பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
இன்று தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாள்.
2019-2020 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் நிதி அமைச்சர் o.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.
இதில் பல துறைகளுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் ஹைலைட்டான விஷயம்.
இப்பொழுதுதான் strike சந்தித்துள்ள விஷயமாகும்.
தமிழக கல்வித் துறைக்காக 29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
அதேபோல அரசு ஊழியர்களுக்காக 85,026 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
இதில் தமிழ் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏதாவது நிறைவேறுமா என்ற நிலைமை போக போகத்தான் தெரியும்.
சரி பட்ஜெட்டுக்கு வருவோம்
கீழ்க்கண்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் கோடியில்:
காவல்துறைக்கு 8085 கோடி
சுகாதாரத்துறை 12 ஆயிரத்து 563 கோடி
(இது மக்களின் சுகாதாரம் நலம் சம்பந்தப்பட்ட விஷயம்)
ஊரக வளர்ச்சித்துறை 18273 கோடி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை 62 66 கோடி
சமூகநலத்துறை 53 05 கோடி
உயர்கல்வித்துறை 45 84 கோடி
பிற்பட்டோர் நலத்துறை 59 11 கோடி
விவசாயம் துறை 10 கோடி
ஆதிதிராவிடர் நலத்துறை 482 கோடி
பால் வளம் 258 கோடி
இது ஆவின் பால் சமாச்சாரம் குழந்தைகளின் பால் கட்டண உயர்வு என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும் முக்கிய துறை.
எரிசக்தி துறை 18 161 கோடி
நெடுஞ்சாலைத்துறை 13 605கோடி
இது நமது தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் பணியாற்றிய துறை.
இந்து சமய அறநிலைத்துறை 282 கோடி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை 1171 கோடி.
இது ஏழையின் கைத்தறி நெசவாளர்கள் ஜீவாதாரமான துறை அவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத ரிபேட் மற்றும் அவர்கள் வளர்ச்சிக்கான தொகை ஒதுக்கீடு.
Rebate ஒதுக்கீடு இல்லையேல் கைத்தறி நெசவாளர்கள் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஒதுக்கீடு மிக அவசியம்.
தீயணைப்பு துறை 404 கோடி
உணவு மானியம் 6000 கோடி
பொது வினியோகம் 334 கோடி
ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மானியம் சம்மந்தப்பட்டது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஒதுக்கீடு விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக தான் நடந்து கொள்வார்கள். கொஞ்சம் அசந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடிய துறை. மக்களின் ஓட்டை நிர்ணயிக்கிற துறை ஆகும்.
தூய்மை இந்தியா 400 கோடி இது மத்திய அரசோடு
இணைந்து செயல்படும் திட்டம்.
ஊரக வேலைவாய்ப்புத் துறை க்கு மாநில அரசின் பங்கு 250 கோடி
கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு 231 கோடி
இதுவும் அரசுக்கு ஓட்டை வாரி வழங்கும் துறை ஆகும்.
பயிர்க் கடன் வழங்க பத்தாயிரம் கோடி.
இது விவசாயிகளின் உயிர் வாழும் ஜீவாதார பிரச்சினை.
ஏனென்றால் நம் தமிழகம் தொடர்ந்து பல புயல்களையும், கடும் மழைளையும்
கடும் வறட்சியையும் மாறி மாறி சந்தித்து வருகின்றன.
எனவே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது மிக மிக அத்தியாவசியமானது.
திருமண உதவி திட்டம் 721 கோடி.
இது தாலிக்கு தங்கம் ஆட்சிக்கு மகளிர் ஓட்டுக்களை ஆட்சியாளரின் பக்கம் திருப்பும்.
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்தொகை திட்டம் 959 கோடி
ஏழைத் தாய்மார்களின் குழந்தை பிறப்பிற்காக அரசு மருத்துவமனை யுடன் இணைந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் .
கஜா புயலுக்கு மாற்று வீடுகள் கட்டித்தர ஒதுக்கீடு 1700 கோடி
இந்த கஜா புயலை இந்த தமிழகம் மறக்க முடியாது மறைக்கவும் முடியாது.
அரவக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம்.
இது தமிழக அரசின் தேர்தல் முக்கியமான தொகுதி
திட்டமாகும்.
இந்தத் திட்டம் தமிழக அரசுக்கு ஓட்டுகளை வாங்கித் தரும் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்
இந்த 2019- 2020 பட்ஜெட்டில் அரசு வருவாய்1,97,721 கோடி.
அரசின் செலவு 2,12,035 கோடி.
வருவாய் பற்றாக்குறை14,314 கோடி
நிதிப்பற்றாக்குறை44,176 கோடி ஆகும்.
இதனை ஆளுங்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் பாராட்டிப் பேசுகின்றனர்.
எதிர் கட்சிகள் குறை எனக் கூறுகின்றனர்.
நமது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இது உதவாக்கரை பட்ஜெட் ஏட்டுச்சுரைக்காய் என்கிறார்.
அதற்கு பதிலடியாக அமைச்சர் ஜெயக்குமார் இந்த பட்ஜெட்டை நாட்டு சுரக்காய் என்கிறார்.
எப்படியோ நமக்கு சாப்பாட்டுக்கு உதவுகிற பட்ஜெட்டாக அமைவதே சாலச் சிறந்தது.
இதுதான் இந்திய ஜனநாயகம்.
எங்களது படைப்புகளை YouTubeல் white rose trends Tamil channelல் பாருங்கள். இதை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
அடுத்த பதிவுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.
No comments:
Post a Comment