Friday, February 15, 2019

Samsung m20 Galaxy phone coming soon 19 Feb 2019 சாம்சங் m20 low price ஸ்மார்ட் போன்.


Samsung brand m series smartphone coming soon
சாம்சங் எம் பிரிவு ஸ்மார்ட் போன் கூடிய விரைவில் வருகிறது.
19 பிப்ரவரி 2019 12 மணி அளவில் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகிறது விற்பனைக்கு வருகிறது.
19 February 2019 12 night smartphone on sale.
மற்ற மொபைல்களை விட மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது இதனை அனைவரும் தவறவிட வேண்டாம்.
இதனில் உள்ள சிறப்பம்சங்கள் என்னவென்றால் மற்ற மொபைல்களை ஒப்பிடுகையில் மிகச் சிறந்த கேமரா பிக்சல் அதாவது மிகத் தெளிவான மிகத் தெளிவான சிறந்த புகைப்படங்களை எடுக்க முடியும்.
இந்த மொபைலின் விலை ₹10,990 மற்றும் ₹12,990.
₹12,990 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் 4gb RAM 64 gb ROM 
புகைப்படங்கள் எடுப்பவர்கள் யூட்யூப் சேனல் வைத்திருப்பவர்கள் மற்றும் போட்டோகிராபி துறையில் இருப்பவர்கள் மிக சிறந்த ஸ்மார்ட்போன் வாங்கும் வேண்டுமென்றால் இது சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும். Ultra wide dual camera 6.3இன்ச் display உள்ளது. Redmi போன்களுக்கு சவால் விடும் வகையில் இந்த சாம்சங் போன் வந்துள்ளது.
10,990 ஸ்மார்ட் போனின் சிறப்பம்சங்கள் 3gb ram 34 gb rom சிறந்த பட்ஜெட் மற்றும் பல சிறப்பம்சங்கள் விளைந்த சாம்சங் போன் இதுவாகும்.
இது மட்டுமல்லாமல் சாம்சங் கம்பெனி ₹7,990; 8,990 மதிப்புள்ள இதே சிறப்பம்சங்கள் உள்ள மேலும் 2 ஸ்மார்ட்போன்கள் எம் சீரிஸில் விட உள்ளனர்.
அதன் சிறப்பம்சங்களை பார்ப்போம்.

M20 Galaxy
கேலக்ஸி series ஸ்மார்ட்போன்களை வாங்க வேண்டும் என்ற பல நாள் கனவு உள்ளவர்கள் நிச்சயமாக இந்தM20 Galaxy வாங்கலாம் இது மிக குறைந்த விலையில் வருகிறது.
13+5MPixal பின்னே 2 கேமராக்கள் உள்ளன. இரவில் மிகக் குறைந்த வெளிச்சத்திலும் மிகச்சிறந்த தெளிவான படங்களை எடுக்க முடியும். இரவில் அனைவருக்கும் மிக பாதுகாப்பாக இருக்கும். செல்ஃபி பிரியர்களுக்காக முன் 5MPixal கேமரா உள்ளது. Face unlock சவுகரியமும் உள்ள மிகப் பாதுகாப்பான ஸ்மார்ட்போன். குறைந்த விலையில் கிடைக்கிறது.
Octa core processor
5,000mah battery உள்ளது
10  நிமிடத்தில் சார்ஜ் ஏறிவிடும்.
இரண்டு நிறங்களில் கிடைக்கிறது.
M10 Galaxy
7,990 and 8,990
Total damage protection RS.699
இந்த இரு ஸ்மார்ட்போன்களுக்கு மொபைல் cover கிடைக்கிறது
3400 mah battery அதேநேரம் பயன்பாட்டு கொண்டுள்ளது அதிகநேரம்
பயன்படுத்திக் கொள்ளலாம்.
இரு வேறுபட்ட நிறங்களில் கிடைக்கிறது அனைவரும் வாங்கலாம்
Dual sim பயன்படுத்திக் கொள்ளலாம்.octa core processor உள்ளது.
குறைந்த பட்ஜெட்டில் வாங்க கூடிய நிறைவான சிறந்த ஸ்மார்ட்போன் ஆகும்.3GB ram 32Gbrom
2GBram 16GB rom
இதில் நீங்கள் 512GB வரை மெமரி கார்டு போட்டுக்கொள்ளலாம்.
பல்லாயிரக்கணக்கான படங்கள் பல மணி நேரம் உள்ள வீடியோக்கள் பல்லாயிரக்கணக்கான பாடல்களை நீங்கள் இதில் சேமித்துக் கொள்ளலாம் எவ்வளவு சிறந்த ஸ்மார்ட் போன் சாம்சங் அறிமுக படுத்தி உள்ளது பார்த்தீர்களா!
13Mp dual camera உள்ளது 8Mp பிரண்ட் கேமரா உள்ளது இரவிலும் மிகச்சிறந்த தெளிவான வெளிச்சம் உள்ள படங்களை எடுத்துக் கொள்ளலாம் இந்த ஸ்மார்ட்போனில் இரவில் தனியே செல்பவர்களுக்கு மிகப் பாதுகாப்பான ஸ்மார்ட்போன்  அனைவரும் வாங்கி பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
குறிப்பு
19 பிப்ரவரி 2019 இல் வெளிவர உள்ள இந்த ஸ்மார்ட்போனின் லிங்குகளை இந்த பிளாகர் பேச்சில் உடனே வெளியிட உள்ளோம் தொடர்ந்து white rose emperor இல்
 இணைந்திருங்கள்
Amazon buying link coming soon in this blog connect with us!

சிறுநீரக பிரச்சினை தீர்க்கும் ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் சிவன் கோவில் பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள white rose trends video வை பார்த்து பாருங்கள் subscribe செய்யுங்கள்


அடுத்து தகவலுடன் சந்திக்கும் வரை உங்களிடம் இருந்து விடை பெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.



Thursday, February 14, 2019

மாற்றங்கள் என்பது தவிர்க்க இயலாததே !


       அன்புள்ள பார்வையாளர்கள் அனைவருக்கும்  white rose emperrotன் வணக்கம்.
        மாற்றங்கள்மனித
வாழ்க்கையில் தவிர்க்க இயலாத ஒன்றே.
         ஆதி மனிதனாக தழை இலை உடுத்தி வாழ்ந்தவர்கள்தான் நாம்.
       இன்றைய கம்யூட்டர் யுகத்தை அடைய பல ஆயிரம் ஆண்டுகளை கடந்து வந்துள்ளோம்.
      பழைய கற்காலம் கடந்து புதிய கற்காலத்தை கடந்து,  பல உலோக காலத்தை கடந்து வந்துள்ளோம்.
       நம் மூதாதையர்கள்வெறும் வேட்டி துண்டை உடுத்தித்தான் வாழ்ந்து முடித்துள்ளனர்.
       ராஜ,ஜமீன்தார் வாழ்க்கை மட்டும்தான் சுகவாழ்க்கையாக. இருந்திருக்கலாம்.
        நம் முன்னோர்கள் நமது வாழ்க்கை முறையை 50 மைல் சுற்றளவில் தான் அமைத்து வாழ்ந்து வந்தனர்.
    தமது விளைபொருட்களை பக்கத்து ஊர் சந்தையில் பண்டமாற்று முறைதான் பண்ட பயன்படுத்தி விற்று வந்தனர்.
       தலைச்சுமையாக தான் தனது பொருட்களைத் தூக்கிச் சென்று வந்தனர்.
         வசதி படைத்தவர்கள் தான் மாட்டு வண்டியை பயன்படுத்தினர். இப்பொழுது கார் வைத்திருப்பது போல.

        பெண் எடுப்பதும் பெண் கொடுப்பதும் சில மைல் அளவிலேயே நடந்து வந்தது.
        கோயில் குளங்களுக்குச் சென்று வருவது நடைபயணமாகவே  சென்று விடுவது வழக்கமாக இருக்கிறது.
       வீட்டில் சொத்துக்களாக ஆடு மாடுகளை தான் வைத்துள்ளனர்.
       வீட்டில் உள்ள பசு மாடுகளை வைத்து தான் அவர்களது வசதி வாய்ப்பு உறுதி செய்யப்பட்டது.
       வீட்டின் தேவையான பொருட்களும் மிக குறைவாகவே இருந்தது.
        இரவு 6 மணி ஆகி விட்டாலே அன்றைய பொழுது
முடிந்ததாக உறங்கச் சென்று விடுவர் . பொழுதுபோக்குகள் இல்லை அதனால குழந்தைகளும் பத்து பதினைந்து பேர் குழந்தைகளாக பெற்று இருந்தனர்.
        கல்வியறிவு குறைவாக இருந்தது. தொடர்புக்கு விழிப்புணர்வு இல்லை.இதனால் வியாதிகள் அதிகமாகி காலரா போன்ற நோய்கள் பரவி பல லட்சக்கணக்கான பேர் இறந்துள்ளதாக வரலாறு கூறுகிறது.
        ஆனால் இன்று  அப்படி இல்லை. 
ராஜராஜ சோழனும் ராஜேந்திர சோழனும் டிவி ,ஃபேன், பைக்குகள் ,கார்கள் பார்க்கவில்லை .
        மாடு கட்டி ஏறு பூட்டி உழுத நாம் இன்று டிராக்டர் வைத்து நிலத்தை உழுகிறோம். அன்று இயந்திரம் மற்றும் இயந்திரஅறுவடை செய்கிறோம் களை எடுக்க இயந்திரம் பயன்படுத்துகிறோம்.
           மாட்டு வண்டி பூட்டி விவசாய பொருட்களை எடுத்துச் செல்கிறோம்டிராக்டரில் பொருட்களை எடுத்து காலை மாலை இரண்டு வேளையும் டிராக்டர் மூலம் எடுத்துச் செல்கிறோம்.
      பாத்தி கட்டி தண்ணீர் பாய்ச்சுவது போய் இப்பொழுது சொட்டுநீர் பாசனம் வந்துவிட்டது.
        வேட்டி போய் ஜுன்ஸ் வந்து மடிசாரும்  போய் சுடிதாரும் வந்து விட்டது .
       மருமகளை சுடிதார் போடாதே என்று சொன்ன மாமியார்கள் தான், தனது பேத்திகள் லெக்கின்ஸ் போட்டு சுற்றுவதை பார்த்து பேசாமல் பார்த்து ரசிக்கிறார்கள். காலம் மாறிவிட்டது .
        இன்றைய பெண்கள் அலுவலகத்திற்கு காரிலேயே போய் மாலை காரிலேயே திரும்பி வருகிறார்கள்.

