பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose emperror.. வணக்கம்.
வங்கப் பிரிவினை பற்றி தெரியாதவர்கள் எவருமே இருக்க
முடியாது.
இந்தியர்கள் ஜாதி மதங்களை கடந்து பிரிட்டிஷ் நேரடி ஆட்சிப் பகுதியிலும், சுதேசி மன்னர்களின் கீழிருந்த இந்தியர்கள் அனைவரும் முழு சுதந்திரத்தை நோக்கி போராட்டங்களை நடத்தி வந்தனர்..
இது பிரிட்டிஷாரின் ஆட்சியாளர்களுக்கு சரியாக படவில்லை.
இதே நிலைமை போனால் நாம் மூட்டை கட்டிக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் நிலைமை வரும் என பிரிட்டிஷார் எண்ணினர்.
எனவே அவர்கள் இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் முயற்சியில் இறங்கினர்.
அதில் அவர்கள் வெற்றியும் பெற்றனர்.
கர்ஸன் வில்லே என்ற ஆங்கில உயர் அதிகாரி திட்டப்படிதான் இங்கிலாந்து அரசிடம் இருந்து அனுமதி பெற்று இந்திய வைஸ்ராய் கர்சன் பிரபுவால் வங்கப் பிரிவினை திட்டம் கொண்டுவரப்பட்டது.(இரண்டு 'கர்சன்'கள் சேர்ந்து நாட்டைக் கெடுத்தார்கள்)
வங்கப் பிரிவினையால் இந்து முஸ்லிம் ஒற்றுமை விலகியது.
இது இந்திய தேச தலைவர்கள் பலருக்கு கோபத்தை மூட்டியது.
லண்டனில் மேற்படிப்புக்காக தங்கியிருந்த இளைஞர்கள் மற்றும் லண்டனில் வாழ்ந்து வந்த ஷாமாஜி கிருஷ்ண வர்மாவுக்கும் கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
அபிநவ பாரத சங்கம் என்ற தீவிரவாத அமைப்பை உருவாக்கிய வி.டி.சவர்க்கார் , வவேசு ஐயர் போன்றோர்களும் மதன்லால் திங்கரா என்று இந்திய இளைஞர் மூலம் 1909 ஜூலை ஒன்றாம் தேதி கர்சன் வில்லே என்ற ஆங்கில உயர் அதிகாரியை சுட்டுக் கொன்றார்.
இந்த ரகசிய கொலைவழக்கில் பிரிட்டிஷ் போலீசார் ஷாமாஜி கிருஷ்ண திங்கரே அவர்களை தொடர்புபடுத்தி வழக்கு போட்டது.
இதனை பாரதியார் அவர்கள் இந்தியா இதழில் 1909 ஜூலை 24ஆம் தேதி கட்டுரை மூலம் கண்டித்தார்.
"தேசத்தில் நடக்கும் அநியாயத்தினால் சில மன வெறுப்பு கொண்டு பைத்தியக்காரர்கள் போல செய்யும் செயல்களுக்கு முக்கிய காரணம் அநீதி தானே!
அதை விட்டு ஷாமாஜி அவர்கள் மீதுவீண் பழி போடுவது சரியா"என எழுதியுள்ளார்.
பாரதிக்கு மிதவாத கொள்கையில் ஈடுபாடு இல்லை எனினும் சுட்டுக்கொல்வது போன்ற செயல்களை அவர் என்றுமே ஆதரிக்கவில்லை என இதன் மூலம் தெரியவருகிறது .
இதனை நண்பர்கள் மூலம் ஷேர் செய்யுங்கள்.....
அடுத்த தகவல்களுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperror முத்துகிருஷ்ணன்.
Amazon purchase new click here
No comments:
Post a Comment