Sunday, February 10, 2019

முகலாய பேரரசு வீழ்ச்சி: கி.பி1746க்குப்பின் இந்தியா. பாகம்-1


     
 பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
        இன்று முதல் வாரம் ஒரு முறை முகலாய பேரரசின் வீழ்ச்சி கிபி 1746 க்குப்பின் இந்தியா என்ற தலைப்பில் வாராவாரம் எழுத உள்ளேன்.
          முகலாய பேரரசு வீழ்ந்த பின் ஐரோப்பியர்களின் எழுச்சி இந்தியாவில் ஏற்பட்ட வரலாறு தொடர்ந்து காண்போம்.
       கிபி1526 இந்தியாவின் மீது பாபர் படையெடுப்பு நடத்தி முகலாயர் ஆட்சியை நிறுவினார்.
        அப்போது இருந்த இந்திய அரசர்கள் ஒற்றுமை இன்றி தங்களது நாட்டை விரிவுபடுத்துவதற்காக தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தனர்.
         இதனால் அவர்களுக்கு அவர்களே எதிரிகளாக தங்கள் நாட்டை இழந்தும், பின்னர் இழந்த நாட்டை மீண்டும் ஆண்டுவந்தனர்.
       அப்பொழுது அவர்கள் காலாட்படை குதிரைப்படை யானைப்படையையே தனது ராணுவ வலிமையாக எண்ணி ஆண்டுவந்தனர்.
        தங்களுக்குள் போரிடும் போது போர் தர்மபடியே போரிட்டு வந்தனர்.  போர் தொடங்கினால் மாலை சூரிய மறைவுக்குப்  பிறகு போர் நிறுத்தப்படும். வீரர்கள் பாசறையில் தங்கி மது மயக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.
        மீண்டும் காலையில் போர் தொடங்கும். இப்படித்தான் இந்திய அரசர்கள் இடையே  போரிடும் முறை தொன்று தொட்டு இருந்து வந்தது.
          ஆனால் இந்தியாவைத் தாண்டி வணிகம், கலை தவிர இராணுவ தொடர்பின்றி ஆண்டு வந்தனர்.
         கிபி1526 இந்தியாவில் போரிட வந்த பாபர் இந்த  போர் முறைஎல்லாம் கடைபிடிக்கவில்லை.
          கிபி1526 ல் இப்ராகிம் லோடிக்கும் பாபருக்கும் பானிப்பட்டு எனுமிடத்தில் போர் மூண்டது. இதுவே முதலாம் பானிபட் போர் என உலக வரலாற்றில் இடம்பெற்றது.
         இப்ராஹிம் லோடியிடம் ஒரு லட்சம் பேர் கொண்ட படை இருந்தது. ஆயிரம் போர் யானைகள் இருந்தன.
        ஆனால் பாபரிடம் 24000 போர்வீரர்கள் தான் இருந்தனர் . இருப்பினும்  24ஆம் தேதி ஏப்ரல் 1526 இல் காலை தொடங்கிய போர் நடு பகலுக்குள் முடிவுற்றது.
        பாபர் வெற்றி பெற்றார். இப்ராஹிம் லோடி வீழ்ந்தார்.
       இது எப்படி நடந்தது?
         பாபரிடம் 24000 போர் வீரர்கள் தான் இருந்தபோதிலும் அவர்களுக்கு வெடிமருந்து அடைத்த பீரங்கியை பயன்படுத்த தெரிந்திருந்தனர்.
        ஆனால் இப்ராகிம் லோடியின் படைகளோ பீரங்கிப்படை பற்றி அறிந்திருக்கவில்லை.
         இப்ராஹிம் லோடியிடம் 100000 படைகள் ஆயிரம் யானைப்படை எதிரே பாபரின் படையினர் 24000 வீரர்கள் இருந்த படை தனது பீரங்கிப் படையை பயன்படுத்தி , எதிரி வீரர்கள் மற்றும் யானைப் படையை சுட ஆரம்பித்தனர்.
        அது வரை பீரங்கி வெடிச் சத்தத்தை கேட்டிராத யானைகள் முன்பு பீரங்கியில் சுட்டதில் வெடிமருந்து சேதாரத்தினால் யானைகள் மிரண்டு ஓடி, தனது படைவீரர்களை அழிக்கத் தொடங்கியது.
        அதனுடைய துவம்சத்தால் படைகள் நடுப்பகுதி முன்பே சிதறி ஓடத் தொடங்கினர்.
         இப்ராகிம் லோடி உள்பட 15000 படைவீரர்கள் மாண்டனர். போர் முடிவுற்றது.
       முகலாயர் ஆட்சி பாபரின் தலைமையில் இந்தியாவில் தொடங்கியது. அதற்குப் பின் ஹுமாயூன் ,அக்பர், ஷாஜகான் என தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய முகலாயர் அரசுகள்  அவுரங்கசீப்பின் ஆட்சிக்குப்பின் வீழ்ச்சியுடன் தொடங்கியது.
         50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அவுரங்கசீப் இரக்கமே காட்டாதவர்.
        சகோதரர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர். ராஜபுத்திரர்களை கொடிய விரோதிகளாக நடத்தினார். இது முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அவுரங்கசீப் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கலைகளை ஆதரிக்கவில்லை.
          இசைக்கலை, ஓவியக்கலை எதையுமே ஆதரிக்கவில்லை. இவரது காலத்தில் இவைகள் பெரும் வீழ்ச்சியுற்றது .
         ராஜபுத்திரர், சீக்கியர் என எதிரிகளை ஏராளமாக கொண்டிருந்தார்.இவர் 50 ஆண்டு ஆட்சிக்குப்பின் காலமானார்.
         இதனால் மீண்டும் சுதேச அரசுகள் தலை தூக்கின.
         கிபி1746கு பின் இந்திய மண்ணில் முகலாய அரசுக்கு மூடுவிழா கண்டது. கிபி 1746 க்கு பின்  இந்திய மண்ணில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் நுழைய ஆரம்பித்தது.
         போர்ச்சுகீசியர் ,டச்சுக்காரர் ,பிரெஞ்சுக்காரர் ,ஆங்கிலேயர் என பலர் வணிக குழுக்களாக நுழைந்து ஆட்சிக் கட்டிலில் அமர முற்பட்டனர்.

        இறுதியில் பிரெஞ்-ஆங்கிலேயரிடையே ஆட்சியை விரிவுபடுத்துவதில் போட்டி ஏற்பட்டது.
       இறுதியில் கிழக்கு இந்திய கம்பெனி யாக நுழைந்த ஆங்கிலேயரின் கையை மேலோங்கியது.


        1746 க்குப்பின் அவர்கள் கைக்கு இந்தியா சேரத் தொடங்கியது.....
       இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் காண்போம் .
       இதனை வரலாற்று நிகழ்வுகளை விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் .
       எங்களது white rose trends Tamil channelஐ subscribe செய்து பாருங்கள்.
        அன்புடன் white rose Emperor முத்துகிருஷ்ணன்.
     
     
   
       



       
     
 
     

         

No comments:

Post a Comment