          நூறு வருடம் முன்பு வயல்களையும் நிலங்களையும் அழித்து தானே சாலைகளும் ரோடுகளும் தொழிற்சாலைகளில் அமைத்தார்கள்.
        இன்றைய தமிழகம் நூறு வருடம் முன்பு இப்படியா இருந்தது. சிலவற்றில் இழந்துதானே பலவற்றை நாம் வசதியாக பெற்றுள்ளோம்.
       இன்றைய விமான நிலையங்கள் பஸ் நிலையங்களும் இதற்கு முன்பு வயல் நிலங்களாக அமைந்திருக்கும்?
         அப்பொழுது இருந்தவர்கள் இதெல்லாம் வேண்டாம் என்று நினைத்திருந்தால் நாம் இப்படியாக வாழ்ந்திருப்போம்?
        அரசு பள்ளிகள் அமைப்பதற்கு பல ஏக்கர் நிலம் இன்று எப்படி வந்திருக்கும்?

        ஊர் பெரியவர்கள் தங்கள் ஊர் குழந்தைகள் கல்வி அறிவு தான் முக்கியமாக நினைத்தார்களே தவிர தங்கள் நிலத்தை இல்லை. அவர்கள் விட்டுக் கொடுத்தார்கள் நாம் அனுபவிக்கிறோம். கல்வி பெற்று பாஸ்போர்ட் பெற்று வெளிநாட்டில் பணியாற்றி வெற்றியோடு சம்பாதித்து ஊரில் வசதியாக வாழ்கிறோமே?
        அன்றைய மக்கள் நம்மை நினைத்து போராடி உயிர் விட்டதால் தானே நாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம்.
       அவர்கள் அன்று இன்று நினைப்பது போல அவர்கள் நினைக்கவில்லையே?
       சில நல்ல விஷயங்களுக்காக விட்டுக்கொடுத்து அரசிடமிருந்து இதைவிட அதிகமாக இழப்பீடு கேட்டுப்பெறலாம் அவர்களும் காலத்திற்கேற்ப சிறிது வளைந்து கொடுத்து இழப்பீடு அதிகமாக வழங்கினால் போராட்டம் என்பது இல்லாமல் அரசு திட்டங்களை சமாளித்துவிடலாம்.
        நல்ல திட்டங்களை வரவேற்று சிலவற்றை விட்டுக் கொடுத்துதான்ஆக வேண்டும். சரியில்லாதது என நினைப்பதை வேண்டுமானால் அரசுக்கு எடுத்துரைக்கலாம் என்பதே சரியானதாக இருக்கும் பெரும்பாலும் பொதுமக்களின் தாழ்மையான கருத்து.
        மற்ற சில வளர்ச்சி அடையாதமாநிலங்களை ஒப்பிடும் போது  தமிழகம் குறைந்தது 50 வருடங்கள் முன்னோக்கி வளர்ச்சியில் தான் உள்ளோம் என்பது அனைவருக்கும் தெரியும்.
       எப்பொழுதுமே விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை.

      இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும்.இதனை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள். நன்றி.
   
   

 
     
     

     
       







     
     
   

     

Wednesday, February 13, 2019

வேதாத்திரி மகரிஷியின் பொன்மொழிகள் : ஒரு பார்வை



        பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperror ன் வணக்கம்.
        அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களைப் பற்றி அறியாதவர்கள் இருக்க முடியாது.
         அறிவுத்திருக்கோயில் எனும் மனவளக்கலை மன்றம் எனும் மனக்கோயிலை திறந்து வைத்தவர்.
           நெசவுத் தொழில் செய்யும் பெற்றோருக்கு எட்டாவது மகனாகப் பிறந்தார். மூன்றாவது வகுப்பு வரை மட்டுமே படித்து நெசவுத் தொழில் செய்து வந்தார்.
          இவர் ஆயுர்வேத மருத்துவரான எஸ். கிருஷ்ணராவ் அவர்களை குருவாகக் கொண்டு தியானம், யோகா போன்றவற்றை கற்று அறிவு திருக்கோயிலை திறந்து நாடு முழுக்க குடும்பவியல், யோகா ,தியானம் பரவ பேருதவி செய்தார்.

      என்ன உடலின் ஒவ்வொரு உறுப்பையும் இணைத்து பெருமைப்பட வைத்து உள்ளத்தில் நினைக்கும் போது அவை ஆரோக்கியமாக செயல்படும் என்பதை உலகுக்கும் நிரூபித்தார்.

         அவர் உறவுகள் மேம்பட... மேலும் குடும்பத்திலும் சரி அலுவலகத்திலும் சரி மனித உறவுகளில் விரிசல்கள் ஏற்படாமல் இருக்கவும் அது மேலும் பெரிதாகாமல் இருக்க எடுத்துரைத்தார்.
        அதனை நாம் கடைப்பிடித்தால் நிம்மதி நம்மை விட்டு விலகாது.
       சரி அதனை பார்ப்போம்.
1. நானே பெரியவன், நானே சிறந்தவன் என்ற அகந்தையை விடுங்கள்:-
     குடும்பத்திலும் கணவன் மனைவி இருவரில் யார் பெரியவர் என்ற எண்ணத்தை விட்டு விட்டால் எல்லோரும் ஒரு நல் வரமே!
2. அர்த்தமில்லாமலும் பின் விளைவு அறியாமலும் பேசிக்கொண்டே இருப்பதை விடுங்கள்:-
      இந்த loose talks பேச்சு பக்கத்து வீட்டில் வசிப்பவர்ளிடமும் ,அலுவலகத்திலும் பிறரை'சுருக்'என்று சொல்லும்போது அது அவர்களுடைய மனதில் பஞ்சத்தை வளர்க்கும்.
3. எந்த விஷயத்தையும் பிரச்சினையையும் ,நாசுக்காகக் கையாளுங்கள் ,விட்டுக் கொடுங்கள்:-
  உறவினர்கள் இடையே கூட சொத்து பிரச்சனை, குடும்ப பிரச்சனை யில் 'வெட்டு ஒன்று துண்டு இரண்டு'என பேசாமல் இருதரப்பினரும் உட்கார்ந்து பேசினால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தால் சில நாட்களில் அந்த பிரச்சினை தீரும்.
       அரையடி வரப்புக்காக எவ்வளவு அண்ணன் தம்பிகள் பத்து வருடம் நீதிமன்றத்தில் அலைந்து வரப்போகும் நிலவும் போனதுதான் மிச்சம் என்ற கதையை கேள்விப்பட்டிருப்பீர்கள்...
  4. சில நேரங்களில் சில சங்கடங்களை சந்திக்க வேண்டு:-
      இது விட்டுக்கொடுத்துப் போவது, அதிகாரிகள் கோபப்படும் போது சிறிது விட்டுக் கொடுத்து பணிந்து போவது நலம் தரும்.
5. உண்மை எது.. பொய்யென விசாரிக்காமல்.. அங்கே இங்கே கேட்டதை சொல்வதை விடுங்கள்:-
   இது கோள் மூட்டுதல் போன்ற கெட்ட பழக்கத்தை ஒழிக்கும். எதையும் ஆதாரம் கொண்டு முடிவு எடுக்க வேண்டும்.
6. அளவுக்கதிகமாய் தேவைக்கதிகமாய் ஆசைப்படாதீர்கள்:-
    இது புத்தர் போன்ற மகான்கள் காலத்திலிருந்து நமக்கு சொல்லி வருகின்றனர். எந்த ஆசைக்கும் ஒரு எல்லை நாம ஏற்படுத்தினால் குடும்பத்தில் நிம்மதி நிலவும்.
7. அற்ப விஷயங்களை பெரிதுபடுத்தாதீர்கள்:-
     அவன், அவள் இப்படி சொல்லிவிட்டாரே என்று சின்ன மனஸ்தாபங்களை மனதில் வைத்திருக்காதீர்கள். பேசித் தீர்த்து விடுங்கள்.
8. உங்கள் கருத்துக்களில் உடும்பு பிடியாய் இல்லாமல் கொஞ்சம் தளர்த்திக்கொள்ளுங்கள்:-
     நான் சொல்வதுதான் சரி என முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கு சரி எனப்படுவது அடுத்தவர்களின் பார்வையில் அது தவறாக படலாம். எனவே சீர்தூக்கிப் பார்ப்பது நல்லது.
9. மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் இனிய இதமான சொற்களை பயன்படுத்த தவறாதீர்கள்:-
        அவர் மரியாதை தரவில்லை அதனால் நான் தரவில்லை என்ற நினைப்பை ஒழியுங்கள். முதலில் நாம் மரியாதை கொடுக்கும் போது எதிர்தரப்பில் இருந்து உங்களுக்கு மரியாதை தானே தேடிவரும்.
10. அவ்வப்போது நேரில் சந்தித்து மனம் திறந்து பேசுங்கள்:-
     பிரச்சினை ஏற்படும்போது, போனில், கடிதத்தில் காட்டமாக செயல்படாதீர்கள். நேருக்குநேர் பேசுங்கள். விட்டுக் கொடுப்பவர்கள் எப்பொழுதும் கெட்டுப்போவதில்லை.
      இவைகள் சில துளிகள் தான்.... அவரின் கடல் போன்ற அறிவுரைகளை அவர் ஏற்படுத்திய அறிவுத் திருக்கோயிலுக்கு சென்று அனுபவித்து அனுபவித்து பாருங்களேன்.
       அடுத்த தகவல்கள் சந்திக்கும் வரை white rose Emperor முத்துகிருஷ்ணன்.
   

