பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம் நகரின் உள்ளேயே கிழக்கே அரசலாற்றில் வடகரையில் அமைந்த கோயில், திருவிண்ணகர் உப்பிலியப்பன் திருக்கோயிலாகும்.
உப்பு இல்லாத உணவுகளை மனைவி சமைத்தாலும் மனம் கோணாமல் உப்பில்லா உணவு சமையலை ஏற்றுக்கொண்டவர் உப்பிலியப்பன் ஆவார்.
மிருகண்டு முனிவரின் புதல்வர் மார்க்கண்டேயரின் பூமிதேவி மகளாகப் பிறந்தார்.
அவளுக்கு திருமண வயதானதும் மாப்பிள்ளை தேடியபோது நம்பெருமாள் வயதான கிழவனாக உருவம் பூண்டு மார்க்கண்டேயரிடம் சென்று பூமி தேவியை பெண் கேட்டார்.
அதற்கு அவர்"அழகே உருவான எனது சின்னஞ்சிறியவளான எனது மகளை எப்படி வயதான உங்களுக்கு மண முடித்துக் கொடுப்பது? அவளுக்கு சமைக்கவே தெரியாது! அவள் உப்பு போடாமல் சமைத்து விட்டாளல் கோபம் கொண்டு சபித்து விடுவீரே? என்றார்.
அதற்கு வயதான தோற்றத்தில் வந்த நம்பெருமான்"உப்பில்லாமல் சமைத்தாலும் அதனை நான் விரும்பி ஏற்பேன்"என விடாப்பிடியாக பெண் கேட்டார்.
இந்த பெரியவர் யார் என வினா கொண்டு இந்த மார்க்கண்டேயன், சிவபெருமானிடம் வேண்ட, சிவபெருமான்"வந்திருப்பது மகாவிஷ்ணு"என சொல்ல பிறகே பெண் கொடுத்தார்.
அந்த உப்பிலியப்பன் கோவிலுக்கு மார்க்கண்டேயர் ஷேத்திரம், செண்பகவனம், ஆகாச நகரம் என வேறு பெயர்களும் உண்டு.
இந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் வீதியிலேயே ஒரு வீதி தள்ளி ரோடு மேலேயே உள்ளது.
மூலவராக உள்ள உப்பிலியப்பனை தரிசிக்கும்போது அவரது உப்பலான கண்ணத்தினை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... இதனை நேரில் தரிசித்த பக்தர்கள் அனைவரும் உணர்ந்திருப்பர்.
இங்குள்ள கோபுரம் 50 அடி உயரம் ஐந்து நிலை கொண்டுள்ளது.
இதனுள்ளே தசாவதார சிற்பங்கள், 108 திவ்யதேச சிற்பங்களை காண கண் கோடி வேண்டும்.
இவர் சாலிகிராம மாலை அணிந்து கொண்டு காட்சியளிப்பார்.
லவன வர்ஜிதம் சாமி என் பெயர் பெற்றவர்.
வேங்கடம் செல்ல முடியாதவர்கள் இவரை தரிசித்தால் அவரை தரிசித்த பலன் கிடைக்கும்.
எல்லா கோயில்களிலும் குளத்தில் பகலில் மட்டுமே நீராட வேண்டும். இங்குள்ள பகலிராப்பொய்கை எனும் தீர்த்தக்குளத்தில் பகலிலும், இரவிலும் நீராட புண்ணியம் கிடைக்கும்.
இந்தக் கோவில் உள்ளே நுழைந்ததுமே இங்குள்ள யானை நம்மை தும்பிக்கையை நீட்டி வரவேற்கிறது. அனுமானும் நமக்கு காட்சி தருகிறார் .
நாமும் நமது குழந்தைகளுக்கும் இங்கு துலாபாரம் வழங்கலாம்.
இங்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் உப்பு இல்லாமல் உப்பிலியப்பனுக்கு படைக்கப்படுகிறது.
இங்கு வழங்கப்படும் பிரசாதங்களும் உப்பில்லாமல் தயாரிக்கப்படுகிறது.
உப்பிலியப்பன் தனது கரத்தில் உள்ளங்கையில்" மாம் ஏகம் சரணம் விரஜி"என எழுதப்பட்டிருக்கும். காப்பாற்ற நான் இருக்கேன் என்பது இதன் பொருளாகும்.
கும்பகோணத்திற்கு ஆன்மீகப்பயணம் மேற்கொள்பவர்கள் தவறாமல் உப்பிலியப்பனை தவறாமல்
தரிசனம் செய்யுங்கள்.
இந்த விஷயம் உங்களுக்கு பிடித்து இருக்கும். இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை white rose Emperor முத்துகிருஷ்ணன்.
No comments:
Post a Comment