Wednesday, February 6, 2019

மனுச குடுகுடுப்பைக்காரன்(சிறுகதை) -முத்து கிருஷ்ணன்


   
 பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor ன் வணக்கம்.
        இன்று ஒரு மனசை தொடும் சிறுகதையைப் பற்றி எழுத உள்ளேன்.
         அப்பா.. அம்மா..
         கதவைச் சாத்தம்மா...
         கதவை மட்டும் சாத்தாதேம்மா! ஸ்க்ரீனை  நல்லா இழுத்து விடும்மா!
ஏண்டா?
குடுகுடுப்பைக்காரன் தெருமுனை வரை வந்துட்டான் சீக்கிரம் வாம்மா!

    சரிடா!

மெதுவா பேசம்மா...... சீக்கிரம் போய் மூடு_


இது பாலாஜி குரல்.  பத்தாவது படிக்கிறான்.
(பத்தாவது படிக்கிற பையனுக்கு இந்த பயமா என கேட்கிறீர்களா பகலா இருந்தாலும் பயமா இருக்குது)

"உங்க குடும்பத்துக்கு அது சரியில்லை இது சரி இல்லை எனவும் 3 மாசத்துக்கு பாத்து நடந்துக்கங்க எனவும் பையனுக்கு கண்டம் என குடுகுடுப்பை சொல்லிவிட்டு போய் விடு வான்"

யாரு சின்ன படறது? (மனசு கஷ்டப்படுவத)

மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு கிழட்டு குடுகுடுப்பை இப்படித்தான் குடுகுடுப்பை அடிச்சான்!

இந்த காம்பவுண்டு குள்ள இருக்கிற ஐயா குடும்பத்து உறவுக்கு ஒரு கண்டம் இருக்குது!


காத்து சுத்துது ஜக்கம்மா சொல்லிட்டா!

ஐயா கண்டுக்காம விட்டுடுவாரு', அம்மா நீங்க பார்த்து நடந்துக்கங்க! ஜக்கம்மா சொல்றத காது கொடுத்து கேளுங்க!

காசு பணம் எனக்கு பெருசில்லேமா இட்ட கட்டளை இது! ஜக்கம்மா சொல்றத காது கொடுத்து கேளுங்க! அவ பணிச்சா நான் சொல்றேன்! இது ஜக்கம்மா வாக்கு!! இதுக்கு பரிகாரம் பண்ணுங்க!!!


 துணி கேட்டான்', காசு கேட்டான், ஆனால் பாலாஜி பயப்படவில்லை ஆனால் அவன் அம்மா நடுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள். பையனோ அழுவாச்சி பிடித்து விட்டான்!!

    அந்த குடுகுடுப்பை, அடுத்த வீடு, அடுத்த தெரு போய்விட்டான்.

   ஆனா வீட்டுக்குள்ளே ஒரே களேபரம்

   அவ்வளவுதான்!!

பையனின் ஸ்கூல் ஆட்டோ காரருக்கு , போன் செய்து"பையனுக்கு காய்ச்சல் இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு! இன்று ஆட்டோ வேணாம்_இது ஆத்துக்காரம்மா குரல்.   

     ஹலோ சார் மாது அண்ணன் இல்லீங்களா

     அவர் குளிச்சிட்டு இருக்காரு_இது மாது சம்சாரம்
     சரிங்க நான் முத்து பேசறேன்! இன்னைக்கு எனக்கு தற்செயல் விடுப்பு எழுதி வைங்க ஞாபகமா சொல்லிடுங்க எனக்கு சின்ன வேலை இருக்கு!

   சரிங்கண்ணே!

    அழுது புலம்பினதில்ல பாலாஜி அப்பா, சட்டையை மாட்டிகிட்டு கிளம்பிட்டாரு. 
   எந்த சந்துல இருந்தாலும் கூட்டிகிட்டு வந்துடுறேன் அந்த குடுகுடுப்பைக்காரனை!


   சொன்னபடியே செய்துவிட்டார்! குடுகுடுப்பைக்காரனை கால் மணி நேரத்திலே கூட்டி வந்து விட்டார்.

   பச்சரிசி 2 கிலோ, மஞ்சள் தூள் ஒரு பாக்கெட், 3 பேரோட புது சட்டை, வேட்டி, புது சேலை வேண்டும்! காசு நூத்தி ஒரு ரூபா!

   அனைத்தையும் பரிகாரம் பண்ணி எடுத்துகிட்டு போயிட்டான்
    குடுகுடுப்பைக்காரன் சொன்னதுக்கு 1500 க்கு மேல் செலவு!


     பாலாஜிக்கு மூன்று மாதம் லீவுல, கிரிக்கெட் விளையாட்டு போச்சு! போகச் சொன்னாலும் பாலாஜி போகத் தயாராக இல்லை!

                    *****************
        அப்பா.... அம்மா...... குடுகுடுப்பை பக்கத்து வீட்டு வரை வந்துட்டான்! மெதுவான குரலில் பாலாஜி.

        பயப்படாதடா!_பாலாஜி அப்பா

     ஏம்மா கீரை வாங்கும்போது வெளி கேட்டுக்கு தாள்ப்பாள் போட்டி யாப்பா?
   குடுகுடுப்பை உள்ளே வந்துவிட போறான்_இது பாலாஜி குரல்.
    மெதுவா கேளு!
     குடுகுடுப்பை ஏதேதோ சொன்னாள். பழைய வேகம் இல்லை. பயப்படும்படியாக அந்த கணீர்க் குரல் இல்லை!