     



     
       
       
        

இரவு வீதி ரோந்து போலீஸ் என்று புது காவல் பிரிவுஃ


        பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
       இன்று நகர்ப்புற வீடுகள் மற்றும் கிராமப்புறங்களில் கூட வீட்டை உடைத்து திருடுபவர்கள் கூட்டம் அதிகமாகிவிட்டது.
        முன்பெல்லாம் கூட்டுக் குடும்பங்கள் இருந்து வந்தன. தாத்தா பாட்டி என்று பாதுகாப்புடன் குடும்பங்கள் பேரன் பேத்திகள் என வசித்து வந்தனர்.
        இதனால் கணவன் மனைவி குழந்தைகள் தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டு விசேஷங்கள் கோயில்கள் சென்று வரவும் உடல்நிலை சரியில்லாதபோது வெளியூர் மருத்துவமனையில் தங்குதல் போன்று நிகழ்வின்போது பெரியவர்கள் வீட்டை பாதுகாத்துக் கொள்வார்கள். வீடு பூட்டப்பட்டு நிகழ்வே நடக்காது. இதனால் எப்பொழுதும் வீட்டில் யாராவது தங்கியிருப்பார்கள்.
         வீட்டினை பூட்டினால் தானே திருடன் வீட்டின் உள்ளே நுழைவதற்கு?
       ஆனால் இப்பொழுது அப்படி அல்லவே?
        நாம் நமக்கு என்ற எண்ணம் போய் நாங்கள் என் மனைவி மக்கள் என எண்ணம் வந்து திருமணமான மூன்று மாதத்திலேயே தனிக் குடித்தனம் போய் விடுகின்றனர்.
         அரசு வேலை காரணமாக மணமானவர்கள் தனது சொந்த ஊரை விட்டு வெகுதூரம் தள்ளி புதிய இடத்தில் தனிக்குடித்தனம் தங்குகின்றனர்.
        இதனால் நாம் அலுவல் விஷயமாக கோயில் குளம் மருத்துவமனைக்காக சொந்த பந்தங்களை பார்க்கவும் இரவில் வீட்டை பூட்டி செல்வது கட்டாயமாகிறது.
        பகலிலும் கணவன் மனைவி இருவரும் அலுவல் பார்ப்பவர்களாகவும் அவர்களது குழந்தைகளும் பள்ளி செல்வதால் பகலிலும் வீட்டை பூட்ட வேண்டிய சூழ்நிலை நேருகிறது.
       பகலிலும் இரவிலும் நோட்டமிடும் திருடர்கள் பூட்டை உடைத்து வீட்டில் உள்ள முழு நகைகள் சொத்தையும் திருடிச் சென்று விடுகின்றனர்.
        இதனால் நாம் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த சொத்து ஒரே இரவில் திருடு போய்விடுகிறது.
         சரி பாதுகாப்பாய் இருக்கட்டும் என்று வங்கி லாக்கரில் வைக்கலாம் என்றால் அதனுடைய நிலைமையும் தற்பொழுதும் கேள்விக்குறியாக உள்ளது.
        சரி இதற்கு என்னதான் தீர்வு?
         இரவு வீதி ரோந்து போலீஸ் என்று தனி ரோந்து போலீஸ் recruitment தேர்வு செய்யப்பட வேண்டும்.
        காவல், தீயணைப்பு துறை என்பது போல இதுவும் தனி ரோந்து போலீஸ் நிலையம் வேண்டும்.
         இவர்களை தற்போதைய காவல்துறையுடன் கலக்கக்கூடாது.
         தற்போதைய காவல் நிலைய காவலர்களையே இரவு ரோந்துக்கு அனுப்புவது, அவர்களுடைய வேலைப்பளு மன அழுத்தம் தூக்கமின்மை காரணமாக அவர்களால் இரவு ரோந்து முழு திருப்தியாக ஈடுபடாமல் போய்விடுகிறது. அவர்களைக் குற்றம் சொல்வதில் பயனில்லை.
       இரவு ரோந்து போலீஸ் recruitment மூலம் திடகாத்திரமான வாலிபர்களை தேர்வு செய்யலாம். அல்லது ஓய்வுபெற்ற ராணுவ வீரர்களை தேர்வு செய்யலாம்.
      இவர்களைக் கொண்டு அரசானது, டூவீலர் வாகனம் வழங்கி இரவு 11 மணி முதல் விடியற்காலை 5 மணி வரை நகர்ப்புற சிறு நகர்ப்புற சாலைகளிலிருந்து செல்லவும், நகர்புற சந்துகள், வீதிகளில் ரோந்து செல்ல வேண்டும். பூட்டிய வீடுகளில் இருந்தால் ஒரு நிமிஷம் இறங்கி பாதுகாப்பு இருக்கிறதா? என கள ஆய்வு செய்து புறப்பட வேண்டும்.
         இரவில் நடு இரவில் நடமாடும் மற்றும் வாகனங்களில் சந்தேகப்படும் படி சுற்றுகிறர்களை அவர்களின் டூவீலர் பெட்டிகள் சீட்டுக்கடியில் ஏதாவது உள்ளதா என்பதை பரிசோதிக்க வேண்டும்.
         திருடுகிற நோக்கில் ஏதாவது ராடுகள் கத்திகள் வைத்திருக்கிறார்களா? என ஆய்வு செய்ய வேண்டும்.
          இரவில் சிக்குகிறது திருடர்கள் சந்தேக திருடர்களை ரோந்து போலீசார், ரோந்து போலீஸ் காவல் நிலையத்திற்கு தகவல் அனுப்பி உடனடியாக காவல் வாகனம் உடனடியாக வந்து கைது செய்து வந்து காவல் நிலையத்தில் சிறை வைக்கவேண்டும்.
       பொதுமக்கள் திருட்டு நடந்தால் அல்லது திருட்டு நடக்கும் சமயத்தில் உடனடியாக உதவி எண்100, 108 போல இத்துறைக்கும் ஒதுக்கப்பட வேண்டும்.
        வீட்டை விட்டு கோபித்துக் கொண்டு வெளியேறிய பெண்கள் இரவில் பஸ்நிலையத்தில் எங்கு செல்வது என தெரியாமல் தவிப்பர்.
         இவர்களை இனம் கண்டு ரோந்து காவல் பிரிவினர் தலைமை நிலைய
பெண் காவலரை அழைத்து தவிக்கும் அபலைப் பெண்களை இரவில் பெண்கள் காப்பகத்தில் தற்காலிகமாக தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பிறகு சமூக நலத்துறைக்கு தகவல் தெரிவித்தால் அந்தப் பெண்களுக்கு அவர்கள் அரசு உதவிகளை வழங்குவார்கள்.
         இதனால் அந்த பெண்கள் சமூக விரோதிகளின் பார்வையிலிருந்து தப்பிப்பர். அந்த அபலைப் பெண்கள் இரவில் எங்கே செல்வது என தெரியாமல் தற்கொலை செய்யாமல் தடுக்க பேருதவியாக இருக்கும்.
       ரோந்தின்போது பெண் திருடிகள் அகப்பட்டால் அந்த காவல் நிலையத்தில் உள்ள பெண் காவலர்களை வரவழைத்து பெண்களை கைது செய்து காவல் நிலையத்தில் பாதுகாப்பாக வைக்கலாம் அல்லது அரசு காப்பகத்தில் இரவு காவல் வைக்கலாம் . பின் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம்.
        சரி இதற்கு அரசுக்கு கோடிக்கணக்கில் செலவாகும் அல்லவா?
         அரசுக்கு வருவாய் பற்றாக்குறை ஏற்படுமல்லவா? இந்த செலவினை அரசு எப்படி சமாளிப்பது?
         மாநகராட்சி,நகராட்சி , பஞ்சாயத்து சார்பில் ரோந்து காவல் வரி ஆண்டு வாரியாக வீடுகள் மீது வரி வசூலித்து அரசுக் கணக்கில் செலுத்தலாம்.
        வங்கி வணிக நிறுவனங்கள் மீது இரவு காவல் பாதுகாப்பு வரி ஆண்டு வரியாக நிர்ணயம் செய்து வருவாய் ஈட்டலாம்.
       இந்த நல்ல திட்டத்தினை, இந்தியாவிற்கு முன்னோடி மாநிலமாக திகழும் நமது தமிழகத்தில் செயல்படுத்தினால் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படும்.
        இதைக் காணும் அரசு அதிகாரிகள் அரசுக்கு எடுத்துரைத்து செயல்படுத்தினால் மிக நன்றாக இருக்கும்.
        இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும். இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
        எங்களது youtube சேனல் white rose trends Tamil channelனை கண்டுகளியுங்கள்.
         அன்புடன் white rose Emperror முத்துகிருஷ்ணன்.
     
     
     
     
     
     
     
     
     
     






