பகத்தில் இரவு காவல் வைக்கலாம் . பின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
சரி இதற்கு அரசுக்கு கோடிக்கணக்கில் செலவாகும் அல்லவா?
அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படுமல்லவா? இந்த செலவினை அரசு எப்படி சமாளிப்பது?
மாநகராட்சி,நகராட்சி , பஞ்சாயத்து சார்பில் ரோந்து காவல் வரி ஆண்டு வாரியாக வீடுகள் மீது வரி வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.
வங்கி வணிக நிறுவனங்கள் மீது இரவு காவல் பாதுகாப்பு வரி ஆண்டு வரியாக நிர்ணயம் செய்து வருவாய் ஈட்டலாம்.
இந்த நல்ல திட்டத்தினை, இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழும் நமது தமிழகத்தில் செயல்படுத்தினால் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
இதைக் காணும் அரசு அதிகாரிகள் அரசுக்கு எடுத்துரைத்து செயல்படுத்தினால் மிக நன்றாக இருக்கும்.
இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
எங்களது youtube சேனல் white rose trends Tamil channelனை கண்டுகளியுங்கள்.
அன்புடன் white rose Emperror முத்துகிருஷ்ணன்.
No comments:
Post a Comment