பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
ஆப்பிரிக்க கண்டத்தில் மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு சோமாலியா நாடாகும்.
இம்மக்கள் சோமாலிய மொழி பேசுகின்றனர்.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டி, கென்யா ,ஏமன் நாடுகளை எல்லை நாடுகளாகவும், கிழக்கே இந்திய பெருங்கடலை எல்லையாக கொண்ட நாடாகும்.
இதன் தலைநகராக மொகடீசு உள்ளது.
இந்த நாடு இத்தாலியிடமிருந்து ஜூலை 1 , 1960 சுதந்திரம் பெற்று ஆட்சி மாற்றங்களால் உள்நாட்டுப் போராக மாறி இன்று தம் குழந்தைகளை எலும்பும் தோலுமாக உள்ளதை இந்த உலகம் பார்த்து வேதனை அடைகிறது.
இது2.46 லட்சம் சதுரமைல் பரப்பளவைக் கொண்டது.
இதன் நாணயமாக சோமாலி ஷில்லாங் உள்ளது.
இந்த நாடு பீடபூமிகள் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளை கொண்டுள்ளது. ஒழுங்கற்ற மழை செய்வதால் இது ஒரு வெப்ப நாடாகவே உள்ளது. இந்த நாடு ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படுகிறது.
தற்கால மனிதர்களின் மூதாதையர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்தான் எனவும் வரலாறு கூறுகிறது.
தற்போது 12 மைல் அகலமுடைய பாப்-எல்-மாண்டேப் நீரிணை (இது செங்கடலில் உள்ளது). 50000 ஆண்டுகளுக்கு முன் ஆழம் குறைவான பகுதியாக இருந்ததால் இப்பகுதியில் வசித்த பழங்கால மக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றனர் என கருத்து நிலவுகிறது.
ஆப்பிரிக்க வம்சாவளியில் ஒரே ஒரு வம்சாவளி பெண் வழித்தோன்றல்களின் மரபணு காப்லோ குரூப் எல்3 மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியே காணப்படுகிறது.
காப்லோ குரூப் எல்3 என்பதிலிருந்து பிரிந்தவையே காப்லோ குரூப் என்,காப்லோ குரூப் எம் ஆகும்.
இங்கிருந்து வெளியேறிய பழங்கால குழுவினரில் இரண்டில் ஒன்று செங்கடலை தாண்டி இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது.
மற்றொரு குழு நைல் நதியை கடந்து வடபகுதி சென்று சீனாய் தீபகற்பம் வழியாக ஆசியா வந்து பிறகு ஐரோப்பா கிழக்காசிய சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
இவர்களின் மரபணு காப்லோ குரூப் என உடையதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
பழங்கால எகிப்தியர்கள் புண்ட் (கடவுளின் நிலம்) எனக் கருதிய பகுதி வட சோமாலியா சிபூட்டி எரித்தியா சூடான் ஆகியவற்றை கொண்டதாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
இவர்கள் மதிப்புமிக்க பொருட்களான சாம்பிராணி, குங்கும தூபம் மற்றும் மசாலா பொருட்களை வழங்குபவர்களாக பழங்கால சோமாலிய கடலோடிகள் திகழ்ந்துள்ளனர்.
இவர்கள் முதல் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இந்தியாவுடன் வணிக தொடர்பு இருந்து வந்துள்ளனர்.
1869 இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது முதல் தங்கள் நாட்டுக் கப்பல்கள் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக அந்த நிலப்பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் நல்லது எனக் கருதி பல நாடுகள் தொடர்ந்து கைப்பற்ற முனைந்தன.
1890 முதலே இத்தாலி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு 1935 வரை இரண்டாம் எத்தியோப்பியா போரில் எரித்திரியா எத்தியோப்பியா சோமாலியா பகுதிகளை கைப்பற்றி இவைகளை காலனி நாடுகளாக வைத்திருந்தது.
இரண்டாம் உலகப்போரில் முசோலினி தோற்கடிக்கப்பட்ட பிறகு நேச நாடுகள் இங்கிருந்து இத்தாலியர்களை வெளியேற்றியது.
உலகத்துக்கே தனது மூதாதையர்களை தந்த சோமாலியா உள்ளிட்ட பகுதிகள் இன்று உள்நாட்டுப்போரால் தன் வரலாற்றுப் புகழை இழந்து பசிக்கு ஏங்கும் குழந்தைகளை உலகுக்கு காட்டி தலைகுனிந்து நிற்கிறது.
உலக புகழ்பெற்ற புகைப்படம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.
அதில், எலும்பும் தோலுமாக ஒரு உயிருள்ள குழந்தை திறந்தவெளியில் அமர்ந்திருப்பது போலவும் அந்த குழந்தையின் சாவை எதிர்பார்த்து ஒரு பிணந்தின்னி கழுகு அந்தக் குழந்தையை பார்த்து உணவுக்காக காத்திருப்பது போலவும் அந்த புகைப்படம் இருந்தது.
இந்த புகைப்படம் சோமாலியாவின் உள்நாட்டுப் போரால் இன்றைய நிலைமையை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கும். இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperror முத்துகிருஷ்ணன்.
No comments:
Post a Comment