Monday, February 11, 2019

சித்த மருத்துவம்: சிறு மருத்துவ குறிப்புகள்



     
  பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
         தற்போது சிறு மருத்துவ குறிப்புகளைக் காண்போம் .
         அல்சர் உள்ளவர்கள் சாப்பிட வேண்டியது:
           மணத்தக்காளி கீரை:-மணத்தக்காளி கீரை ரசம் வைத்து சாப்பிட வாய்ப்புண் நீங்கும்.
            அகத்திக்கீரை:-
அமாவாசையை முன்னிட்டு அகத்திக்கீரை சாப்பிடவேண்டும் என்பது முன்னோர் வாக்கு. எனவே அன்று உணவில் அகத்திக் கீரை சேர்த்துக் கொள்ளுங்கள்.
             அத்திக்காய்:-
 அத்திக்காய் பிஞ்சு, மிளகாய்வற்றல் ,சீரகம் உ,ப்பு
 சேர்த்து தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து,  வெந்த அத்திப்பிஞ்சு உடன் சேர்த்து தயிருடன் கலந்து சாப்பிட வயிற்று புண் வாய்ப்புண் நீங்கும்.
         பெண்களின் ரத்தப்போக்கு நீங்க:-
சோற்றுக் கற்றாழை சோறு, முருங்கைப்பூ சம அளவு சேர்த்து அரைத்து மோருடன் சாப்பிட்டு வர மாதவிலக்கு ரத்தப்போக்கு இடுப்பு வலி நீங்கும்.
            வெண் புள்ளி மறைய:-
மருதாணி பட்டை எடுத்து அரைத்து, வெண்புள்ளி உள்ள இடத்தில் மேல்பூச்சாக பூசி வர வெண்புள்ளிகள்.
           அல்லது
வில்வ பழம், சந்தனத்தில் அரைத்து வெண் புள்ளியுள்ள இடங்களில் மேல்பூச்சாக பூசி விட வெண்புள்ளி நீங்கும்.
         புற்றுநோய்:-
நித்யகல்யாணி பூ ஐந்து எடுத்து காய்ச்சி வடிகட்டி சீராக பருகிட புண், புற்று நோய்
மற்றும் கட்டிகள் நீங்கும்.
         அல்லது
கலற்ச்சிக்காய் இரண்டு உடைத்து கொட்டையினை காலை மாலை சாப்பிட புற்றுநோய் அறிகுறி நீங்கும்.
சர்வதேச பிரச்சனை:-தொப்பை குறைய:-
வார ஒரு முறை இஞ்சி சட்னியாக்கி சாப்பிடலாம்.
        அல்லது
சுக்கு தனியா சீரகம் கொதிக்க வைத்து வடிகட்டி சீநீராக்கி குடிக்க 48 நாளில் தொப்பை குறையும்.
         பல் கூச்சம் நீங்க:-
பூண்டு நசுக்கி சிறிது உப்பு சேர்த்து பல் ஈறு மீது பூசி பல் கூச்சம் நீங்கும்.
         முக சுருக்கம் ,முகப்பரு நீங்க:-
கோரை கிழங்கு பொடி ,கஸ்தூரி மஞ்சள் பொடி , சந்தன பொடி கலந்து முகத்தில் பூசி வர முகச்சுருக்கம் முகப்பரு நீங்கும்.
        சிறுநீரகBladder தொற்று நீங்க:-
மக்காச்சோளக் கருதில் உள்ள நார் போன்ற(மயிர் போன்றது) எடுத்து, நீ ர், மிளகுத்தூள், உப்பு சேர்த்து காய்ச்சி வடிகட்டி நீரை காலையில் 10 ml பருக சிறுநீரக ப்ளாடர் தொற்று நீங்கும்.
        இது செய்து உங்களுக்கு பிடித்திருக்கும். இதனையும் உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperror முத்துகிருஷ்ணன்.



     

     
   


         

Sunday, February 10, 2019

முகலாய பேரரசு வீழ்ச்சி: கி.பி1746க்குப்பின் இந்தியா. பாகம்-1


     
 பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
        இன்று முதல் வாரம் ஒரு முறை முகலாய பேரரசின் வீழ்ச்சி கிபி 1746 க்குப்பின் இந்தியா என்ற தலைப்பில் வாராவாரம் எழுத உள்ளேன்.
          முகலாய பேரரசு வீழ்ந்த பின் ஐரோப்பியர்களின் எழுச்சி இந்தியாவில் ஏற்பட்ட வரலாறு தொடர்ந்து காண்போம்.
       கிபி1526 இந்தியாவின் மீது பாபர் படையெடுப்பு நடத்தி முகலாயர் ஆட்சியை நிறுவினார்.
        அப்போது இருந்த இந்திய அரசர்கள் ஒற்றுமை இன்றி தங்களது நாட்டை விரிவுபடுத்துவதற்காக தங்களுக்குள்ளேயே போரிட்டுக் கொண்டிருந்தனர்.
         இதனால் அவர்களுக்கு அவர்களே எதிரிகளாக தங்கள் நாட்டை இழந்தும், பின்னர் இழந்த நாட்டை மீண்டும் ஆண்டுவந்தனர்.
       அப்பொழுது அவர்கள் காலாட்படை குதிரைப்படை யானைப்படையையே தனது ராணுவ வலிமையாக எண்ணி ஆண்டுவந்தனர்.
        தங்களுக்குள் போரிடும் போது போர் தர்மபடியே போரிட்டு வந்தனர்.  போர் தொடங்கினால் மாலை சூரிய மறைவுக்குப்  பிறகு போர் நிறுத்தப்படும். வீரர்கள் பாசறையில் தங்கி மது மயக்கத்தில் ஆழ்ந்து விடுவார்கள்.
        மீண்டும் காலையில் போர் தொடங்கும். இப்படித்தான் இந்திய அரசர்கள் இடையே  போரிடும் முறை தொன்று தொட்டு இருந்து வந்தது.
          ஆனால் இந்தியாவைத் தாண்டி வணிகம், கலை தவிர இராணுவ தொடர்பின்றி ஆண்டு வந்தனர்.
         கிபி1526 இந்தியாவில் போரிட வந்த பாபர் இந்த  போர் முறைஎல்லாம் கடைபிடிக்கவில்லை.
          கிபி1526 ல் இப்ராகிம் லோடிக்கும் பாபருக்கும் பானிப்பட்டு எனுமிடத்தில் போர் மூண்டது. இதுவே முதலாம் பானிபட் போர் என உலக வரலாற்றில் இடம்பெற்றது.
         இப்ராஹிம் லோடியிடம் ஒரு லட்சம் பேர் கொண்ட படை இருந்தது. ஆயிரம் போர் யானைகள் இருந்தன.
        ஆனால் பாபரிடம் 24000 போர்வீரர்கள் தான் இருந்தனர் . இருப்பினும்  24ஆம் தேதி ஏப்ரல் 1526 இல் காலை தொடங்கிய போர் நடு பகலுக்குள் முடிவுற்றது.
        பாபர் வெற்றி பெற்றார். இப்ராஹிம் லோடி வீழ்ந்தார்.
       இது எப்படி நடந்தது?
         பாபரிடம் 24000 போர் வீரர்கள் தான் இருந்தபோதிலும் அவர்களுக்கு வெடிமருந்து அடைத்த பீரங்கியை பயன்படுத்த தெரிந்திருந்தனர்.
        ஆனால் இப்ராகிம் லோடியின் படைகளோ பீரங்கிப்படை பற்றி அறிந்திருக்கவில்லை.
         இப்ராஹிம் லோடியிடம் 100000 படைகள் ஆயிரம் யானைப்படை எதிரே பாபரின் படையினர் 24000 வீரர்கள் இருந்த படை தனது பீரங்கிப் படையை பயன்படுத்தி , எதிரி வீரர்கள் மற்றும் யானைப் படையை சுட ஆரம்பித்தனர்.
        அது வரை பீரங்கி வெடிச் சத்தத்தை கேட்டிராத யானைகள் முன்பு பீரங்கியில் சுட்டதில் வெடிமருந்து சேதாரத்தினால் யானைகள் மிரண்டு ஓடி, தனது படைவீரர்களை அழிக்கத் தொடங்கியது.
        அதனுடைய துவம்சத்தால் படைகள் நடுப்பகுதி முன்பே சிதறி ஓடத் தொடங்கினர்.
         இப்ராகிம் லோடி உள்பட 15000 படைவீரர்கள் மாண்டனர். போர் முடிவுற்றது.
       முகலாயர் ஆட்சி பாபரின் தலைமையில் இந்தியாவில் தொடங்கியது. அதற்குப் பின் ஹுமாயூன் ,அக்பர், ஷாஜகான் என தொடர்ந்து வெற்றிக்கொடி நாட்டிய முகலாயர் அரசுகள்  அவுரங்கசீப்பின் ஆட்சிக்குப்பின் வீழ்ச்சியுடன் தொடங்கியது.
         50 ஆண்டுகாலம் ஆட்சி செய்த அவுரங்கசீப் இரக்கமே காட்டாதவர்.
        சகோதரர்களைக் கொன்று ஆட்சிக்கு வந்தவர். ராஜபுத்திரர்களை கொடிய விரோதிகளாக நடத்தினார். இது முகலாயப் பேரரசின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது. அவுரங்கசீப் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் கலைகளை ஆதரிக்கவில்லை.
          இசைக்கலை, ஓவியக்கலை எதையுமே ஆதரிக்கவில்லை. இவரது காலத்தில் இவைகள் பெரும் வீழ்ச்சியுற்றது .
         ராஜபுத்திரர், சீக்கியர் என எதிரிகளை ஏராளமாக கொண்டிருந்தார்.இவர் 50 ஆண்டு ஆட்சிக்குப்பின் காலமானார்.
         இதனால் மீண்டும் சுதேச அரசுகள் தலை தூக்கின.
         கிபி1746கு பின் இந்திய மண்ணில் முகலாய அரசுக்கு மூடுவிழா கண்டது. கிபி 1746 க்கு பின்  இந்திய மண்ணில் ஐரோப்பியர்களின் ஆதிக்கம் நுழைய ஆரம்பித்தது.
         போர்ச்சுகீசியர் ,டச்சுக்காரர் ,பிரெஞ்சுக்காரர் ,ஆங்கிலேயர் என பலர் வணிக குழுக்களாக நுழைந்து ஆட்சிக் கட்டிலில் அமர முற்பட்டனர்.

        இறுதியில் பிரெஞ்-ஆங்கிலேயரிடையே ஆட்சியை விரிவுபடுத்துவதில் போட்டி ஏற்பட்டது.
       இறுதியில் கிழக்கு இந்திய கம்பெனி யாக நுழைந்த ஆங்கிலேயரின் கையை மேலோங்கியது.


        1746 க்குப்பின் அவர்கள் கைக்கு இந்தியா சேரத் தொடங்கியது.....
       இதன் தொடர்ச்சியை அடுத்த வாரம் காண்போம் .
       இதனை வரலாற்று நிகழ்வுகளை விரும்பும் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள் .
       எங்களது white rose trends Tamil channelஐ subscribe செய்து பாருங்கள்.
        அன்புடன் white rose Emperor முத்துகிருஷ்ணன்.
     
     
   
       



       
     
 
     

         

Saturday, February 9, 2019

சோமாலியா நாடு: ஒரு பார்வை உலகத்தின் மூதாதையர்கள் பிறந்த நாடு


        பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
        ஆப்பிரிக்க கண்டத்தில் மிக நீண்ட கடற்கரையை கொண்ட நாடு சோமாலியா நாடாகும்.
         இம்மக்கள் சோமாலிய மொழி பேசுகின்றனர்.
          கிழக்கு ஆப்பிரிக்காவில் ஜிபூட்டி, கென்யா ,ஏமன் நாடுகளை எல்லை நாடுகளாகவும், கிழக்கே இந்திய பெருங்கடலை எல்லையாக கொண்ட நாடாகும்.
           இதன் தலைநகராக மொகடீசு உள்ளது.
            இந்த நாடு இத்தாலியிடமிருந்து ஜூலை 1 , 1960 சுதந்திரம் பெற்று ஆட்சி மாற்றங்களால் உள்நாட்டுப் போராக மாறி இன்று தம் குழந்தைகளை எலும்பும் தோலுமாக உள்ளதை இந்த உலகம் பார்த்து வேதனை அடைகிறது.