  காசு கேட்டுப் பார்த்தான் குடுகுடுப்பை. யாரும் வெளியில் போவதாக இல்லை! மூன்று மாதம் முன் பட்டது போதும்!
                    *******"""*******
அப்பா.... பசிக்குது பால் சாப்பிடலாம் பேக்கரி கடை வரை போகலாம்பா!
    நானும் மளிகை கடையில் சோப்பு வாங்க வேண்டும்-பாலாஜி அம்மா.
   சரி வாங்க பேக்கரிக்கு போயிட்டு தபாலாபீசு வரை சின்ன வேலை இருக்கு-இது பாலாஜி அப்பா.
                     *******************
    அடுத்து இரண்டு தெரு தாண்டி பைக்ல போயிட்டு இருந்தாங்க.
     எதுத்தாப்ல ஒரு வண்டி வந்தாலே ஒரு குப்பை தொட்டி அருகில் பைக்கில் மெதுவாக ஓட்டினார் பாலாஜி அப்பா.
     அப்பா.... அம்மா..... அங்க பாருங்க! குப்பைத் தொட்டிக்கு அருகில் பாருங்க!
     அங்கே....‌
     குடுகுடுப்பைக்காரன் அவன் பெரிய ஆள் இல்லை! குடுகுடுப்பை சிறுவன் கிளிந்த ஆடை, இதை ஒரு கிழிந்த வேட்டி கட்டியிருந்தான்.அந்த குடுகுடுப்பை சிறுவன் கீழே உட்கார்ந்து குப்பையை தடவிக்கொண்டு இருந்தான்! அருகே அந்தக் குடுகுடுப்பை கீழே வைக்கப்பட்டிருந்தது!
    வண்டி நிறுத்துப்பா-இது பாலாஜி.
    பாலாஜி பயப்படலை! வண்டியை நிறுத்தி அந்த குடுகுடுப்பை சிறுவன் பிரித்து கீழே வைத்திருந்ததை பார்த்தார்கள்.
     அங்கே.....
      சார்ப்பனரால் சீவிய,  ஒரு விரல் அளவுள்ள குறைந்த நான்கைந்து காகித பென்சில்கள்! உடைந்த  சாக்பீஸ் கள்!!  சிலேட்டு பென்சில்கள்!!!
     ஒரு அட்டை கிழிந்த நான்கு ஐந்தாவது வகுப்பு தமிழ் புத்தகம்!
     பாலாஜி அழுதே விட்டான்!
     தம்பி படிச்சிருக்கியா? பாலாஜி அப்பாவின் குரல்.
     குடுகுடுப்பை சிறுவன் கையை மூடிக்கிட்டு வெட்கத்தோடு சிரிக்கிறான்!
     மூணாவது படிச்சேன்! அப்பா காலமாகிவிட்டார்!! அம்மாவுக்கும் எனக்கும்  வவுத்துக்கு வேணும்னு எங்க தொழிலை அம்மா செய்யச் சொன்னாங்க!!!
     காசும் யாரும் போட மாட்டேங்குறாங்க! குடுகுடுப்பை சப்தத்தை கேட்டாலே கதவை சாத்திக்கிறாங்க!! வயிறு பசிக்குது! களைப்பானதாலே, நிழலில் உட்கார்ந்து உள்ளேன் ....காசு கொடுங்க சாமீ!!
   இதற்கு மேல் இந்த பாலாஜி குடும்பத்தால் அழுகையை அடக்க முடியாம அழுதுட்டுடாங்க!
    குடுகுடுப்பை சிறுவனைக் கூட்டிச் சென்று புது சட்டை, முழுக்கால் சட்டை எடுத்துக் கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்து அவன் ஆசைப்பட்ட பென்சில், பேனா, வாங்கிக் கொடுத்து காசு கொடுத்து அனுப்பி வைச்சாங்க!
    குடுகுடுப்பை சிறுவன்,பாலாஜியை பார்த்து டாட்டா காட்டி சிரித்துக்கொண்டே , அவன் ஊருக்கு கிளம்பினான்............!..
     இப்போதெல்லாம் பாலாஜி குடுகுடுப்பை சத்தத்தை கேட்டு கதவு சாத்துவதில்லை! மனசிலேயே உள்ளான்!! அந்த குடுகுடுப்பை சிறுவன்!!! எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்!.........
 
     

   கல்விக்காக ஏங்கும் இதுபோன்ற ஏழைச் சிறுவர்கள் அவர்களுடைய குலத் தொழிலை செய்து கல்வியை தியாகம் செய்த எத்தனையோ சிறுவர்கள் இந்த நாட்டில் உள்ளதை இந்த கதையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்.
        அந்த சிறுகதையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு கல்வியை அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு நேரத்தில் நன்றாகப் படித்து உங்களுடைய வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை..
        முடிந்தவரை நாம் இதுபோன்ற சிறுவர்களை வாழ்க்கையில் சந்திக்கும் போது எந்த வகையிலாவது அவர்கள் கல்விக்கு உதவிட வேண்டும் இதனால் நமது வாழ்க்கையில் ஒரு புண்ணியம் வந்து சேரும்....
          நன்றியுடன் white rose Emperor முத்துக்கிருஷ்ணன்.

          

No comments:

Post a Comment