Monday, February 4, 2019

04.02.2019 தை அமாவாசை முன்னோர்களுக்கு படையல்



       இன்று 04.02.2019 விளம்பி வருட தை அமாவாசை நாளாகும்.
         இந்த வருடத்திய தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. திங்கள்கிழமையில் வரும் அமாவாசை மிக்க சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

          மேலும், திருவோண நட்சத்திரத்தில்  வந்தது தனிச்சிறப்பாகும். இந்த திருவோண நட்சத்திரம் திருமாலுக்கு உகந்தது.
           மாதா மாதம் தனது முன்னோர்களுக்கு பலர் படையில் படைப்பது வழக்கம்.
           ஆனால் வருடத்தில் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசைகளில் நமது முன்னோர்களுக்கு படைப்பது மிகச் சிறந்தது.
             இந்த தை அமாவாசை நேற்று இரவு 12 .58 முதல் நாளை விடியற்காலை 3.01 வரை தொடர்கிறது.
              இன்று திங்கள் கிழமை காலை முதலே நீர்நிலைகளில் குறிப்பாக ஆற்றில், கடலில் நமது முன்னோர்களுக்கு அடிப்படையில் செய்தனர்.


            நமது முன்னோர்களான பித்ருக்கள் எமதர்மனின் அனுமதி பெற்று உலகத்திற்கு தனது வாரிசுகக்ளை  காண ஆசையுடனும் பசியோடும் வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இன்று நீர்நிலைகளிலும் பித்ரு படையல் செய்தனர்.
          வீடுகளில் அவர்களுக்கு படையல் வைத்து கும்பிட்டனர். இதனால் அவர்கள் மனம் குளிர்ந்து ஆசி வழங்குகிறார்கள்.
           தமிழகத்தில் ஆறுகள் உள்ள நிலைகளில் குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கும்பகோணம் மகாமகத் தீர்த்தக்குளம் போன்ற நீர்நிலைகளில் பித்ரு படையல் செய்யப்பட்டது.
        அதேபோல கடல்களிலும் குறிப்பாக அக்னி தீர்த்தம் உள்ள ராமேஸ்வரம் திருப்புல்லாணி வேதாரண்யம் கோடியக்கரை பூம்புகார் உள்ளிட்ட இடங்களிலும் பித்ரு படையல் செய்யப்பட்டது.

         கடல்களில் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மட்டுமே இந்த பூஜை செய்ய வேண்டும். ஆனால் ராமேஸ்வரத்தில் மட்டும் வருடம் முழுவதும் முன்னோர்களுக்கு படையல் செய்யலாம்.


            பலருக்கு முன்னோர்கள் சாபம் மூன்று தலைமுறையாக தொடரும். இதனால் அவர்களது குடும்பங்களில் திருமண தடை, வாரிசு இல்லாத நிலை ,சண்டைகள் தொடர்தல் ,அகாலமரணம் போன்ற வருத்தமான நிகழ்வுகள் வீடுகளில் தொடரும் . இதனால் அவர்கள் இன்று தை அமாவாசையில் படையல் செய்தும் வீடுகளில் அவர்களுக்கு படையல் செய்து வழிபட்டு இதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
            இதனை இன்று பலர் செய்து அவர்களது சாபத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.
              மேலும் தனது பகுதியில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து அந்த பசுக்களின் மூலமும் சாபம் நீங்குகிறது.
               வீடுகளில் படையல் செய்யவும் ஏழைகளுக்கு முடிந்த அளவு தர்மம் செய்தார்கள்.
          மேலும் வீடுகளில் இன்று முன்னோர்களுக்கு படைத்த முதல் உணவை காக்கைகளுக்கு வைத்த பிறகு அவர்கள் சாப்பிட்டனர்.
            இன்று பெண்கள் அம்பாள் கோயிலுக்கு சென்று தங்கள் குறைகளை வேண்டினால் அம்பாளின் பரிபூர்ண ஆசி கிடைக்கும் என்பதால் பல அம்பாள் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.
           இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும்.
              இதனை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
               இன்று எங்களது white rose trends Tamil channelல் பாகற்காய் வறுவல்(Indian bitter guord fry) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது இதனை பார்த்து லைக் செய்யவும்.

             மீண்டும் அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை நன்றியுடன்white rose Emperror முத்துக்கிருஷ்ணன்.   

     

No comments:

Post a Comment