           இது2.46 லட்சம் சதுரமைல் பரப்பளவைக் கொண்டது.
            இதன் நாணயமாக சோமாலி ஷில்லாங் உள்ளது.
       இந்த நாடு பீடபூமிகள் சமவெளிகள் மற்றும் மலைப்பகுதிகளை கொண்டுள்ளது. ஒழுங்கற்ற மழை செய்வதால் இது ஒரு வெப்ப நாடாகவே உள்ளது. இந்த நாடு ஆப்பிரிக்காவின் கொம்பு என அழைக்கப்படுகிறது.
         தற்கால மனிதர்களின் மூதாதையர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள்தான் எனவும் வரலாறு கூறுகிறது.
        தற்போது 12 மைல் அகலமுடைய பாப்-எல்-மாண்டேப் நீரிணை (இது செங்கடலில் உள்ளது). 50000 ஆண்டுகளுக்கு முன் ஆழம் குறைவான பகுதியாக இருந்ததால் இப்பகுதியில் வசித்த பழங்கால மக்கள் உலகின் பல பகுதிகளுக்கும் சென்றனர் என கருத்து நிலவுகிறது.
         ஆப்பிரிக்க வம்சாவளியில் ஒரே ஒரு வம்சாவளி பெண் வழித்தோன்றல்களின் மரபணு காப்லோ குரூப் எல்3 மட்டுமே ஆப்பிரிக்காவிற்கு வெளியே காணப்படுகிறது.
         காப்லோ குரூப் எல்3 என்பதிலிருந்து பிரிந்தவையே காப்லோ குரூப் என்,காப்லோ குரூப் எம் ஆகும்.
          இங்கிருந்து வெளியேறிய பழங்கால குழுவினரில் இரண்டில் ஒன்று செங்கடலை தாண்டி இந்தியாவிற்கு வந்ததாக கருதப்படுகிறது.
        மற்றொரு குழு நைல் நதியை கடந்து வடபகுதி சென்று சீனாய் தீபகற்பம் வழியாக ஆசியா வந்து பிறகு ஐரோப்பா கிழக்காசிய சென்று இருக்கலாம் என கருதப்படுகிறது.
             இவர்களின் மரபணு காப்லோ குரூப் என உடையதாக இருக்கலாம் என வரலாற்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
         பழங்கால எகிப்தியர்கள் புண்ட் (கடவுளின் நிலம்) எனக் கருதிய பகுதி வட சோமாலியா சிபூட்டி எரித்தியா சூடான் ஆகியவற்றை கொண்டதாக இருந்திருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்.
          இவர்கள் மதிப்புமிக்க பொருட்களான சாம்பிராணி, குங்கும தூபம்  மற்றும் மசாலா பொருட்களை வழங்குபவர்களாக பழங்கால சோமாலிய கடலோடிகள் திகழ்ந்துள்ளனர்.
       இவர்கள் முதல் நூற்றாண்டு முதல் ஏழாம் நூற்றாண்டு வரை இந்தியாவுடன் வணிக தொடர்பு இருந்து வந்துள்ளனர்.
        1869 இல் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது முதல் தங்கள் நாட்டுக் கப்பல்கள் தங்கு தடையின்றி செல்ல ஏதுவாக அந்த நிலப்பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இருந்தால் நல்லது எனக் கருதி பல நாடுகள் தொடர்ந்து கைப்பற்ற முனைந்தன.

        1890 முதலே இத்தாலி ஆக்கிரமிப்பில் ஈடுபட்டு 1935 வரை இரண்டாம் எத்தியோப்பியா போரில் எரித்திரியா எத்தியோப்பியா சோமாலியா பகுதிகளை கைப்பற்றி இவைகளை காலனி நாடுகளாக வைத்திருந்தது.
        இரண்டாம் உலகப்போரில் முசோலினி தோற்கடிக்கப்பட்ட பிறகு நேச நாடுகள் இங்கிருந்து இத்தாலியர்களை வெளியேற்றியது.
        உலகத்துக்கே தனது மூதாதையர்களை தந்த சோமாலியா உள்ளிட்ட பகுதிகள் இன்று உள்நாட்டுப்போரால் தன் வரலாற்றுப் புகழை இழந்து பசிக்கு ஏங்கும் குழந்தைகளை உலகுக்கு காட்டி தலைகுனிந்து நிற்கிறது.

         உலக புகழ்பெற்ற புகைப்படம் ஒன்று பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்தது.
      அதில், எலும்பும் தோலுமாக ஒரு உயிருள்ள குழந்தை திறந்தவெளியில் அமர்ந்திருப்பது போலவும் அந்த குழந்தையின் சாவை எதிர்பார்த்து ஒரு பிணந்தின்னி கழுகு அந்தக் குழந்தையை பார்த்து உணவுக்காக காத்திருப்பது போலவும் அந்த புகைப்படம் இருந்தது.
        இந்த புகைப்படம் சோமாலியாவின் உள்நாட்டுப் போரால் இன்றைய நிலைமையை படம் பிடித்துக் காட்டுவதாக உள்ளது.
        இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருக்கும்.  இதனை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
        மீண்டும் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperror முத்துகிருஷ்ணன்.

     
         

       

     
   

     
           

Friday, February 8, 2019

தமிழக பட்ஜெட்2019-2020 இன்று தமிழக சட்டசபையில் தாக்கல்


   
பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
        இன்று தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு மறக்க முடியாத நாள்.
         2019-2020 ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் சட்டசபையில் நிதி அமைச்சர் o.பன்னீர்செல்வம் அவர்கள் தாக்கல் செய்தார்.

        இதில் பல துறைகளுக்கு நிதி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
         இதில் ஹைலைட்டான விஷயம்.
          இப்பொழுதுதான் strike சந்தித்துள்ள விஷயமாகும்.
           தமிழக கல்வித் துறைக்காக 29 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
           அதேபோல அரசு ஊழியர்களுக்காக 85,026 கோடியே 85 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
          இதில் தமிழ் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் ஏதாவது நிறைவேறுமா என்ற நிலைமை போக போகத்தான் தெரியும்.
           சரி பட்ஜெட்டுக்கு வருவோம்
கீழ்க்கண்ட துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் கோடியில்:
காவல்துறைக்கு 8085 கோடி
சுகாதாரத்துறை 12 ஆயிரத்து 563 கோடி
(இது மக்களின் சுகாதாரம் நலம் சம்பந்தப்பட்ட விஷயம்)
ஊரக வளர்ச்சித்துறை 18273 கோடி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை 62 66 கோடி
சமூகநலத்துறை 53 05 கோடி
உயர்கல்வித்துறை 45 84 கோடி
பிற்பட்டோர் நலத்துறை 59 11 கோடி
விவசாயம் துறை 10 கோடி
ஆதிதிராவிடர் நலத்துறை 482 கோடி
பால் வளம் 258 கோடி
இது ஆவின் பால் சமாச்சாரம் குழந்தைகளின் பால் கட்டண உயர்வு என எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தும் முக்கிய துறை.
எரிசக்தி துறை 18 161 கோடி
நெடுஞ்சாலைத்துறை 13 605கோடி
இது நமது தமிழக முதல்வர் எடப்பாடி அவர்கள் பணியாற்றிய துறை.
இந்து சமய அறநிலைத்துறை 282 கோடி
கைத்தறி மற்றும் துணிநூல் துறை 1171 கோடி.
இது ஏழையின் கைத்தறி நெசவாளர்கள் ஜீவாதாரமான துறை அவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத ரிபேட் மற்றும் அவர்கள் வளர்ச்சிக்கான தொகை ஒதுக்கீடு.
Rebate ஒதுக்கீடு இல்லையேல் கைத்தறி நெசவாளர்கள் இல்லை என்ற நிலைதான் உள்ளது. ஒதுக்கீடு மிக அவசியம்.
தீயணைப்பு துறை 404 கோடி
உணவு மானியம் 6000 கோடி
பொது வினியோகம் 334 கோடி
ஏழைகளுக்கு வழங்கப்படும் இலவச அரிசி மற்றும் மானியம் சம்மந்தப்பட்டது. எந்த அரசியல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் இந்த ஒதுக்கீடு விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக தான் நடந்து கொள்வார்கள். கொஞ்சம் அசந்தாலும் ஆட்சிக்கு ஆபத்து வரக்கூடிய துறை. மக்களின் ஓட்டை நிர்ணயிக்கிற துறை ஆகும்.

தூய்மை இந்தியா 400 கோடி இது மத்திய அரசோடு
இணைந்து  செயல்படும் திட்டம்.
ஊரக வேலைவாய்ப்புத் துறை க்கு மாநில அரசின் பங்கு 250 கோடி
கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பு 231 கோடி
இதுவும் அரசுக்கு ஓட்டை வாரி வழங்கும் துறை ஆகும்.
பயிர்க் கடன் வழங்க பத்தாயிரம் கோடி.
இது விவசாயிகளின் உயிர் வாழும் ஜீவாதார பிரச்சினை.
ஏனென்றால் நம் தமிழகம் தொடர்ந்து பல புயல்களையும், கடும் மழைளையும்
கடும் வறட்சியையும் மாறி மாறி சந்தித்து வருகின்றன.
         எனவே விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்குவது மிக மிக அத்தியாவசியமானது.
திருமண உதவி திட்டம் 721 கோடி.
இது தாலிக்கு தங்கம் ஆட்சிக்கு மகளிர் ஓட்டுக்களை ஆட்சியாளரின் பக்கம் திருப்பும்.
டாக்டர் முத்துலட்சுமி மகப்பேறு உதவித்தொகை திட்டம் 959 கோடி
ஏழைத் தாய்மார்களின் குழந்தை பிறப்பிற்காக அரசு மருத்துவமனை யுடன் இணைந்து உதவித்தொகை வழங்கும் திட்டம் .
கஜா புயலுக்கு மாற்று வீடுகள் கட்டித்தர ஒதுக்கீடு 1700 கோடி
இந்த கஜா புயலை இந்த தமிழகம் மறக்க முடியாது மறைக்கவும் முடியாது.
அரவக்குறிச்சி கூட்டு குடிநீர் திட்டம்.
இது தமிழக அரசின் தேர்தல் முக்கியமான தொகுதி
திட்டமாகும்.
இந்தத் திட்டம் தமிழக அரசுக்கு ஓட்டுகளை வாங்கித் தரும் என்பதை வருங்காலம் தீர்மானிக்கும்
இந்த 2019- 2020 பட்ஜெட்டில் அரசு வருவாய்1,97,721 கோடி.
அரசின் செலவு 2,12,035 கோடி.
வருவாய் பற்றாக்குறை14,314 கோடி
நிதிப்பற்றாக்குறை44,176 கோடி ஆகும்.

