Thursday, February 7, 2019

சென்னை குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை கால்கள்

!
     
           பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
         இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க கடந்த 21ம் தேதி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை கால்கள் பற்றிய தகவல்கள்தான் பெரிய விஷயமாக பேசப்பட்டது.
         அவர் ஒரு துணை நடிகை என அறியப்பட்டது. அந்தப் பெண்ணை அவரது கணவரை துண்டு துண்டாக வெட்டி பல பகுதியில் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் கணவரும் கைது செய்யப்பட்டார்.

         கடந்த 21ம் தேதி பெருங்குடி அருகில் பள்ளிக்கரணை ஒதுக்குப்புறமான இடத்தில் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளில் ஒரு பெண்ணின்
வலது கை மற்றும் கால்கள் இருந்ததை குப்பை கிடங்கு  ஊழியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே போலீஸ் வந்து விசாரணையை தொடங்கினர்


         கைப்பற்றப்பட்டு பெண்ணின் வலது கையில் டிராகன் உருவம் பச்சை பச்சை குத்தப்பட்டும், தோல் பட்டையில் சிவன் பார்வதி பச்சை குத்தப்பட்டிருந்தது. இதை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியது.
        தமிழகத்தில் காணாமல் போன பெண்களின் விபரத்தை அறிய  முற்பட்டபோது ஒரு சில விபரங்கள் ஒத்துப்போக முற்பட்டது.
          தூத்துக்குடியில் ஒரு பெண்ணின் தாயார்  போலீஸ் நிலையத்தில் தனது பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார்.
          அந்தப் பெண்ணின் பெயர் சந்தியா என்றும் அவரது கணவர் பாலகிருஷ்ணன் என்பவருடன் சென்னையில் வசித்து வரும் தனது மகள் தற்போது விவாகரத்து பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

         கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது கணவருடன் சென்னைக்கு சென்ற தனது மகளை தொடர்ந்து பேச வேண்டும் என்றபோது அவரது கணவர் நாங்கள் வெளிநாடுக்கு பாஸ்போர்ட் எடுத்து செல்ல உள்ளோம் அதனால் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்.
         இந்த தகவலை அறிந்த போலீசார் சென்னையில் உள்ள அவரது கணவரை அவரது வீட்டில் தொடர்பு கொள்ள முயன்றனர்.

       அவர் ஒரு சினிமா இயக்குனர் என்றும் காதல் இலவசம் என்ற படத்தை இயக்கி உள்ளதும் தெரியவந்தது.
அருகில் விசாரித்தபோது இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பாலகிருஷ்ணன் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்ததாகவும் அவர் தனது மனைவி
எனமும் கூறியிருந்த விபரம் தெரியவந்தது.


         ஆனால் அவரைப் பற்றிய விவரத்தை மேலும் அறிய போலீசுக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
        இதனால் சந்தேகமடைந்த போலீஸ் தொடர்ந்து விசாரிக்கவே தனது மனைவியை வீட்டில் வைத்து கொன்றுவிட்டதாகவும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி விட்டதாக தெரிவித்தார்.
         ஒரு பகுதியை குப்பை கிடங்கில் போட்டதாகவும் மற்றொரு இடுப்பு உள்ள தொடை வரை உள்ள உடல் பாகத்தை ஈக்காட்டுத்தாங்கல்-ஜாபர்கான்பேட்டை இடையே பாலத்தில் அடியில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.
        உடனடியாக அங்கு சென்ற போலீசார் அந்த பாகத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
         கைதான அந்த பாலகிருஷ்ணன்"18 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் சந்தியாவுக்கும் திருமணம் நடந்ததாகவும், மாய வர்மன் என்ற மகனும் யோகமுத்ரா என்ற மகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

        தனது மனைவி சினிமா ஆசை கொண்டு படத்தில் நடிக்க முற்பட்டு பல ஆண்களுடன் பழகுவது தெரியவந்ததால் அதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டது விசாரணையில் தெரியவந்தது .
       பிரிந்து சென்ற சந்தியா மீண்டும் சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்தார் இந்த தகவல் அவரது கணவருக்குத் தெரிய வந்ததால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
       இதனால் கடந்த 15ம் தேதி சந்தியாவை வீட்டுக்கு அழைத்து வந்து நீ சினிமாவில் நடிக்க வேண்டாம் என கூறி உள்ளார்.
      இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது சந்தியா இரவில்வெளியே செல்ல முற்பட்டது சுத்தியல் கொண்டு அவரது கணவர் சந்தியாவை தலையில் தாக்கியுள்ளார் .அதனால் சந்தியா இறந்துவிட்டார்.
        அதனால் சந்தியாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி 4 பார்சலாக கோணிப்பையில் போட்டு பல பகுதியில் தூக்கி எறிந்துவிட்டார் .
        இதில் இடது கை கால் பகுதி கிடைத்தது இடுப்புப் பகுதியில் தற்போது கிடைத்துள்ள.
        தலையும் ஒரு கையும் இன்னும் கிடைக்கவில்லை.
        அதை போலீஸ் தொடர்ந்து தேடி வருகிறது.
         முதலில் தனது மனைவி பற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்த அந்த பாலகிருஷ்ணன் அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆராய்ந்தபோது சந்தியாவின் கையில் பச்சை குத்தப்பட்டு உள்ளது தெரியவந்தது.
        இதனால் அவர் தான் கொலை செய்தது ஒப்புக்கொண்டுள்ளார்.
         பாலகிருஷ்ணன் சைக்கோ போன்ற மன நிலையில் உள்ளவர் என்றும் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப் படுத்தி இருக்கிறார் எனத் தெரிய வருகிறது.
        சந்தியாவுக்கு பலதடவை மொட்டை அடித்து சித்திரவதை செய்து உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
         இந்த பாலகிருஷ்ணன் ஜாபர்கான்பேட்டையில் ரூ 5000 வாடகையில் 20,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வசித்து வந்துள்ளார் .அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் அட்வான்ஸ் கழித்து வருவதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

        இப்படி கோபத்தில் செய்யும் காரியங்கள் கொலையில் முடிவது சென்னையில் தொடர்ந்து நடந்து வருவது தெரிய வருகிறது.
மீண்டும் அடுத்த தகவலுடன் சந்திக்கிறேன். 
        அனைத்து பார்வையாளர்களும் எங்களது white rose trends Tamil channelயையும் தொடர்ந்து பாருங்கள்.
         நன்றியுடன் white rose Emperor முத்துகிருஷ்ணன்.
       

No comments:

Post a Comment