இதனை ஆளுங்கட்சி மற்றும் அதன் ஆதரவாளர்கள் பாராட்டிப் பேசுகின்றனர்.
எதிர் கட்சிகள் குறை எனக் கூறுகின்றனர்.
நமது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் அவர்கள் இது உதவாக்கரை பட்ஜெட் ஏட்டுச்சுரைக்காய் என்கிறார்.
அதற்கு பதிலடியாக அமைச்சர் ஜெயக்குமார் இந்த பட்ஜெட்டை நாட்டு சுரக்காய் என்கிறார்.
எப்படியோ நமக்கு சாப்பாட்டுக்கு உதவுகிற பட்ஜெட்டாக அமைவதே சாலச் சிறந்தது.
இதுதான் இந்திய ஜனநாயகம்.


எங்களது படைப்புகளை YouTubeல் white rose trends Tamil channelல் பாருங்கள். இதை நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
       அடுத்த பதிவுடன் சந்திக்கும் வரை விடை பெறுவது white rose Emperor முத்துகிருஷ்ணன்.

           

Thursday, February 7, 2019

சென்னை குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை கால்கள்

!
     
           பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
         இன்னைக்கு தமிழ்நாடு முழுக்க கடந்த 21ம் தேதி குப்பை கிடங்கில் கிடந்த பெண்ணின் கை கால்கள் பற்றிய தகவல்கள்தான் பெரிய விஷயமாக பேசப்பட்டது.
         அவர் ஒரு துணை நடிகை என அறியப்பட்டது. அந்தப் பெண்ணை அவரது கணவரை துண்டு துண்டாக வெட்டி பல பகுதியில் வீசியது போலீஸார் விசாரணையில் தெரியவந்தது. அந்தப் பெண்ணின் கணவரும் கைது செய்யப்பட்டார்.

         கடந்த 21ம் தேதி பெருங்குடி அருகில் பள்ளிக்கரணை ஒதுக்குப்புறமான இடத்தில் மாநகராட்சி குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. அந்த குப்பைகளில் ஒரு பெண்ணின்
வலது கை மற்றும் கால்கள் இருந்ததை குப்பை கிடங்கு  ஊழியர்கள் கண்டுபிடித்து அவர்களுடைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கவே போலீஸ் வந்து விசாரணையை தொடங்கினர்


         கைப்பற்றப்பட்டு பெண்ணின் வலது கையில் டிராகன் உருவம் பச்சை பச்சை குத்தப்பட்டும், தோல் பட்டையில் சிவன் பார்வதி பச்சை குத்தப்பட்டிருந்தது. இதை வைத்து போலீஸார் விசாரணையைத் தொடங்கியது.
        தமிழகத்தில் காணாமல் போன பெண்களின் விபரத்தை அறிய  முற்பட்டபோது ஒரு சில விபரங்கள் ஒத்துப்போக முற்பட்டது.
          தூத்துக்குடியில் ஒரு பெண்ணின் தாயார்  போலீஸ் நிலையத்தில் தனது பெண்ணை காணவில்லை என புகார் கொடுத்திருந்தார்.
          அந்தப் பெண்ணின் பெயர் சந்தியா என்றும் அவரது கணவர் பாலகிருஷ்ணன் என்பவருடன் சென்னையில் வசித்து வரும் தனது மகள் தற்போது விவாகரத்து பிரச்சினையால் பிரிந்து வாழ்ந்து வருவது தெரியவந்தது.

         கடந்த ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது கணவருடன் சென்னைக்கு சென்ற தனது மகளை தொடர்ந்து பேச வேண்டும் என்றபோது அவரது கணவர் நாங்கள் வெளிநாடுக்கு பாஸ்போர்ட் எடுத்து செல்ல உள்ளோம் அதனால் பேச வேண்டாம் என்று கூறிவிட்டார்.
         இந்த தகவலை அறிந்த போலீசார் சென்னையில் உள்ள அவரது கணவரை அவரது வீட்டில் தொடர்பு கொள்ள முயன்றனர்.

       அவர் ஒரு சினிமா இயக்குனர் என்றும் காதல் இலவசம் என்ற படத்தை இயக்கி உள்ளதும் தெரியவந்தது.
அருகில் விசாரித்தபோது இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பாலகிருஷ்ணன் ஒரு பெண்ணுடன் தங்கி இருந்ததாகவும் அவர் தனது மனைவி
எனமும் கூறியிருந்த விபரம் தெரியவந்தது.


         ஆனால் அவரைப் பற்றிய விவரத்தை மேலும் அறிய போலீசுக்கு அவர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை.
        இதனால் சந்தேகமடைந்த போலீஸ் தொடர்ந்து விசாரிக்கவே தனது மனைவியை வீட்டில் வைத்து கொன்றுவிட்டதாகவும் அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசி விட்டதாக தெரிவித்தார்.
         ஒரு பகுதியை குப்பை கிடங்கில் போட்டதாகவும் மற்றொரு இடுப்பு உள்ள தொடை வரை உள்ள உடல் பாகத்தை ஈக்காட்டுத்தாங்கல்-ஜாபர்கான்பேட்டை இடையே பாலத்தில் அடியில் போட்டு விட்டதாக தெரிவித்தார்.
        உடனடியாக அங்கு சென்ற போலீசார் அந்த பாகத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பினர்.
         கைதான அந்த பாலகிருஷ்ணன்"18 ஆண்டுகளுக்கு முன் எனக்கும் சந்தியாவுக்கும் திருமணம் நடந்ததாகவும், மாய வர்மன் என்ற மகனும் யோகமுத்ரா என்ற மகளும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

        தனது மனைவி சினிமா ஆசை கொண்டு படத்தில் நடிக்க முற்பட்டு பல ஆண்களுடன் பழகுவது தெரியவந்ததால் அதனால் இருவருக்கும் பிரச்சினை ஏற்பட்டு பிரிந்து விட்டது விசாரணையில் தெரியவந்தது .
       பிரிந்து சென்ற சந்தியா மீண்டும் சென்னைக்கு வந்து விடுதியில் தங்கி சினிமா வாய்ப்பு தேடி வந்தார் இந்த தகவல் அவரது கணவருக்குத் தெரிய வந்ததால் அவருக்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது.
       இதனால் கடந்த 15ம் தேதி சந்தியாவை வீட்டுக்கு அழைத்து வந்து நீ சினிமாவில் நடிக்க வேண்டாம் என கூறி உள்ளார்.
      இதனால் தகராறு ஏற்பட்டுள்ளது சந்தியா இரவில்வெளியே செல்ல முற்பட்டது சுத்தியல் கொண்டு அவரது கணவர் சந்தியாவை தலையில் தாக்கியுள்ளார் .அதனால் சந்தியா இறந்துவிட்டார்.
        அதனால் சந்தியாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி 4 பார்சலாக கோணிப்பையில் போட்டு பல பகுதியில் தூக்கி எறிந்துவிட்டார் .
        இதில் இடது கை கால் பகுதி கிடைத்தது இடுப்புப் பகுதியில் தற்போது கிடைத்துள்ள.
        தலையும் ஒரு கையும் இன்னும் கிடைக்கவில்லை.
        அதை போலீஸ் தொடர்ந்து தேடி வருகிறது.
         முதலில் தனது மனைவி பற்றி எதுவும் தெரியாது எனத் தெரிவித்த அந்த பாலகிருஷ்ணன் அவரது செல்போனை போலீசார் கைப்பற்றி ஆராய்ந்தபோது சந்தியாவின் கையில் பச்சை குத்தப்பட்டு உள்ளது தெரியவந்தது.
        இதனால் அவர் தான் கொலை செய்தது ஒப்புக்கொண்டுள்ளார்.
         பாலகிருஷ்ணன் சைக்கோ போன்ற மன நிலையில் உள்ளவர் என்றும் நடத்தையில் சந்தேகப்பட்டு கொடுமைப் படுத்தி இருக்கிறார் எனத் தெரிய வருகிறது.
        சந்தியாவுக்கு பலதடவை மொட்டை அடித்து சித்திரவதை செய்து உள்ளார் என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
         இந்த பாலகிருஷ்ணன் ஜாபர்கான்பேட்டையில் ரூ 5000 வாடகையில் 20,000 ரூபாய் அட்வான்ஸ் கொடுத்து வசித்து வந்துள்ளார் .அந்த வீட்டுக்கு வாடகை கொடுக்க முடியாமல் அட்வான்ஸ் கழித்து வருவதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

        இப்படி கோபத்தில் செய்யும் காரியங்கள் கொலையில் முடிவது சென்னையில் தொடர்ந்து நடந்து வருவது தெரிய வருகிறது.
மீண்டும் அடுத்த தகவலுடன் சந்திக்கிறேன். 
        அனைத்து பார்வையாளர்களும் எங்களது white rose trends Tamil channelயையும் தொடர்ந்து பாருங்கள்.
         நன்றியுடன் white rose Emperor முத்துகிருஷ்ணன்.
       

Wednesday, February 6, 2019

மனுச குடுகுடுப்பைக்காரன்(சிறுகதை) -முத்து கிருஷ்ணன்


   
 பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperor ன் வணக்கம்.
        இன்று ஒரு மனசை தொடும் சிறுகதையைப் பற்றி எழுத உள்ளேன்.
         அப்பா.. அம்மா..
         கதவைச் சாத்தம்மா...
         கதவை மட்டும் சாத்தாதேம்மா! ஸ்க்ரீனை  நல்லா இழுத்து விடும்மா!
ஏண்டா?
குடுகுடுப்பைக்காரன் தெருமுனை வரை வந்துட்டான் சீக்கிரம் வாம்மா!

    சரிடா!

மெதுவா பேசம்மா...... சீக்கிரம் போய் மூடு_


இது பாலாஜி குரல்.  பத்தாவது படிக்கிறான்.
(பத்தாவது படிக்கிற பையனுக்கு இந்த பயமா என கேட்கிறீர்களா பகலா இருந்தாலும் பயமா இருக்குது)

"உங்க குடும்பத்துக்கு அது சரியில்லை இது சரி இல்லை எனவும் 3 மாசத்துக்கு பாத்து நடந்துக்கங்க எனவும் பையனுக்கு கண்டம் என குடுகுடுப்பை சொல்லிவிட்டு போய் விடு வான்"

யாரு சின்ன படறது? (மனசு கஷ்டப்படுவத)

மூணு மாசத்துக்கு முன்னாடி ஒரு கிழட்டு குடுகுடுப்பை இப்படித்தான் குடுகுடுப்பை அடிச்சான்!

இந்த காம்பவுண்டு குள்ள இருக்கிற ஐயா குடும்பத்து உறவுக்கு ஒரு கண்டம் இருக்குது!


காத்து சுத்துது ஜக்கம்மா சொல்லிட்டா!

ஐயா கண்டுக்காம விட்டுடுவாரு', அம்மா நீங்க பார்த்து நடந்துக்கங்க! ஜக்கம்மா சொல்றத காது கொடுத்து கேளுங்க!

காசு பணம் எனக்கு பெருசில்லேமா இட்ட கட்டளை இது! ஜக்கம்மா சொல்றத காது கொடுத்து கேளுங்க! அவ பணிச்சா நான் சொல்றேன்! இது ஜக்கம்மா வாக்கு!! இதுக்கு பரிகாரம் பண்ணுங்க!!!


 துணி கேட்டான்', காசு கேட்டான், ஆனால் பாலாஜி பயப்படவில்லை ஆனால் அவன் அம்மா நடுங்கி அழ ஆரம்பித்துவிட்டாள். பையனோ அழுவாச்சி பிடித்து விட்டான்!!

    அந்த குடுகுடுப்பை, அடுத்த வீடு, அடுத்த தெரு போய்விட்டான்.

   ஆனா வீட்டுக்குள்ளே ஒரே களேபரம்

   அவ்வளவுதான்!!

பையனின் ஸ்கூல் ஆட்டோ காரருக்கு , போன் செய்து"பையனுக்கு காய்ச்சல் இன்னைக்கு ஸ்கூலுக்கு லீவு! இன்று ஆட்டோ வேணாம்_இது ஆத்துக்காரம்மா குரல்.   

     ஹலோ சார் மாது அண்ணன் இல்லீங்களா

     அவர் குளிச்சிட்டு இருக்காரு_இது மாது சம்சாரம்
     சரிங்க நான் முத்து பேசறேன்! இன்னைக்கு எனக்கு தற்செயல் விடுப்பு எழுதி வைங்க ஞாபகமா சொல்லிடுங்க எனக்கு சின்ன வேலை இருக்கு!

   சரிங்கண்ணே!

    அழுது புலம்பினதில்ல பாலாஜி அப்பா, சட்டையை மாட்டிகிட்டு கிளம்பிட்டாரு. 
   எந்த சந்துல இருந்தாலும் கூட்டிகிட்டு வந்துடுறேன் அந்த குடுகுடுப்பைக்காரனை!


   சொன்னபடியே செய்துவிட்டார்! குடுகுடுப்பைக்காரனை கால் மணி நேரத்திலே கூட்டி வந்து விட்டார்.

   பச்சரிசி 2 கிலோ, மஞ்சள் தூள் ஒரு பாக்கெட், 3 பேரோட புது சட்டை, வேட்டி, புது சேலை வேண்டும்! காசு நூத்தி ஒரு ரூபா!

   அனைத்தையும் பரிகாரம் பண்ணி எடுத்துகிட்டு போயிட்டான்
    குடுகுடுப்பைக்காரன் சொன்னதுக்கு 1500 க்கு மேல் செலவு!


     பாலாஜிக்கு மூன்று மாதம் லீவுல, கிரிக்கெட் விளையாட்டு போச்சு! போகச் சொன்னாலும் பாலாஜி போகத் தயாராக இல்லை!

                    *****************
        அப்பா.... அம்மா...... குடுகுடுப்பை பக்கத்து வீட்டு வரை வந்துட்டான்! மெதுவான குரலில் பாலாஜி.

        பயப்படாதடா!_பாலாஜி அப்பா

     ஏம்மா கீரை வாங்கும்போது வெளி கேட்டுக்கு தாள்ப்பாள் போட்டி யாப்பா?
   குடுகுடுப்பை உள்ளே வந்துவிட போறான்_இது பாலாஜி குரல்.
    மெதுவா கேளு!
     குடுகுடுப்பை ஏதேதோ சொன்னாள். பழைய வேகம் இல்லை. பயப்படும்படியாக அந்த கணீர்க் குரல் இல்லை!

  காசு கேட்டுப் பார்த்தான் குடுகுடுப்பை. யாரும் வெளியில் போவதாக இல்லை! மூன்று மாதம் முன் பட்டது போதும்!
                    *******"""*******
அப்பா.... பசிக்குது பால் சாப்பிடலாம் பேக்கரி கடை வரை போகலாம்பா!
    நானும் மளிகை கடையில் சோப்பு வாங்க வேண்டும்-பாலாஜி அம்மா.
   சரி வாங்க பேக்கரிக்கு போயிட்டு தபாலாபீசு வரை சின்ன வேலை இருக்கு-இது பாலாஜி அப்பா.
                     *******************
    அடுத்து இரண்டு தெரு தாண்டி பைக்ல போயிட்டு இருந்தாங்க.
     எதுத்தாப்ல ஒரு வண்டி வந்தாலே ஒரு குப்பை தொட்டி அருகில் பைக்கில் மெதுவாக ஓட்டினார் பாலாஜி அப்பா.
     அப்பா.... அம்மா..... அங்க பாருங்க! குப்பைத் தொட்டிக்கு அருகில் பாருங்க!
     அங்கே....‌
     குடுகுடுப்பைக்காரன் அவன் பெரிய ஆள் இல்லை! குடுகுடுப்பை சிறுவன் கிளிந்த ஆடை, இதை ஒரு கிழிந்த வேட்டி கட்டியிருந்தான்.அந்த குடுகுடுப்பை சிறுவன் கீழே உட்கார்ந்து குப்பையை தடவிக்கொண்டு இருந்தான்! அருகே அந்தக் குடுகுடுப்பை கீழே வைக்கப்பட்டிருந்தது!
    வண்டி நிறுத்துப்பா-இது பாலாஜி.
    பாலாஜி பயப்படலை! வண்டியை நிறுத்தி அந்த குடுகுடுப்பை சிறுவன் பிரித்து கீழே வைத்திருந்ததை பார்த்தார்கள்.
     அங்கே.....
      சார்ப்பனரால் சீவிய,  ஒரு விரல் அளவுள்ள குறைந்த நான்கைந்து காகித பென்சில்கள்! உடைந்த  சாக்பீஸ் கள்!!  சிலேட்டு பென்சில்கள்!!!
     ஒரு அட்டை கிழிந்த நான்கு ஐந்தாவது வகுப்பு தமிழ் புத்தகம்!
     பாலாஜி அழுதே விட்டான்!
     தம்பி படிச்சிருக்கியா? பாலாஜி அப்பாவின் குரல்.
     குடுகுடுப்பை சிறுவன் கையை மூடிக்கிட்டு வெட்கத்தோடு சிரிக்கிறான்!
     மூணாவது படிச்சேன்! அப்பா காலமாகிவிட்டார்!! அம்மாவுக்கும் எனக்கும்  வவுத்துக்கு வேணும்னு எங்க தொழிலை அம்மா செய்யச் சொன்னாங்க!!!
     காசும் யாரும் போட மாட்டேங்குறாங்க! குடுகுடுப்பை சப்தத்தை கேட்டாலே கதவை சாத்திக்கிறாங்க!! வயிறு பசிக்குது! களைப்பானதாலே, நிழலில் உட்கார்ந்து உள்ளேன் ....காசு கொடுங்க சாமீ!!
   இதற்கு மேல் இந்த பாலாஜி குடும்பத்தால் அழுகையை அடக்க முடியாம அழுதுட்டுடாங்க!
    குடுகுடுப்பை சிறுவனைக் கூட்டிச் சென்று புது சட்டை, முழுக்கால் சட்டை எடுத்துக் கொடுத்து சாப்பாடு வாங்கி கொடுத்து அவன் ஆசைப்பட்ட பென்சில், பேனா, வாங்கிக் கொடுத்து காசு கொடுத்து அனுப்பி வைச்சாங்க!
    குடுகுடுப்பை சிறுவன்,பாலாஜியை பார்த்து டாட்டா காட்டி சிரித்துக்கொண்டே , அவன் ஊருக்கு கிளம்பினான்............!..
     இப்போதெல்லாம் பாலாஜி குடுகுடுப்பை சத்தத்தை கேட்டு கதவு சாத்துவதில்லை! மனசிலேயே உள்ளான்!! அந்த குடுகுடுப்பை சிறுவன்!!! எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும்!.........
 
     

   கல்விக்காக ஏங்கும் இதுபோன்ற ஏழைச் சிறுவர்கள் அவர்களுடைய குலத் தொழிலை செய்து கல்வியை தியாகம் செய்த எத்தனையோ சிறுவர்கள் இந்த நாட்டில் உள்ளதை இந்த கதையின் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்.
        அந்த சிறுகதையை ஒரு பாடமாக எடுத்துக்கொண்டு கல்வியை அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு நேரத்தில் நன்றாகப் படித்து உங்களுடைய வாழ்வை வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதே எனது ஆசை..
        முடிந்தவரை நாம் இதுபோன்ற சிறுவர்களை வாழ்க்கையில் சந்திக்கும் போது எந்த வகையிலாவது அவர்கள் கல்விக்கு உதவிட வேண்டும் இதனால் நமது வாழ்க்கையில் ஒரு புண்ணியம் வந்து சேரும்....
          நன்றியுடன் white rose Emperor முத்துக்கிருஷ்ணன்.

          

Tuesday, February 5, 2019

உப்பில்லா உணவும் எங்கள் உப்பிலியப்பனுக்கு அருஞ்சுவை யே!


         பார்வையாளர்கள் அனைவருக்கும் white rose Emperorன் வணக்கம்.
          கும்பகோணத்திலிருந்து ஏழு கிலோமீட்டர் தொலைவில் கும்பகோணம் நகரின் உள்ளேயே கிழக்கே அரசலாற்றில் வடகரையில் அமைந்த கோயில், திருவிண்ணகர் உப்பிலியப்பன் திருக்கோயிலாகும்.

         உப்பு இல்லாத உணவுகளை மனைவி சமைத்தாலும் மனம் கோணாமல் உப்பில்லா உணவு சமையலை ஏற்றுக்கொண்டவர் உப்பிலியப்பன் ஆவார்.

          மிருகண்டு முனிவரின் புதல்வர் மார்க்கண்டேயரின் பூமிதேவி மகளாகப் பிறந்தார்.
          அவளுக்கு திருமண வயதானதும் மாப்பிள்ளை தேடியபோது நம்பெருமாள் வயதான கிழவனாக உருவம் பூண்டு மார்க்கண்டேயரிடம் சென்று பூமி தேவியை பெண் கேட்டார்.
         அதற்கு அவர்"அழகே உருவான எனது சின்னஞ்சிறியவளான எனது மகளை எப்படி வயதான உங்களுக்கு மண முடித்துக் கொடுப்பது? அவளுக்கு சமைக்கவே தெரியாது! அவள் உப்பு போடாமல் சமைத்து விட்டாளல் கோபம் கொண்டு சபித்து விடுவீரே? என்றார்.
          அதற்கு வயதான தோற்றத்தில் வந்த நம்பெருமான்"உப்பில்லாமல் சமைத்தாலும் அதனை நான் விரும்பி ஏற்பேன்"என விடாப்பிடியாக பெண் கேட்டார்.


       இந்த பெரியவர் யார் என வினா கொண்டு இந்த மார்க்கண்டேயன், சிவபெருமானிடம் வேண்ட, சிவபெருமான்"வந்திருப்பது மகாவிஷ்ணு"என சொல்ல பிறகே பெண் கொடுத்தார்.
           அந்த உப்பிலியப்பன் கோவிலுக்கு மார்க்கண்டேயர் ஷேத்திரம், செண்பகவனம், ஆகாச நகரம் என வேறு பெயர்களும் உண்டு.
        இந்தத் திருக்கோயில் கும்பகோணத்தில் திருநாகேஸ்வரம் கோவில் வீதியிலேயே ஒரு வீதி தள்ளி ரோடு மேலேயே உள்ளது.
         மூலவராக உள்ள உப்பிலியப்பனை தரிசிக்கும்போது அவரது உப்பலான கண்ணத்தினை பார்த்துக் கொண்டே இருக்கலாம்... இதனை நேரில் தரிசித்த பக்தர்கள் அனைவரும் உணர்ந்திருப்பர்.

         இங்குள்ள கோபுரம் 50 அடி உயரம் ஐந்து நிலை கொண்டுள்ளது.
           இதனுள்ளே தசாவதார சிற்பங்கள், 108 திவ்யதேச சிற்பங்களை காண கண் கோடி வேண்டும்.
        இவர் சாலிகிராம மாலை அணிந்து கொண்டு காட்சியளிப்பார்.
          லவன வர்ஜிதம் சாமி என் பெயர் பெற்றவர்.
           வேங்கடம் செல்ல முடியாதவர்கள் இவரை தரிசித்தால் அவரை தரிசித்த பலன் கிடைக்கும்.
           எல்லா கோயில்களிலும் குளத்தில் பகலில் மட்டுமே நீராட வேண்டும். இங்குள்ள பகலிராப்பொய்கை எனும் தீர்த்தக்குளத்தில் பகலிலும், இரவிலும் நீராட புண்ணியம் கிடைக்கும்.
         இந்தக் கோவில் உள்ளே நுழைந்ததுமே இங்குள்ள யானை நம்மை தும்பிக்கையை நீட்டி வரவேற்கிறது. அனுமானும் நமக்கு காட்சி தருகிறார் .
        நாமும் நமது குழந்தைகளுக்கும் இங்கு துலாபாரம் வழங்கலாம்.
         இங்கு படைக்கப்படும் நைவேத்தியத்தில் உப்பு இல்லாமல் உப்பிலியப்பனுக்கு படைக்கப்படுகிறது.
          இங்கு வழங்கப்படும் பிரசாதங்களும் உப்பில்லாமல் தயாரிக்கப்படுகிறது.
           உப்பிலியப்பன் தனது கரத்தில் உள்ளங்கையில்" மாம் ஏகம் சரணம் விரஜி"என எழுதப்பட்டிருக்கும். காப்பாற்ற நான் இருக்கேன் என்பது இதன் பொருளாகும்.
     கும்பகோணத்திற்கு ஆன்மீகப்பயணம் மேற்கொள்பவர்கள் தவறாமல் உப்பிலியப்பனை தவறாமல்
தரிசனம் செய்யுங்கள்.
         இந்த விஷயம் உங்களுக்கு பிடித்து இருக்கும். இதனை உங்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
         மீண்டும் சந்திக்கும் வரை white rose Emperor முத்துகிருஷ்ணன்.
 
       

Monday, February 4, 2019

04.02.2019 தை அமாவாசை முன்னோர்களுக்கு படையல்



       இன்று 04.02.2019 விளம்பி வருட தை அமாவாசை நாளாகும்.
         இந்த வருடத்திய தை அமாவாசை திங்கட்கிழமையில் வருகிறது. திங்கள்கிழமையில் வரும் அமாவாசை மிக்க சக்தி வாய்ந்ததாக கருதப்படுகிறது.

          மேலும், திருவோண நட்சத்திரத்தில்  வந்தது தனிச்சிறப்பாகும். இந்த திருவோண நட்சத்திரம் திருமாலுக்கு உகந்தது.
           மாதா மாதம் தனது முன்னோர்களுக்கு பலர் படையில் படைப்பது வழக்கம்.
           ஆனால் வருடத்தில் ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசைகளில் நமது முன்னோர்களுக்கு படைப்பது மிகச் சிறந்தது.
             இந்த தை அமாவாசை நேற்று இரவு 12 .58 முதல் நாளை விடியற்காலை 3.01 வரை தொடர்கிறது.
              இன்று திங்கள் கிழமை காலை முதலே நீர்நிலைகளில் குறிப்பாக ஆற்றில், கடலில் நமது முன்னோர்களுக்கு அடிப்படையில் செய்தனர்.


            நமது முன்னோர்களான பித்ருக்கள் எமதர்மனின் அனுமதி பெற்று உலகத்திற்கு தனது வாரிசுகக்ளை  காண ஆசையுடனும் பசியோடும் வருவதாக சொல்லப்படுகிறது. எனவே இன்று நீர்நிலைகளிலும் பித்ரு படையல் செய்தனர்.
          வீடுகளில் அவர்களுக்கு படையல் வைத்து கும்பிட்டனர். இதனால் அவர்கள் மனம் குளிர்ந்து ஆசி வழங்குகிறார்கள்.
           தமிழகத்தில் ஆறுகள் உள்ள நிலைகளில் குறிப்பாக ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் கும்பகோணம் மகாமகத் தீர்த்தக்குளம் போன்ற நீர்நிலைகளில் பித்ரு படையல் செய்யப்பட்டது.
        அதேபோல கடல்களிலும் குறிப்பாக அக்னி தீர்த்தம் உள்ள ராமேஸ்வரம் திருப்புல்லாணி வேதாரண்யம் கோடியக்கரை பூம்புகார் உள்ளிட்ட இடங்களிலும் பித்ரு படையல் செய்யப்பட்டது.

         கடல்களில் அமாவாசை பௌர்ணமி நாட்களில் மட்டுமே இந்த பூஜை செய்ய வேண்டும். ஆனால் ராமேஸ்வரத்தில் மட்டும் வருடம் முழுவதும் முன்னோர்களுக்கு படையல் செய்யலாம்.


            பலருக்கு முன்னோர்கள் சாபம் மூன்று தலைமுறையாக தொடரும். இதனால் அவர்களது குடும்பங்களில் திருமண தடை, வாரிசு இல்லாத நிலை ,சண்டைகள் தொடர்தல் ,அகாலமரணம் போன்ற வருத்தமான நிகழ்வுகள் வீடுகளில் தொடரும் . இதனால் அவர்கள் இன்று தை அமாவாசையில் படையல் செய்தும் வீடுகளில் அவர்களுக்கு படையல் செய்து வழிபட்டு இதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
            இதனை இன்று பலர் செய்து அவர்களது சாபத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.
              மேலும் தனது பகுதியில் உள்ள பசுக்களுக்கு அகத்திக்கீரை கொடுத்து அந்த பசுக்களின் மூலமும் சாபம் நீங்குகிறது.
               வீடுகளில் படையல் செய்யவும் ஏழைகளுக்கு முடிந்த அளவு தர்மம் செய்தார்கள்.
          மேலும் வீடுகளில் இன்று முன்னோர்களுக்கு படைத்த முதல் உணவை காக்கைகளுக்கு வைத்த பிறகு அவர்கள் சாப்பிட்டனர்.
            இன்று பெண்கள் அம்பாள் கோயிலுக்கு சென்று தங்கள் குறைகளை வேண்டினால் அம்பாளின் பரிபூர்ண ஆசி கிடைக்கும் என்பதால் பல அம்பாள் கோயில்களில் பெண்களின் கூட்டம் அலைமோதியது.
           இந்த விஷயம் உங்களுக்கு பிடித்திருக்கும்.
              இதனை உங்களது நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
               இன்று எங்களது white rose trends Tamil channelல் பாகற்காய் வறுவல்(Indian bitter guord fry) வீடியோ வெளியிடப்பட்டுள்ளது இதனை பார்த்து லைக் செய்யவும்.

             மீண்டும் அடுத்த தகவலுடன் சந்திக்கும் வரை நன்றியுடன்white rose Emperror முத்துக்கிருஷ்ணன்.